Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 10 மணிக்கு
வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும்,
எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். அதேபோல், தாங்கள்
பயின்றபள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
TNPSC VAO EXAM :1 லட்சம் பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளன
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 16-ந்தேதி காலை கிராம
நிர்வாக அலுவலர் பதவிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
நீதித்துறை பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவு இணையதளத்தில்
நீதித்துறை பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவு இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மோடியிடம் கலாம் கூறிய 3 முக்கிய அறிவுரை
பிரதமராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு பாரதகுடியரசு முன்னாள் தலைவர்
அப்துல் கலாம் தொலைபேசியில்வாழ்த்து தெரிவித்தார். அப்போது அதனைப்
பொறுமையாகக் கேட்டுக் கொண்ட மோடி, அதனைத் தாம் நிறைவேற்றுவதாக உறுதி
அளித்தார். ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியைப்பெற்று
சாதனை படைக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறிய அப்துல் கலாம்,புதிதாக
அமையவிருக்கும் பா.ஜ.க. அரசு எந்தெந்ததிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும் என்றும் பட்டியலிட்டார்.
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
கோடை
விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்
கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள்
சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: கோடை
விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு
அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை நடக்க
வேண்டியுள்ளது.
தேசியஇளந்திரு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள்தேர்வு
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசியஇளந்திரு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்
திருப்பூர்
மாவட்டத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்த, பட்டியல் தயாரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக
உள்ளனர்.
தேர்வு முடிவால் மன உளைச்சலா'104'ல் ஆலோசனை கிடைக்கும்
தேர்வு
முடிவுகளால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், '104'
மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் கிடைக்கும்.பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. எதிர்பார்த்த மதிப்பெண்
கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள், மன உளைச்சலுக்கு
ஆளாகி, தவறான முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோதும், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன.
ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்
நடுநிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
570 பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு:10 நாளில் வெளியிட அண்ணா பல்கலை திட்டம்
தமிழகத்தில்
உள்ள, 570 பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாடுகளை, தேர்ச்சி சதவீத
அடிப்படையில் வெளியிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது. 2011 முதல்,
2013 வரையிலான, மூன்று ஆண்டு தேர்ச்சி விவரம் வெளியிடப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', நேற்று முன்தினம், அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
சிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: ராஜஸ்தான் அரசு
சிகரெட்
மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என
ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும்
புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என
மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த
2012ல் பரிந்துரை செய்தது. தற்போது இந்த பரிந்துரையை அமல்படுத்த ராஜஸ்தான்
மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான உத்தரவு விரைவில்
வெளியிடப்படவுள்ளது. அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சிகெரெட் பிடிக்க
மாட்டேன், புகையிலை பொருட்கள் எதையும் பயன்படுத்தமாட்டேன் என உறுதிமொழி
அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மின் நிறுவனங்களின் இந்த முடிவை, ஜெய்ப்பூரில்
உள்ள இனயா பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வரவேற்றுள்ளது.
ரூ.260 கோடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள்
தமிழ்நாட்டுப்
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் ரூ.260 கோடியில்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை,
காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள்
அரசுப்
பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு லட்சம்
உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி ஒதுக்கீடு பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள்! மாணவர்கள் அவதி
கல்வி
உரிமை சட்டத்தின் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி ஒதுக்கீடு
பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளதால், சுயநிதி பள்ளி நிர்வாகத்தினரும்,
பெற்றோர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு உடனடி வேலை
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதை விட கலை அறிவியல் படிப்பில் சேர மாணவ–மாணவிகள் ஆர்வம்; ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு உடனடி வேலை
நாமக்கல் பள்ளிகளின் நடைமுறைகள்
பத்தாம்
வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள்
எவ்வளவு மார்க் எடுப்பார்களோ? அவர்களை எந்தப்பள்ளியில் பிளஸ் 2 சேர்க்க
போகிறோ மோ? என கணக்குகள் போட்ட படியேஇருப்பர் பெற்றோர். சமீபத்தில் வெளியான
பிளஸ் 2 முடிவுகளை ஒப்பிடும் போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு களும் 90
விழுக்காடுகளுக்கு மேல் தேர்ச்சியிருக்குமென ஊகிக்க முடிகிறது.
பெற்றோர்களைப் போலவே இந்த முடிவு களை எதிர்பார்த்து நாமக்கல் வாழ் கல்விச்சேவகர்களும், தங்களின் கல்லாவை கணிசமாக நிரப்ப தயாராகி வருகிறார்கள்.
24.05.2014 முதல் 26.05.2014 பணி நிரவல் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம், பணி நிரவல் 24.05.2014 முதல் 26.05.2014 மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு
Mobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா?
Airtel, Aircel, Vodafone, Docomo போன்ற
அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி
இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று
TNTET - Paper 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - RTI Letter
ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்
Know your TNPSC VAO Exam 2014 - Application status
Know your TNPSC VAO Exam 2014 - Application status
கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலவரங்களை (know your VAO application status) TNPSC வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியரை நியமிக்கலாம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு
அரசு
உதவி பெறும் தனியார் பள்ளிக ளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந் துரை
மட்டுமன்றி, பள்ளியில் உள்ள விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் அறிவிப்பு
வெளியிட்டும் ஆசிரியர் களை நியமனம் செய்யலாம் என்று உயர் நீதிமன்றக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
CPS திட்டத்தை GPF ஆக மாற்றக் கோரி முதல்வருக்கு வேண்டுகோள்
2003-2006-ல் நியமிக்கப்பட்ட தொகுப்புதிய ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்தும், CPS திட்டத்தை GPF ஆக மாற்றக் கோரி தமிழ்நாடு முன்னாள் தொகுப்பூதிய ஆசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
Special TET Tentative Key Answer Within 2 Weeks
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இன்னும் 2 வாரத்தில் இணையதளத்தில் சரியான விடை வெளியிடப்படும்
ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே பணிபுரியும் அரசு ஊழியர்கள்: விடுமுறையை குறைக்க வழக்கு
அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்கள்
தவிர்த்து, ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டும் பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன்
பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை குறைக்க கோரியும் தாக்கலான வழக்கை, மதுரை
ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு 26 முதல் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல்
கோரி, 26ம் தேதி முதல், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
நாளை காலை 10ம் வகுப்பு "ரிசல்ட்' : 10.38 லட்சம் மாணவர்கள் ஆவல்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. 10.38 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.