1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
தமிழக தலைமை செயலாளர் மாற்றம்..
தமிழக தலைமை செயலாளராக உள்ள ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெறும் நிலையில்,
புதிய தலைமை செயலாளராக மோகன்வர்க்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு
பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 5 நாட்களில் முடிகிறது
"தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின்,
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்" என தேர்வுத்துறை
வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர்
கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை
எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம்
விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது.
தமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி தேர்வுத்துறையிடம், இந்து முன்னணி புகார்
நேற்று முன்தினம் நடந்த, 10ம் வகுப்பு தமிழ்
முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது
குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம்
புகார் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில், ஐந்தாவது கேள்வியாக,
'பகைவனிடமும் அன்பு காட்டு என, கூறிய நுால் எது' என்று கேட்டு, அதற்கு,
'ஆப்ஷன்' விடைகளாக, 'பகவத் கீதை, நன்னுால், பைபிள்' ஆகியவை தரப்பட்டன.
தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: அரசுக்கு இறுதி வாய்ப்பு.
பின் தங்கிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு, கால அவகாசத்தை நீடிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்குபதில் மனுத் தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
மறதி நோயால் மாணவர்கள் பாதிப்பு கூடுதல் நேரம் ஒதுக்கி உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
TET Online Coaching Via Model Tests - Batch 2 Starts From 30.03.2014
TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.
தமிழில் எழுதுவது எப்படி?
முதலில்
கணிப்பொறியில் windows OS(XP,VISTA,WINDOWS 7,WINDOWS 8) உபயோகிப்பவர்கள் கீழ்கண்ட முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.
கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு
கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு
ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின்
போது எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல்
பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு
நஷ்டஈடு வழங்க மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
CPS - குறைபாடுகள்
புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் - சட்டப்பிரிவு 12(5)ன் படி அரசு, ஏற்கனவே மற்ற ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களையும் பு.ப.ஒ.திட்டத்தில் சேர்க்கலாம்
தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?மாவட்ட கல்வி அலுவலர்கள் கேள்வி.
தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா' என, மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள், கேள்வி எழுப்பியுள்ளனர்.
வி.ஏ.ஓ., தேர்வில் பிரிவு ஒதுக்கீட்டில் குளறுபடி: மாற்றுத்திறனாளிகள் தவிப்பு.
அரசு பணி தேர்வாணையத்தால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி.
நேற்று நடந்த, பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாளில், எழுத்துப்பிழை இருந்ததால், மாணவர்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து.
'தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது: தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் மனித உரிமைக்குழு கடிதம்
தேர்தல் பணிகளில் குழந்தைகளைப்
பயன்படுத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் மனித உரிமைக்குழு
கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் தேதிகள் நெருங்கி வருகின்றன.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை; அதிகரிக்க ஆசிரியர்கள் தீவிரம்
அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி
உட்பட கட்டமைப்பு வசதிகளை நோட்டீஸ்களாக வினியோகித்து, மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கும் பணிகளை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில்
குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி
கல்வித்துறை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 2012-2013
கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி முறையினை கொண்டுவந்தது.
இன்றைய கல்வி முறை குறித்து தமிழ் தி ஹிந்து பத்திரிக்கையின் தலையங்கம்
கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக்
கல்விமுறையும்… நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள்
நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும்
கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல்
பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.
டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை
வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால்,
காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி
சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால்,
டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.
TET Court Case Detail
இன்றைய டி.இ.டி வழக்கில் ஆஜராக வேண்டிய அரசு தலைமை வழக்கறிஞர் வரவில்லை என்பதால் வழக்கு மீண்டும் 01.04.2014 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.