Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புரட்சிகள் - தி ஹிந்து ( தமிழ் )

          கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத் திறனோடு மிகவும் புரட்சிகரமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். அத்தகைய புரட்சிகரமான மாற்றங்களை போற்றிப் புகழ வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பயன் அடைந்தவர்களின் கடைமை, அதைப் பொதுமக்களும் தெரிந்துப் போற்றிப் புகழ்ந்திடவே இக்கட்டுரை.

TNTET: ஒரு வருடத்தின் மதிப்பை TET தேர்வில் வெற்றி பெற்ற ஒருவரை கேட்டால் தெரியும்...!

காலத்தின் மதிப்பு:-(

* ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

* ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

         குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தொடக்கக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் சில அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருந்தும், 10 அல்லது அதற்கு குறைவான மாணவ, மாணவிகளே பயிலும் நிலை உள்ளது. இதுபோன்ற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறை சார்ந்த டி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி

           ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

TNTET- பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம் - தினமலர்


         11 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் சம்பத் எச்சரிக்கை:

            தலைமை ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, அரசு பொதுத் தேர்வுகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.கல்வியில் பின் தங்கியுள்ள கடலூர் மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்திட அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நேற்று கடலூரில், செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.  

ஆக.11இல் அனைத்து மாவட்டங்களிலும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்:

    பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 

அரசு பள்ளிகளில் 'சி.பி.ஏ.,' முறையில் கணிதம்

          மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கான கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதில் இடைநிலைக்கல்வியில், பெரும்பாலான மாணவர்கள் தவிப்பாய் தவிக்கும் பாடம் கணிதம். இந்த கணிதப்பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக நடத்துவது குறித்து, பல்வேறு நாடுகளில், இன்றும் ஆய்வு நடந்த வண்ணமே உள்ளது.

Inspire Award filling Hints

Www.inspireawards-dst.gov.in

Take students photos in computer
Students date of birth

மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' -கல்வித்துறை- எச்சரிக்கை

             மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.

உதவி பொறியாளர் பணிக்கு ரேங்க் பட்டியல் வெளியீடு.

       அரசு துறைகளில் உதவி பொறியாளர் (சிவில்) உள்ளிட்ட பதவிகளில் காலியிடங்களை நிரப்பு வதற்காக கடந்த 2.3.2013 அன்று ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வு நடத்தப்பட்டது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?

       அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா?என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

TNPSC:சுருக்கெழுத்தர் பணிக்கு சான்றிதழ்: 21-ல் சரிபார்ப்பு.

          கடந்த 25.8.2013 அன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.அந்த தேர்வின் முடிவின்படி, சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணிக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் ஆகஸ்ட் 21-ம்தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு

           தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம், கைத்தறி, உடற்கல்வி, கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும் இவர்கள் பணி
புரிகின்றனர்.

ஆசிரியர்களே இல்லாமல் எப்படி படிப்பது? - ஜூனியர் விகடன்

        பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டவர்கள் பிரமலை கள்ளர் சமூகத்தினர். இவர்களும் கல்வி, வேலை வாய்ப்பில் சமநிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் கள்ளர் சீரமைப்புத் துறை உருவாக்கப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கிறது என்பதுதான் வேதனை.கள்ளர் சீரமைப்புத் துறை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் 285 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் கஷ்டப்படக் கூடாது என்று, 52 விடுதிகளையும் நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் 37 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாக அரசு சொல்கிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 சதவிகித கள்ளர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவு கேள்விக்குறியாகி வருகிறது.

பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20,000 பேருக்குப் பயிற்சி

         கணிதப் பாடங்களை எளிமையாக கற்பிப்பது தொடர்பாக ஒன்பது, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேருக்கு மாநிலக்  கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
 

அடுத்த வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி மாதம் இரு முறையே இலவசம்

         வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம். 3வது முறை எடுக்கும் போது ரூ.20 செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இமெயிலில் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

          பட்டம் படித்து முடித்து புதிதாக வேலை தேடும் இளைஞர்கள், ஏதோ பொழுது போக்கிற்கு அனுப்புவதுபோல வேலை கேட்டு நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். இது விண்ணப்பித்தவரின் மீது உள்ள நம்பகத்தன்மையைப் பாதிக்கும். இமெயில் அனுப்புவதிலும் நாகரிகம் உண்டு.

Part Time Teachers Salary Hike?

               தமிழக அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு. 5000லிருந்து 7000ஆகிறது.                     

நீதிமன்ற அவமதிப்பு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

          நீதிமன்ற அவமதிப்பு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது  கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர், செப்., 1ம் தேதி ஆஜராக வேண்டும் என,'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகளை மூடுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு!

      அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர்பள்ளிகளை மூடுவது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்குஇலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில்தொடங்குகிறது

         அரசு, அரசு உதவி பெறும் இலவசக் காலணிகள் விநியோகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசக்காலணிகள், புத்தகப் பைகள் ஆகியவை இந்த ஆண்டு முதல் கடுமையான தரப்பரிசோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளன. இவற்றின் தரத்தை தனியார் ஆய்வகங்கள் பரிசோதித்து வந்த நிலையில், முதல்முறையாக இலவசப் பொருள்களின் தரத்தைப் பரிசோதிக்கும்பொறுப்பு மத்திய அரசு நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்

         தமிழகம் முழுவதும் 300 "அம்மா' அமுதம் பல்பொருள் அங்காடிகள்தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 

மத்திய அரசு நிதியில் ஆறு கல்வி திட்டங்கள்

           சட்டசபையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், வீரமணி அறிவித்த புதிய அறிவிப்புகளில், 6 திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தி, அமல்படுத்தப்பட உள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்பும் போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது

           விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது.இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில்அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில்ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி தன்னை சந்தித்தபல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில்அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார்.

அரசு கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணி : ஆக.,20 முதல் விண்ணப்பம்

         அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல், சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்ப வினியோகம், சி.இ. ஓ., அலுவலங்களில் வினியோகிக்கப்படுகிறது.

1,112 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்

        ''கடந்த கல்வி ஆண்டில் உருவான, 1,112 கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பி.இ., துணை கலந்தாய்வு ஆக., 6ம் தேதி நடக்கிறது

           பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,பி.இ., படிப்பில் சேர, வரும், 5ம் தேதி, அண்ணா பல்கலையில், நேரில் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு, ஆக., 6ம் தேதி, துணை கலந்தாய்வு நடக்கிறது.
 

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு புது பாடத்திட்டம்... தாமதம்! 9 ஆண்டுகளாக பழைய புத்தகமே தொடரும் அவலம்

             தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் அமல்படுத்துவதில், கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒன்பது ஆண்டுகளாக, பழைய பாடப் புத்தகங்களே தொடரும் அவலம் காணப்படுகிறது.
 

60,000 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம்

          தொடக்க வேளாண்மை சங்கத்தின், 60,000 பணியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விரிவுபடுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துஉள்ளார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive