Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு!!

      மதுரை:உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின் (ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 
 

வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

          வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள ரூ.2 லட்சம் என்ற வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக நிதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது அரசின் சாதனைகளில் ஒன்றாக வருமான வரி வரம்பு உச்சவரம்பை அறிவிக்க மோடி முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

பொறியியல் கல்லூரி கலந்தாய்வு:மாணவர்களுக்கு பஸ் கட்டண சலுகை

       சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் பங்கேற்க, வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவருடன் உதவியாக வருபவருக்கு, அரசு பஸ்களில், 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு


      மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 6 நாள் வேலை நாளாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், 2015ம் ஆண்டின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பென்ஷன்தாரர்களுக்கு வீட்டிலேயே பென்ஷன்:பிரதமர் மோடி அரசு நடவடிக்கை.


       வயது முதிர்ந்த, நடக்க முடியாத பென்ஷன்தாரர்களுக்கு, அவர்களின் வீட்டிலேயே பென்ஷன் பணத்தை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

பணி ஓய்வு பெறுபவர்களுக்குமத்திய அரசு புது திட்டம்.

       அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும்நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

TRB Special TET Result Now Published


Teachers Recruitment Board  College Road, Chennai-600006
SPECIAL TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES
          

Dated:13-06-2014
Member Secretary

மோடி பயத்தால் முக்கிய திட்டங்களை 24 மணிநேரத்தில் உறுதி செய்த அமைச்சகங்கள்

          பிரதமர் நரேந்திர மோடிக்கு பயந்து அமைச்சக அதிகாரிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்களாம். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி அரசின் தலையாய திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து அந்த திட்டங்கள் குறித்த விளக்க உரைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் தயாரிக்க துவங்கிவிட்டனவாம்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க பட்டினி போராட்டம்

         அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்விக்கான கலந்தாய்வில், சிறப்பு சலுகை வழங்க கோரி, வரும் 17ம் தேதி, 100 பேர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் 109 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

          அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது. தேர்வு பெற்ற, 1,122 பேரில், 109 பேர், தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர். தேனியைச் சேர்ந்த, ஜெயசீலன், தமிழக அளவில், முதலிடம் பெற்று, சாதனை படைத்தார்.

அனிமேஷன் துறையில் அபரிமித வாய்ப்புகள்!

      அதீத தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மீடியா துறையில் ஏற்பட்டுள்ள அபரிமித மாற்றங்கள் ஆகிவற்றால், மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகள் எண்ணற்றவை.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

         பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 

பள்ளிகளுக்கு ஏற்பட்ட செலவுத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் கல்வித்துறை

          அரசு பொதுத் தேர்வுகளின் போது மின்தடையை சமாளிக்க தேர்வு மையங்களில் ஜெனரேட்டர்கள் வசதி செய்த வகையில் பள்ளிகளுக்கு ஏற்பட்ட செலவுத் தொகையை வழங்காமல், கல்வித் துறை இரு ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த பிரதமருக்கு "காட்மா கோரிக்கை

           தனி நபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) கோரிக்கை விடுத்துள்ளது.


ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்

         ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல், மத்திய அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராக, நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக, விவேக்ரே, ரத்தின்ராய், செயலராக, மீனாஅகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.


படிக்காத மாணவர்களை கண்டறியாத ஆசிரியர்கள்அதிகரிக்கும் 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு

             எழுத, படிக்க, உச்சரிக்கத் தெரியாத மாணவர்களை, ஆசிரியர்கள் கண்டறியாததால், 'டிஸ்லெக்ஸியா' குறைபாடு அதிகரித்து வருகிறது.பள்ளிகளில் மாணவர்கள் வார்த்தைகளை எழுத ஆரம்பிக்கும் போது, எழுத்துக்கள் தடுமாற்றம் ஏற்படும். ஆங்கில எழுத்துக்களில் 'பி, கியூ' எழுத்துக்களுக்கு, வித்தியாசம் தெரியாமல் மாற்றி எழுதுவர். 'டி, பி' எழுத்துக்களை தலைகீழாக மாற்றி எழுதுவர். ஒன்றாம் வகுப்பில் மாணவர்களின் இக்குறைபாட்டை ஆசிரியர்கள் கண்டறிய முடியும். மாணவர்களின் நோட்டை திருத்தம் செய்யும் போது, எழுத்துக்களுக்கான வேறுபாட்டை மாணவர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தினால், மாற்றிக் கொள்ள முடியும்.

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு:தமிழகத்தில் 109 பேர் தேர்ச்சி

           அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது. தேர்வு பெற்ற, 1,122 பேரில், 109 பேர், தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர். தேனியைச் சேர்ந்த, ஜெயசீலன், தமிழக அளவில், முதலிடம் பெற்று, சாதனை படைத்தார்.

TC Request Application


Thanks to Mr. STANLEY D, GHS, Gudalore.

பணி நிரவல் நெறிமுறை (2012)

               பட்டதாரி பதவி உயர்வுக்கு பி.எட் உடன் (10+2+3+)முறையில் மட்டுமே வழங்க வேண்டும் இரட்டைப்பட்டம் முறையை எடுத்து கொள்ளகூடாது - பணி நிரவல் நெறிமுறை-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை.

AEEO to High School HM panel

        AEEO to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்க 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு


நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி மாணவர்கள் செல்லக் கூடாது: பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை

        மாணவர்கள், நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி செல்லக் கூடாது என அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு

          மதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.

DSE Transfer Application Online Entry | Proceeding

          பள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு செய்யவும், 11.06.2013 முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின் அறிவுரைகள் / நெறிமுறைகள்


AEEO Seniority List & Transfer, Promotion Regarding

        தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் 1 முதல் 30 வரை உள்ள நடுநிலைப் பள்ளி த.ஆ, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

      தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

வி.ஏ.ஓ.,தேர்வில் வீடியோ பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு

 
          ஜூன் 14 ல் நடைபெறும், வி.ஏ.ஓ., தேர்வில், ஆரம்பம் முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

பலரையும் சிந்திக்க வைக்கும் அபாயம் மிக்க ஜூன் மாதம்!

         தமிழக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு, ஜூன் மாதம் ஒரு முக்கியமான மாதம். பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பட்டப்படிப்பு கற்றுத் தரும் கல்லூரிகள் என, பலரும் அதிக ஆர்வத்துடன் இடம் பிடிக்கும் காலம். தமிழகத்தில் மொத்தம், 561 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
 

பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி

          பிளஸ் 1 பாட புத்தகங்கள் விற்பனைக்கு வராததால் மாணவர்கள் அவதி: 16ம் தேதி வகுப்புகள் துவங்குவதால் 'டென்ஷன்!'

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று, மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம்.

        கடந்த மாதம், 23ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.10.21 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி இருந்தனர்.
 

பணிநிரவல் நடவடிக்கைக்கு, ஆசிரிய பயிற்றுனர்கள் எதிர்ப்பு.

       அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 393 ஆசிரியபயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்யமுடிவு செய்யப்பட்டு உள்ளது.
 

பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு கருணை வேலை

     பணியில் இருக்கும்போது, உயிரிழக்கும் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு,கருணை வேலை -அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive