Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் மாதம் 01.01.2014 முன்னுரிமைப் பட்டியலின்படி தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
2013-14ம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டது. அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு இரட்டைப்பட்டம் செல்லாது என தீர்ப்பளித்து எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அச்சம்! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் பணி நியமனம் பாதிக்கப்படுமோ?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள்.
மதுரைக்கிளையில் TRB வழக்குகள் விசாரிக்கும் நீதிபதிகள் சுழற்சிமுறையில் மாற்றம்
மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள TRB வழக்குகளை மார்ச் 3 முதல் நீதியரசர்
கே.ரவிச்சந்திர பாபு அவர்களும் ,முதுகலை ஆசிரியர் தமிழ் அப்பீல் வழக்குகளை
நீதியரசர்கள் வி.இராமசுப்ரமணியம்,வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வும்
விசாரிக்கக்கூடும் என தெரியவருகின்றது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மார்ச் 3ல் TRB. PG வழக்குகள்:நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார்
சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG /TET I/TET II உள்ளிட்ட ஏராளமான
வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதன் காரணமாக தமிழ் தவிர்த்த பிற PG
பாடங்களுக்கான பணி நியமனம் தள்ளிப்போனது இந்நிலையில் மார்ச் 3 முதல்
இவ்வழக்குகளை நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார் ..TRB வழக்குகள்
பலவற்ரை விரைந்து விசாரித்து தீர்ப்பு அளித்துள்ள நீதியரசர் தற்போது
நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளையும் விரந்து விசாரித்து தீர்ப்பளிப்பார்
என தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
ஆசிரியர்களும் போராட்டம் உண்மை நிலை....
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம்
நடத்தினாலே ஊதிய உயர்வுக்குத் தான் என்ற ஒரு தவறான மனநிலையை மக்கள்
மனநிலையில் பதிய வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10
சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு
முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன்
சிங் தலைமையில் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு
பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்: 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மார்ச் 6ல் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்': ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில்
ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய
ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை
நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள்
சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்
தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல்
செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில்
மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
UGC NET தேர்வில் OBC பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை!
நெட்
தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான
விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.
இணைப்பு பள்ளிகளில் தனி பயற்சி வகுப்புகளுக்கு தடை - CBSE அதிரடி
சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை
நடத்துவது மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
கேட் தேர்வில் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்காதவருக்கு 165 மதிப்பெண்கள்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) இந்தோர் மையத்தில் 8இடங்களை
காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
Flash News: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி.
இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.
குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும்
ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில்
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட
பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்
ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,),
தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு,
மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது,
தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. டி.இ.டி., தேர்வில்,
மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண்
எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை,
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5
சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி
பெற்றனர்.