Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை ஆசிரியர் தமிழ் ஆசிரியர் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

           முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வாரகாலத்திற்குள் பணிநியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிளஸ் 2, கணித தேர்வு: தவறான கேள்விக்கு 6 மதிப்பெண், தேர்வுத்துறை அறிவிப்பு

            பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
 

பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்விமுறை இல்லை: அவகாசம் இல்லாததால் முடிவு

          பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படாது. தற்போது உள்ள நடைமுறையே, வரும் ஆண்டிலும் தொடரும்' என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருப்போர் ஒரு கோடி பேர்!

            அரசாங்க உத்யோகம் என்பது இளைஞர்களின் கனவு. ஒரு காலத்தில் "பொழப்பத்தவன்தான் போலீஸ் வேலைக்கு போவான், வக்கத்தவன்தான் வாத்தியார் வேலைக்கு போவான்' என்று பழமொழி சொல்வதுண்டு.
 

'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது": தேர்தல் அதிகாரிகள்

           மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அறிவிப்புக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணி.


            கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் 17,18,19 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

15 வயது பூர்த்தியாகாத மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட்டு உத்தரவு

            15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி மாணவரை, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40,000 ஆசிரியர்கள்

 
             இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி, விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

வளாகத் தேர்வு: தமிழ் வழி பி.இ. மாணவர்கள் புறக்கணிப்பு

               அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பி.இ. சிவில் பிரிவு படிக்கும் மாணவர்களை வளாகத் தேர்வுக்கு வந்த எந்தவொரு நிறுவனமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. அதேபோல், மெக்கானிக்கல் பிரிவிலும் ஒரு சில மாணவர்களே பணி நியமனம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலவழி கல்வி சேர்க்கைக்கு 'டார்கெட்!'; விழிபிதுங்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்

            அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 767 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
 

விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவி: ஆசிரியை உதவியுடன் தனி அறையில் தேர்வு எழுதினார்

                விபத்தில் சிக்கிய மாணவி, ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு, ஆசிரியை உதவியுடன், பிளஸ் 2 தேர்வு எழுதினார். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள் ராஜகுமாரி, 17. நேற்று காலை, பிளஸ் 2 தேர்வு எழுத, ஆட்டோவில் சென்ற போது, குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க முயன்றதில், ஆட்டோ கவிழ்ந்தது.
 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் துவக்கம்

               பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, வரும், 21ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அந்தந்த தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், ஒரு மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
 

2,342 வி.ஏ.ஓ., பணி: ஜூன் 14ல் போட்டி தேர்வு

              வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 வேதியியல் தேர்வு எளிமை: மாணவர்கள், ஆசிரியை கருத்து

         பிளஸ் 2 வேதியியல் தேர்வில்,கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததாக' மாணவர்கள், ஆசிரியை தெரிவித்தனர். 

TNPSC VAO Exam Now Announced.

Notification date: 17.03.2014

Application submit last date: 15.04.2014

Fees Payment last date: 17.04.2014

NEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை

        இன்று(17.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு,2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் இன்று நடைபெறவில்லை.நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

10th Latest Study Material


Tamil Study Material
  • Tamil Paper 1 & 2 | Important Questions - C.Raja, B.T.Asst, GHrSS, Malliyakarai - Tamil Medium

யார் தெரியுமா?...

       கல்கத்தா மாநகரின் பரபரப்பான தெரு. தெரு ஓரத்தில் ஒரு செல்வந்தர் அலட்சியமாக  நின்று கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ பேசிக்  கொண்டிருந்தார். 


TNPSC-VAO: வி.ஏ.ஓ. பணிக்கு தேர்வு


           2,342 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்ய ஜூன் 14-ல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 

தேர்தல்: புதிய வசதிகள்

 
          இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆச்சரியம் தரும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. வாக்காளர் வாக்களிக்கும் முன்னர் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரைச் சரியாகத் தேர்தெடுத்திருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
 

12th March - 2014 Exam - Expected Key Answers.

March - 2014 Exam | Key Answers
  • Zoology - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium

பணி விடுவிப்பை எதிர்த்து பெண் விரிவுரையாளர் வழக்கு.


          பணி விடுவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் கல்லூரியின் பெண் விரிவுரையாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

12வது ஐந்தாண்டு காலத்தில் 49 திட்டங்கள் அறிமுகம்: யு.ஜி.சி., அறிவிப்பு

          தற்போது அமலில் உள்ள 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மேம்படுத்தும் விதமாக 49 புதிய திட்டங்களை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., முடிவெடுத்துள்ளது.
 

தமிழ்ப்பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி எதிரொலி: தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி

           பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்விக்கு காரணம் தமிழாசிரியர்கள் தான் என அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் தாய் மொழியான தமிழ் மொழிப்பாடத்தில் அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
 

பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு விவரம் அனுப்பி வைக்க உத்தரவு

          தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்விச் சட்டத்தில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர் குறித்த விபரங்களையும் பள்ளிகள் திரும்ப பெற வேண்டிய கட்டணம் குறித்த விபரங்களை அனுப்பி வைக்க இயக்கனரகம் உத்தரவிட்டுள்ளது.

பயிற்சி

             தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சி

Public Exam Differences


Public Exam Time Management


கால மேலாண்மை
          பத்தாம் வகுப்பிற்கு எழுதுவதற்குக் கால அளவு 2.30மணி வரை என்பது யாருக்கும் தெரியும். இந்த இரண்டைரை மணி நேரத்தில், சிலர் சீக்கிரமாக முடித்துவிட்டு என்னசெய்வது என்று முழிப்பார்கள்.

தேர்தலுக்கு தயாராகும் ஓட்டுச்சாவடிகள்.


           லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள மின்வசதி, கட்டட வசதி உள்ளிட்டவற்றை, வீடியோவில் பதிவு செய்யும் பணியை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுஉள்ளது.
 

தமிழக துவக்க பள்ளிகளில் ஆங்கிலவழி சேர்க்கை துவக்கம்.

 
             நடப்பு கல்வியாண்டில், வகுப்புகள் இன்னமும், முடிவடையாத நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், வரும், கல்வி ஆண்டிற்கான, ஆங்கில வழி கல்வியில், மாணவர் சேர்க்கைதுவக்கப்பட்டுள்ளது.
 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: 8 லட்சம் பேர் எழுதினர்.


            சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நாடு முழுவதும் 8 லட்சம் பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். இத்தேர்வு முடிவுகள் மார்ச் 21-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.


           தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதிபல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சிலஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது. இந்தபல்கலையில், தற்போது வரை, துணை வேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின்பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.

பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article



பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி

            26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்என அறிவித்தார்.   

13 லட்சம் அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு?

            புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive