உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக
இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர்
பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி
கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,
சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி
வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும்
விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக,
'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE
பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர்.
மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில்
21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது
கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக
அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1)
முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக
நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும்
ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உணவு
துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை எழிலக வளாகத்தில்,உணவு துறை ஆய்வு கூட்டம், நேற்று, நடந்தது. இதில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, (
எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து,
எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை' என, பள்ளிக்கல்வித்துறை, முதன்மை
செயலர் சபிதா தெரிவித்தார்.
சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க, தேர்வுத்துறைக்கு
பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 3 ல் பிளஸ் 2
வகுப்புகளுக்கும், மார்ச் 26 ல், 10 ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள்
துவங்க உள்ளன.
சத்துணவு மையங்களுக்கு கடந்த 9 மாதங்களாக
வழங்காமல் இருந்த காய்கறி, விறகு மற்றும் மளிகை பொருட்களுக்கான நிதி
தற்போது 6 மாதத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை
நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு
காட்டுகின்றன.
புதிய கல்வியாண்டு வருகிறதென்றால் கூடவே
பெற்றோர்களுக்குப் பதற்றங்களும் வந்துவிடும். குறிப்பாக முதல் முறையாகப்
பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டியவர்களும், வேறு பள்ளிக்கு மாற்ற
விரும்புகிறவர்களும் அடைகிற மன உளைச்சல்களுக்கு அளவே இல்லை.
முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை
வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப்
பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில்,
போட்டித் தேர்வு நடந்தது. தமிழ் பாடம் தவிர, இதர பாடங்களுக்கான தேர்வு
முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு, சான்றிதழ்
சரிபார்ப்பையும், நடத்தி முடித்துவிட்டது.
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும்
பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி
வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில்
நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து
விட, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும்
பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரல், 12 வரை,
நடத்தப்படுகிறது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான
ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்டம் தோறும் தேர்வுக்குழு அமைத்து வரும் 31ம்
தேதிக்குள் தேர்வு செய்த ஆசிரியர் விபரங்களை அனுப்பி வைக்க பள்ளி கல்வி
இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
சில சமயங்களில் எப்போதாவது சில அதிசயங்கள்
நிகழும். அப்படிப்பட்ட ஓர் அதிசயம் வருகிற 2014ம் ஆண்டில் நிகழ்கிறது.
அதாவது 1947ம் ஆண்டு காலண்டர் போலவே, 2014ம் ஆண்டின் காலண்டரும் அமைகிறது.
1947ம் ஆண்டு புதன்கிழமை பிறந்தது. அதேபோல் இந்த ஆண்டும் புதன்கிழமைதான்
பிறக்கிறது.