1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி
இந்திய அஞ்சல் துறை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணபங்களை வரவேற்கிறது.
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு
வயதுத் தகுதி: 18-27 வயது வரை எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.
சம்பளம்: ரூ. 5200 - 20200
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 400. எஸ்.சி.,
எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு
உண்டு.
எம்.எஸ்.சி படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி
இந்திய ஜியாலஜிகல் சர்வே துறையில் பணியாற்ற மத்திய அரசின் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிக்கோ அப்துல் ரகுமான்
புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்
என்று பாராட்டப்பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். பால்வீதி என்ற
கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக்
கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள்,
உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை
அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து
முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை
முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
One Day Strike -Regarding | இயக்குனரின் செயல்முறை
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முறையே 26.02.2014, 06.03.2014 ஆகிய நாள்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெறுதல் சார்பான தொடக்கக்கல்வி இயகுனரின் செயல்முறை
கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த அடிப்படை பணிகள் இன்று துவக்கம்.
கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்கான அடிப்படை பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம் குறித்து தெளிவான அறிவிப்புஇல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
ஏப்ரல் 1–ந்தேதி முதல் கியாஸ் விலை 2 மடங்கு உயர்வு.
வீட்டு உபயோகித்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விலை தற்போது ரூ. 401 ஆக உள்ளது. பல்வேறு காரணங்களால் சமையல் கியாஸ் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்பதகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விபத்தில் சிக்கி தேர்விற்கு தாமதமாக வருபவர்களை அனுமதிக்கலாம். - விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருக்க வேண்டும். - செயலர் அறிவுரை
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வு மற்றும் 26.03.2014 அன்று துவங்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாகவும், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் நிறைவான பணி மேற்கொள்ளும் வகையில் 08.03.2014 அன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தில் நடைபெற்ற முகாம் அலுவலர் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை, அரசு முதன்மைச் செயலாளரால் கீழ்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இவ்வறிவுரைகளை அனைத்து முகாம் அலுவலர்களும் பின்பற்றுமாறும், முகாம் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை பணியாளர்களுக்கும் இவ்வறிவுரைகள் குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் திங்கட்கிழமை(10.03.14) விசாரணை
10.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்
எது படிப்பதற்கு ஏற்ற சூழல் ?
புறாச் சத்தம், புறச் சத்தம் என்று எதுவுமே கேட்காத புறநகர் பகுதியில்
அமைந்த அந்த வீட்டில் ஓசைக்கு இடமில்லை. கணவன் - மனைவிகூட சைகையில்தான்
பேசிக் கொள்கிறார்கள். மயான அமைதி என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால்
மயானத்தில்கூட ஏதாவது சத்தம் இருக்கலாம். அந்த வீட்டில் அதைவிட அமைதி
நிலவும். காரணம் வேறொன்றுமில்லை. அந்த வீட்டில் ஒரு மாணவி பிளஸ்2
படிக்கிறாள் . அதுதான் காரணம். தேர்வு நேரங்களில் இதுபோல பல வீடுகள்
ஒலிபுகாக் கூடுகளாக மாறுகின்றன.
மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய
இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள
132 பணியிடங்களை நிரப்ப
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆளுமைத் திறன் வகுப்பறையை இனிப்பாக்க ஒரு புத்தகம்!
படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த, விருப்பமான ஒரு பெயர், ஆயிஷா
இரா.நடராசன். இவரின் ஆயிஷா எனும் குறுநாவல், மிகவும் புகழ்பெற்றது.
அறிவியலை நேசிக்கும் சின்னப் பெண் பற்றிய உருக்கமான கதை. அதனாலேயே, இவரின்
பெயரின் முன்னால் ஆயிஷா ஒட்டிக்கொண்டாள்.
தொடர்ந்து சிறுவர்களுக்கான நூல்களை எழுதிவரும் ஆயிஷா நடராசனின் புதிய
நூலான, 'இது யாருடைய வகுப்பறை?’ கல்வி பற்றி ஆழமான கருத்துகளை
முன்வைக்கிறது.
முதல் மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்த அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு சரி: ஐகோர்ட்டு உத்தரவு
திருவாரூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வெங்கன்
பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இருக்கும்போதே,
அவருக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்துகொண்டார். அதுபற்றி தெரிய
வந்ததும், துறை அதிகாரியிடம் முதல் மனைவி புகார் கொடுத்தார். புகாரின்
முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகளின்படி, வெங்கனுக்கு
போக்குவரத்துத்துறை செயலாளர் கட்டாய ஓய்வு அளித்து உத்தாவிட்டார்.
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு? ஏப்ரல் முதல், 167 ரூபாய் கூலி
தேர்தல் எதிரொலியாக, ஏப்ரல், 1ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்
தில், கூலித்தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்த, மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது; மேலும், 100 நாள் வேலையை, 150
நாட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய ஊரக வேலை
உறுதி திட்டம், 2005ம் ஆண்டு, ஆக., 25ல் அமல்படுத்தப்பட்டது. இது, விவசாய
பணிகள் இல்லாத காலத்தில், பொதுப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், கிராம
மக்களுக்கு, 100 நாட்கள், வேலை அளிக்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம், நல்ல வரவேற்பு பெற்றதால், 2009, அக்டோபரில், "மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லோக்சபா
தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஏப்ரல், 1ம் தேதி முதல், இத்திட்டத்தில்,
நாள் கூலித் தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்தி வழங்க,
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 100 நாட்கள் வேலை என்பதை, 150
நாட்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
3rd Term CCE Exam Time Table Now Published.
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது I ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும் (Link Error Rectified)
12th Physics Study Material Collection
Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
- Physics Unit Test Questions - 5 Set - Tamil Medium
- Physics 2nd Volume Full Study Material - Tamil Medium
RTI - Letter
த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்
பிளஸ் 2 முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்- அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் தலைமையில் பறக்கும் படைகள்.
தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான முக்கிய பிளஸ் 2 பாட தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகின்றன.