தமிழகத்தில் 1,851 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள்.
தமிழகத்தில் 1,851 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளுக்கு கூடுதல்
வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கு, நிதி ஒதுக்கீடு
செய்யப்படுகிறது. கடந்த 2010-11ல் பள்ளிதகவல் மேலாண்மை அறிக்கையின் படி,
ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான வகுப்பறைகள் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு
செய்துள்ளது.
கனரா வங்கியில் Specialist Officer பணிக்கு Any Degree பட்டதாரிகள் தேவை – Across India கடைசி தேதி: பிப்ரவரி 22, 2014
2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை
நிதியமைச்சர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால
பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என நிதியமைச்சர் பா. சிதம்பரம் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி
பெறுவதற்கான குறிக்கோள்களை, ஃப்ளக்ஸ் போர்டாக வைக்குமாறு
உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, ப்ளஸ் 2
பொதுத்தேர்வில், 90 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நடப்பு கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும், 100 சதவீத தேர்ச்சியை இலக்காக
வைத்து, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி எந்த காலத்திலும் ஒரே மாதிரி
இருந்ததில்லை. ஏனெனில் கால, பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு
ஏற்றவாறு கற்க வேண்டிய பாடங்கள், தொழில்நுட்பங்கள், கலைகள் போன்றவை புதிதாக
உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஓவ்வொருவரின் தேவை, கற்றல் திறனுக்கு ஏற்ப
பாடங்கள் கற்றுத்தரும் ஆசிரியர்களின் தேவைப்பாடும் நாட்டிற்கு நாடு,
இடத்திற்கு இடம் மாறுபட்டே காணப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில்
தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில்
பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம்.,
விரைவில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 15,000 பேரை வீட்டுக்கு அனுப்ப
திட்டமிட்டுள்ளது.
கடந்த, 13ம் தேதி, சட்டசபையில் தாக்கல்
செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், 'ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம் கருதி
யிடத்தாற் செயின்' என்ற, சிறப்பான திருக்குறள் இடம் பெற்றிருந்தது.
காலத்தையும், இடத்தையும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால், உலகமே கைகூடும்
என்பது, அதன் பொருள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைப்பதில்
அரசு எடுத்த தாமத முடிவால் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனமும்
தாமதமாகும். பிளஸ்2 பொதுத் தேர்வு முடிந்த பின்னர் சான்றிதழ் சரிப்பார்ப்பு
நடக்கும். அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் நிர்ணயித்து ஜூன் மாதம் பணி
நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் அரசு வேலை நம்பி வேலை வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அல்லாடி வருகின்றனர்.
G.O.306 - DGE - 15% RENUMERATION RAISED FOR SSLC_HSC EXAMS - Click Here
பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்கள்75
சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும்
நிரப்பப்படுகின்றன.
RMSA - 2014 Guide
SCHOOL EDUCATION DEPARTMENT HSC GUIDE
இன்னிக்கி அதிகாலைல ஒரு கனவு கண்டேன்.
ஒரு பெரிய மைதானம். யப்பா!
திரும்புன தெசையெல்லாம் டிப் டாப்பா சனங்க கூட்டம். எல்லாரும் வரிசை
வரிசையா அங்கிட்டு இங்கிட்டு திரும்பாம ஒரே தெசைய பாத்துக்கிட்டு
நிக்கிறாங்க. என்னாடானு அங்கிட்டுப் பாத்தா ஒரு மேடை. அந்த மேடையில 2ன்னு
ஒரு எழுத்து 4ன்னு இன்னொரு எழுத்து அப்பிடியே மின்னுச்சி. திடீர்னு எங்க
அம்மா வந்து மைக்கில ஏதோ பேசுச்சி பாருங்க. அம்புட்டுதான். பூரா பேரும்
கைதட்றாங்க. என்ன ஆச்சரியம். கைதட்ன கைல எல்லாம் ஒவ்வொரு அட்டைங்க
இருக்குது. நான் அப்படியே பறந்து கூட்டத்த சுத்திப் பாத்தேன். எப்படியும்
3000 வயசானவங்க, 17000 எளவட்டங்க அப்புறம் ஒர 4000 சின்னஞ்சிறுசுக
இருப்பாங்க (ரெண்டு நாலு மூனு முட்டை). அம்புட்டு பேரும் ஆடுறாங்க.
பாடுறாங்க. ஒரே கொண்டாட்டந்தான் போங்க.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு வரும் 17.2.14
அன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் மூத்த
வழக்கறிஞர் திரு.அஜ்மல்கான் அவர்கள் ஆஜர் ஆக உள்ளார்.
மோடியால் சம்பளதாரர்களுக்கு சலுகை கிடைக்குமா?
பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி தன்
பிரசாரத்தின் போது, தான் பிரதமராக்கப்பட்டால் செய்யப் போகும் காரியங்கள்
என, நிறைய திட்டங்களை முன் வைத்துப் பேசுகிறார். அவர், சமீபத்தில்
பொதுமக்களுடன் நடத்திய, வீடியோ கான்பரன்ஸ் உரையாடல் பிரசாரத்தில், 'நான்
பிரதமரானால், கட்டாயம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும், கறுப்பு பணத்தை மீட்பேன்.
அப்படி மீட்டு கொண்டு வரப்படும் பணமே, பல ஆயிரம் கோடிகள் இருக்கும்
என்பதால், நாட்டில் சரியான முறையில், வருமான வரி செலுத்திக்
கொண்டிருக்கும், மாத சம்பளதாரர்களுக்கு, வருமான வரி பிடித்தத்தில், 5 முதல்
10 சதவீத அளவுக்கு, சிறப்பு சலுகை அளிக்கப்படும்' என, தெரிவித்தார்.
இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து, பிரபலங்கள் பகிர்ந்து
கொண்ட மாறுபட்ட கருத்துக்கள் இங்கே:
ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர்
நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர்.
ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு
எழுத உள்ள மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதுவதற்கு வசதியாக, அனைத்து
பாடங்களுக்கான வழிகாட்டுதல் கையேடு பள்ளிக் கல்வித்து றை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் ஏற்கனவே கல்வி சார் மேலாண்மை தகவல் முறைமை திட்டம் செயல்படுத்தப்
படுகிறது. இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள்
போன்றவர்களின் முழுமையான தகவல்கள், துறைகளுக்கு இடையே தொடர்பை
ஏற்படுத்துதல், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்விசார் பாடப் பொருள்
பகிர்ந்தளிக்கும் தளம் போன்றவை இணைய தளம் மூலம் செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத
விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம்,
17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம்,
இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர் வசதிக்காக, ஒவ்வொரு வருவாய்
மாவட்டத்திலும், ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க
உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர்
பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண்
சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக
எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஓர்
அரசாணை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
கணக்கிடும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் பதில் மனுத்
தாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து
உயர்நீதிமன்றத்தில் வழக்கு.பள்ளிக் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு
வாரியத்தலைவர் 2 வாரங்களில் பதில்தர ஆணை. சலுகைமதிப்பெண்-தேர்ச்சியடைந்தவரை
ஒன்றாக கருதும் அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை.
இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதால்
ஒருங்கிணைப்பாளர்கள் உச்சநீதி மன்றம் செல்ல முடிவெடுத்தனர்.
நேர்காணல் இல்லாத குரூப் 2 A பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிதி,
சட்டம், வருவாய், சிறை, காவல், சுகாதாரம், போக்குவரத்து மற்றும்
தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளிஎன்று அழைக்கப்படும்.
தொழில்துறை திறன் முன்னேற்றம் உள்ளிட்ட அடிப்படை கல்வியை, முஸ்லீம் மக்களுக்கு வழங்கும் முன்முயற்சி திட்டம் நிறுவப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிவிப்பு வெளியான நாள்:14.02.2014.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:14.03.2014.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் 8.6.14.முற்பகல்.
பணியிடங்களின் எண்ணிக்கை 9.
பள்ளி கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அளவு, கடந்த ஆண்டை விட வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 2,412 கோடி ரூபாய் அதிகரித்த நிலையில் இந்த ஆண்டு வெறும், 766 கோடி தான் அதிகரித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் புதிதாக தேர்ச்சி
பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உண்டு. இதற்கான அறிவிப்பு
விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்படுகிறது. ஆசிரியர்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முன்பு 150 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் பெற
வேண்டும். இது 60 சதவீதம். அதை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி, தேர்ச்சி
சதவீதத்தை 55 சதவீதமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண்ணை
82 ஆகநிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா
அறிவித்தார்.
தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.