1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது": தேர்தல் அதிகாரிகள்
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வு அறிவிப்புக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40,000 ஆசிரியர்கள்
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு
செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும்
66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி, விடைத்தாள்
திருத்தும் பணிகளை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வளாகத் தேர்வு: தமிழ் வழி பி.இ. மாணவர்கள் புறக்கணிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பி.இ.
சிவில் பிரிவு படிக்கும் மாணவர்களை வளாகத் தேர்வுக்கு வந்த எந்தவொரு
நிறுவனமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. அதேபோல், மெக்கானிக்கல்
பிரிவிலும் ஒரு சில மாணவர்களே பணி நியமனம் பெற்றுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஆங்கிலவழி கல்வி சேர்க்கைக்கு 'டார்கெட்!'; விழிபிதுங்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்
அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில்
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 767 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவி: ஆசிரியை உதவியுடன் தனி அறையில் தேர்வு எழுதினார்
விபத்தில் சிக்கிய மாணவி, ஆம்புலன்சில் அழைத்து
வரப்பட்டு, ஆசிரியை உதவியுடன், பிளஸ் 2 தேர்வு எழுதினார். கன்னியாகுமரி
மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள் ராஜகுமாரி, 17.
நேற்று காலை, பிளஸ் 2 தேர்வு எழுத, ஆட்டோவில் சென்ற போது, குறுக்கே வந்த
பைக் மீது மோதாமல் இருக்க முயன்றதில், ஆட்டோ கவிழ்ந்தது.
2,342 வி.ஏ.ஓ., பணி: ஜூன் 14ல் போட்டி தேர்வு
வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக
அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு
அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC VAO Exam Now Announced.
Notification date: 17.03.2014
Application submit last date: 15.04.2014
Fees Payment last date: 17.04.2014
NEWS UPDATE : சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை
இன்று(17.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு
எதிரான வழக்கு,2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை
அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் இன்று
நடைபெறவில்லை.நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
10th Latest Study Material
Tamil Study Material
- Tamil Paper 1 & 2 | Important Questions - C.Raja, B.T.Asst, GHrSS, Malliyakarai - Tamil Medium
யார் தெரியுமா?...
கல்கத்தா மாநகரின் பரபரப்பான தெரு. தெரு ஓரத்தில் ஒரு செல்வந்தர் அலட்சியமாக
நின்று கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ பேசிக்
கொண்டிருந்தார்.
தேர்தல்: புதிய வசதிகள்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரலில்
நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆச்சரியம் தரும் சில
குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. வாக்காளர் வாக்களிக்கும் முன்னர் தாங்கள்
வாக்களிக்க விரும்பும் வேட்பாளரைச் சரியாகத் தேர்தெடுத்திருக்கிறோமா
என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
12th March - 2014 Exam - Expected Key Answers.
March - 2014 Exam | Key Answers
- Zoology - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
தமிழ்ப்பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி எதிரொலி: தமிழாசிரியர்களுக்கு நெருக்கடி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்
பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்விக்கு காரணம் தமிழாசிரியர்கள் தான் என
அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் தாய் மொழியான
தமிழ் மொழிப்பாடத்தில் அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
தோல்வியடைந்தனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் தமிழாசிரியர்களுக்கு
நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பயிற்சி
தொடக்கக் கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) - நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் 20.3.14 அன்று பயிற்சி
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், கல்விக் குழுவிற்கு,ஐந்து உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் செயல்படும், கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும், அந்தந்த பகுதிபல்கலைகளின் கீழ் இருந்தன. கடந்த, சிலஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்பட்டது. இந்தபல்கலையில், தற்போது வரை, துணை வேந்தரே, கல்வி, ஆட்சிமன்றம் மற்றும் நிதிக்குழுவின்பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அப்பல்கலையின், கல்விக்குழுவிற்கான உறுப்பினர்களை, கவர்னர் நியமித்து உள்ளார்.
பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி - Special Article
பத்தாம்
வகுப்பில் முப்பருவக் கல்வி
26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப்
பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக்
குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும்
வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester
pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக்
கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு,
ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.
இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்” என அறிவித்தார்.
2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது : பள்ளிக் கல்வித் துறை
வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம்
வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த
கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற
குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
12th Latest Study Material
- Star Office - Year Questions (2007-13) - Bethel MHr.S.S, Ambur, Vellore Dt. - English Medium