Mobile-ல் தங்களது மதிப்பெண்ணை காண இயலாது.எனவே, உங்களது மதிப்பெண்ணை உடனடியாக அறிய தங்களது தேர்வு எண்ணை Comment box-ல்
குறிப்பிடவும் Online உள்ள நண்பர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள்.மாற்றம்
உள்ள நண்பர்கள் தங்களது பழைய மதிப்பெண்ணயும் புதிய மதிப்பெண்ணயும் பதிவு செய்யவும்.
முதுகலை ஆசிரியர் தேர்வில், கணிதம், விலங்கியல்
உள்ளிட்ட 10 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய
தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்ற புதிய
தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும்
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக்
கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச
நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து
நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த
தீர்ப்பு:
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60
க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர்எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு
மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த
மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு
இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும், எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி
செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
தேசிய
வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 -
தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால
நீட்டிப்பு குறித்து
நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டில் நேர்காணல் இல்லாத 1,181
பணியிடங்களுக்கான குரூப் 2-A தேர்வு மே மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது மொத்தம் 2,881
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை
மாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும்
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில்,
அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு பிரிவு 80C / 80D சேமிப்பு போக நிகர
தொகை ரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டிய வரியில் ரூ.2000/-ஐ
கழித்து கட்டினால் போதுமானது.
நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில்,
புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மொத்தமாக, அரசு கல்லூரிகளில்
மட்டும் 22,500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60
க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு
நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு
மேல் விசாரணை செய்யப்பட உள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற
அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ்
சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப்
பட்டியல்பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முதல் தாள்
மற்றும் இரண்டாம் தாளில் முக்கிய விடைகளை
பள்ளிக்கல்வி
- அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ /
மாணவியர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்தினால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் எச்சரிக்கை
பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2
பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டது. முதல் பிரிவில்
1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும்,
கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 86 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
வைரவரத்தினம் (51) உதவி தலைமையாசிரியராக பணிபுரிகிறார். இவர் பிளஸ் 2
மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்.
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு நடக்கும் நேரங்களில் கேள்வித்தாள்
வினியோகம் செய்யும் பொறுப்பு தலைமை ஆசிரியரிகளிடம் ஒப்படைக்கப்படுவதால்,
கேள்வித்தாள் வெளியானால் அவர்கள் தான் பொறுப்பு என்று தேர்வுத் துறை
தெரிவித்துள்ளது.
2006ம்
ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வாங்காமல் உள்ள பிளஸ் 2 மதிப்பெண்
பட்டியல்களை மாணவர்கள் பெறாமல் உள்ளதால், அவற்றை அழித்துவிட அரசுத் தேர்வு
துறை திட்டமிட்டுள்ளது.
உலக
கல்வி தரத்திற்கு இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400
கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என கன்னியாகுமரியில் நடந்த அகில
இந்திய கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
மதுரை, தேனி, ராமநாதபுரம்,
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை
ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது: