1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
அரசு அலுவலகங்களின் கோப்புகளை அந்நியர்கள் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
முக்கியம்
மற்றும் ரகசியமானதாகக் கருதப்படும் அரசு அலுவலகங்களின் கோப்புகள் அல்லது
ஆவணங்களை வெளிநபர்கள் அல்லது அந்நியர்கள் பராமரிப்பதற்கு அனுமதிக்கக்
கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழை இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை: பொன். ராதாகிருஷ்ணன் உறுதி
ஏழை
இந்து மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்குவது குறித்து, 2 மாதத்தில் முடிவு
செய்யப்படும், என்று மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன் கூறினார்.
பி.எட், எம்.எட் படிப்பு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை
தனியார்
கல்வியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம்
வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பி.எட்,
எம்.எட் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நேற்று காலை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகள்
மற்றும் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி என 102 மையங்களில் தேர்வு நடந்து
வருகிறது. இதில் 15 மையங்களாக பிரிக்கப்பட்டு 8 பேர் கொண்ட குழுவினர்
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வித்தாளில் எந்தவித
குழப்பமும் இல்லை.
சத்துணவு திட்ட காலி பணியிடங்களில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளரை பணியமர்த்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
சமூக
நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்த படுகிறது. தமிழகம் முழுவதும்
மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் உள்ளன. தற்போது 40 ஆயிரம் சத்துணவு
அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
SSLC Mark Sheet Distribute Date: 12.6.2014
SSLC - மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல்
பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி,
தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி)
பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 'அக்னி நட்சத்திரம்
முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி
திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும்
எதிர்பார்க்கின்றனர். 'பத்தாம் வகுப்பு மாணவர்கள்,
வெயிலால் பாதிக்கக்கூடாது என, பொது தேர்வு
நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றிய தமிழக அரசு,
இப்போது, மவுனம் காப்பது ஏன்?'
என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நாளை உதயமாகும் நிலையில் குழப்பம்
பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால் சிக்கல் நீடிப்பு
நாட்டின், 29வது மாநிலமாக, 'தெலுங்கானா' நாளை உதயமாக உள்ள நிலையில், சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. கிராமங்கள் இணைப்பு, மின்சாரம், நீர் ஆதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இன்னும் முழுத் தீர்வு காணப்படாததால், மாநிலப் பிரிவினைக்குப் பின்னும், இரு மாநிலங்களிடையே சுமூகமான நிலை ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு
கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும்
4ம் தேதி திறக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன்,
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து
கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து
ஜூன் 2ம் தேதி அரசு
பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு
கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி
விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய
கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
Special TET Key Answers (Tentative)
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன...
ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு
ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி
மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்
20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்
TNPTF 12.06.2014 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்பாட்டம்
மாநில அமைப்பின் வேண்டுகோளுக்கினங்க 12.06.2014 திங்கள் மாலை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.
தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை
தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை
மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கல்வி அலுவலர் எச்சரிக்கை
பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கட்டணம்
வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் அய்யண்ணன், கடும் எச்சரிக்கை விடுத்தார்.
புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளி
மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும்
சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி
இயக்குனர் கேட்டு உள்ளார்.
பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்
குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த
நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி
தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடக்கக்கல்வி Promotion & Transfer சார்பான பணிகள் விரைவில் தொடங்கும்.
பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வு பணிகள் தொடங்கும் என இயக்குனர் தகவல்
50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு
50 மாணவர்களும்,
அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்
கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!
டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716,
கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு
6,210,
புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000
ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
தொடக்கக்கல்வி துறையில் பதவு உயர்வு கலந்தாய்வு எப்போது? - ஏக்கம்
தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை அதிர்ச்சி தகவல்
பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை
கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு
தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை
அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள்
வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம்.
அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும்
பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற
தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க
வேண்டும்.
ஓரிரு நாளில் விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்
''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத்
துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர்,
தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு,
80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர்
விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள்,
சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு வருகின்றன.