தமிழகத்தில்,
நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில்
(டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்
நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத
காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என
போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் நிறுவனம் விரைவில் தேர்வு
பள்ளி மாணவர்களுக்கான, இலவச பஸ் பாஸ்
தயாரிக்கும் நிறுவனம், மூன்று நாட்களில் தேர்வு செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே, பள்ளிகளின் நிர்வாகத்தினர், பஸ் பாஸ் பெறுவதற்கான
விண்ணப்பங்களை, போக்குவரத்துக் கழகங்களில் இருந்து பெற்று செல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 22
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில், ஒன்றாம்
வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, "ஸ்மார்ட் கார்டு' ஆக,
வழங்கப்படும் பஸ் பாசை, இந்தாண்டு, 30 லட்சம் மாணவர்கள் பெறுகின்றனர்.
மதிப்பெண் சான்றிதழில் எழுத்து பிழையா? : தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' உறுதி
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக,
தேர்வுத் துறை வழங்கிய சுற்றறிக்கையை, சரியாக அமல்படுத்தாத தலைமை ஆசிரியர்
மீது, "சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத் துறை நேற்று
தெரிவித்தது.
அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம்
அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக
இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம்
உடைக்கப்பட்டிருக்கிறது.
உதவித்தொகை மோசடி விவகாரம்: தலைமை ஆசிரியர்களிடம் 2 வது நாளாக விசாரணை
சுகாதாரக்குறைவாக தொழில்செய்யும்
பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1750 கல்வி
உதவித்தொகை அளிக்கிறது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வாகம் பள்ளி
தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் பெற்றோரிடம் இந்த உதவித்தொகை
வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கல்வி
உதவித்தொகையில் ரூ.68 லட்சம் முறைகேடு நடந்திருப்பதை அப்போதைய கலெக்டர்
குமரகுருபரன் கண்டுபிடித்தார்.
ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பள்ளியில் வேலைவாய்ப்பு பதிய 4ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடு
தஞ்சையில்,
ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிலேயே, வரும்,
4ம் தேதி வரை, வேலைவாய்ப்பை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள அனைத்து
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது' என, தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை
அலுவலர் கலைச்செல்வன் தெரிவித்தார்.
TNTET -2013: RTI Letter (Maths Subject Regarding)
TNTET -2013: ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்2 இல் கணிதம் முக்கிய பாடத்தில் 82 மற்றும் அதற்க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை -தகவல் பெறும் உரிமை சட்டம் -ஆசிரியர் தேர்வு வாரியம்
Click Here For PDF Format
TNTET -2013: RTI Letter (English Subject Regarding)
நாகப்பட்டிணத்தை சேர்ந்த திரு. வி. பிரபாகரன் அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 குறித்த சில விபரங்களை கேட்டு பெற்றுள்ளார். அந்த விவரங்கள் தங்களுக்காக,
குமரியில் தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ்
குமரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில்
தேர்ச்சி விகிதம் குறைந்ததாக இரணியல், படந்தாலுமூடு மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விரைவிலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்குக்கூட மாணவர்கள் இல்லாத நிலை ஏற்படக்கூடும்?
பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து
கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப்
பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும் குறைந்து கொண்டே வருவதும்
சி.பி.எஸ்.இ. முறையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை மேலதிகமாக அதிகரித்து
வருவதும் தெரியவருகிறது.
கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்திய 15 பள்ளிகளுக்கு நோட்டீசு
திருச்சி
மாவட்டத்தில் 96 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்பட 304 மேல்நிலை பள்ளிகள்
உள்ளன. இம்மாவட்டத்தில் வருடந்தோறும் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள்
பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள்.
ஆசிரியர் கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும்
ஆசிரியர்
கல்வியைத் தனியார்மயமாக்குவது கல்வித் தரத்தை கடுமையாக பாதிக்கும் என்று
கல் விக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி
மேம்பாட்டுக் கூட்டமை ப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
CBSE +2 Result மே 28-க்குள்
மே 28-க்குள் சி.பி.எஸ்.இ.பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
சி.பி.எஸ்.இ.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 28-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சென்னை
மண்டல சி.பி.எஸ்.இ. அலுவலர் டி.சுதர்சன ராவ் கூறினார்.
310 இடங்களுக்கு விரைவில் அனுமதி கிடைக்கும்: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்
தமிழ்நாட்டில்
19 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2555 எம்.பி.பி.எஸ். இடங்கள்
உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
அரசு ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன.
அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்: 5 பேர் 200-க்கு 200 கட் ஆப் மார்க் - 3,000 பேர் 185-க்கு மேல் கட் ஆப்
அரசு
பள்ளிகளில் படித்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் தொழில்கல்வி படிப்புகளில்
சேருவதற்கு 185-க்கு மேல் கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 5
பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
சென்னையில் புதிய மருத்துவக் கல்லூரி: 2015-2016ல் மாணவர் சேர்க்கை
சென்னையில்
மேலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த
கல்லூரியில் 2015-2016ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
தொலைநிலைக் கல்வியால் மாணவர்கள் அடையும் நன்மைகள்
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது
படிப்பில் இலகுத்தன்மையையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் பலருக்கு
கல்லூரிக்கு சென்று வகுப்புகளில் கட்டாயமாக கலந்து கொண்டு படிப்பதற்கும்,
பின்னர் குறிப்பிட்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவதற்கும் விருப்பம்
இல்லை. அவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் வீட்டிலேயே அமர்ந்து படிப்பதையே
விரும்புகின்றனர்.
டிடிஎட் தேர்வுகள் ஜூன் 26ல் தொடக்கம்
தொடக்க கல்வி பட்டய (டிடிஎட்) படிப்பு
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 26ம் தேதியும், முதலாண்டு
மாணவர்களுக்கு ஜூலை 7ம் தேதியும் தொடங்குகிறது. தொடக்க கல்வி பட்டயத்
தேர்வு (டிடிஎட்) ஜூன் 2வது வாரத்தில் நடக்கும் என்று ஏற்கனவே தேர்வுத்துறை
அறிவித்தது.ஜூன் மாதம் மேற்கண்ட தேர்வுகள் நடக்கும் போது டிஎன்பிஎஸ்சி
நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு நடக்க உள்ளது.
அதனால் டிடிஎட் தேர்வு எழுதுவோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், தேர்வுத் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது.
பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிட வேண்டும்
பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியலை 2 வாரத்திற்குள் வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலை.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவப் படிப்பு - 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,
19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம்
போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு
பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.
2014ம் ஆண்டின் பிரபலமான பணிகள் எவை? - ஒரு அலசல்
எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில்,
பணி வாய்ப்புகளும் கூட, தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றங்களுக்கு
ஏற்ப, பெரியளவில் மாற்றமடைந்து வருகின்றன.
இலவச சேர்க்கை மாணவர்களின் விபரத்தை எழுதி வைக்க கலெக்டரிடம் கோரிக்கை
தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து சுயநிதி கல்வி
நிறுவனங்களிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாணைப்படி இலவச
கல்வி வழங்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இலவச கல்வி
சேர்க்கையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விபரம் குறித்து, அனைத்து
பள்ளிகளிலும் வெளிப்படையாக, பலகைகளில் தவறாமல் எழுதி வைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, தஞ்சை கலெக்டர் சுப்பையனிடம், இந்து மக்கள் கட்சி
மாநில செயலாளர் கணேஷ்பாபு மனு அளித்தார்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பட்டப் படிப்பு
![](http://3.bp.blogspot.com/-qfpfsMYtcJ8/U3tZV3J0UPI/AAAAAAAACEI/PVecW_QGBCo/s1600/ias.jpg)
மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய மின் வாரிய இணையதளத்தில் புதிய வசதி
மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய மின் வாரிய இணையதளத்தில் புதிய வசதி: மின் கட்டண குறுஞ்செய்தி திட்டத்தை தொடங்க தீவிர முயற்சி
இரட்டைப்பட்ட வழக்கின் உண்மை நிலை, மூன்று வருட பட்டபடிப்பு சார்பாக வழக்கு தொடுத்தவர்களால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை
மூன்று வருட பட்டபடிப்பு முடித்தவர்களின்
சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கினை நடத்துபவர்களின் கருத்து 09.05.2014
அன்று மேன்மை பொருந்திய உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு
விசாரணைக்கு ஏற்கப்பட்டு அன்றைய தினம் UCG மற்றும் தமிழக அரசுக்கு
நோட்டீஸ் அனுப்ப மாண்புமிகு நீதியரசர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது
மிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் கூடிய புதிய அகன்ற அலைவரிசை
இன்டெர்நெட் சேவையை பிஎஸ்என்எல்அறிமுகப்படுத்தியுள்ளது.
22 ரூபாய் அதிகமாக வசூலித்ததால்,'காஸ்' ஏஜன்சிக்கு, 3,000 ரூபாய், இழப்பீடு தொகை -மாநில நுகர்வோர் கோர்ட்
குறைக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல், 22 ரூபாய் அதிகமாக வசூலித்ததால்,
'காஸ்' ஏஜன்சிக்கு, 3,000 ரூபாய், இழப்பீடு தொகை விதித்து, மாநில நுகர்வோர் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர், சின்னையா.
2009, பிப்., 12ம்தேதி, நெய்வேலி, மந்தாரகுப்பத்தில் இயங்கும்,
'ஸ்ரீவெங்கடேஸ்டவரா காஸ் ஏஜன்சி'யில்,சிலிண்டர் வாங்கினார்.
இன்று ( 21.05.14) பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்
பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த பள்ளிகளில் (
21.05.14) புதன்கிழமை காலை 9 மணியளவில் சான்றிதழ் வழங்கும் பணி
தொடங்கவுள்ளது.அந்தந்த பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மாவட்ட
கல்வித் துறையால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.