TET தேர்வில் Subject wise,
Community Wise, Gender Wiseகீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இருக்கலாம்
என கருத்து கணிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச், ஏப்ரல் - 2014-ல் நடைபெறவுள்ள மேல்நிலை / இடைநிலைக்கல்வி பொதுத்
தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்களிடமிருந்து (பிரைவேட் கேன்டிடேட்)
விண்ணப்பங்கள் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை
வரவேற்கப்படவுள்ளது.
சினிமா, விளையாட்டு, இலக்கியம், அரசியல்,
பத்தி ரிகை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் செயல்பாட்டுத் திறன்தான்
தகவல் அறிவைவிட முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஆசிரியர்களுக்கான
தகுதித் தேர்வுகள் மட்டும் விதிவிலக்கு.
குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம்
வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து
செய்யவும் தாக்கலான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதில் மனு செய்ய
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சமீப காலமாக, பள்ளி, கல்லூரி வளாகங்களில், மாணவர்கள், வன்முறை
சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது
போன்ற, படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து
நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு,
உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி
ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார்
இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமின்றி
அனைத்து தரப்பினரிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
"மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல
நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், கவுன்சிலிங்
மையங்களை நிறுவ வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை: ஆசிரியருக்கு பதவி உயர்வு
வழங்குவதை தாமதப்படுத்துவதாக, தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் ஆஜரானார்.
பாடசாலை வலைதளத்தின் புதிய செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் Facebook மற்றும் Twitter மூலம் பதிவேற்றப்படுகிறது. நமது வலைதளத்தில் உள்ள Facebook & Twitter Logo - வை கிளிக் செய்து பார்வையிடுங்கள்!..
சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால்
ஆசிரியர் பணி நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு
அனுமதிக்கும்படி, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
குரூப்-2 தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே
சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.
தொடக்கக்கல்வி
2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும்
தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி
இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar
சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்
நலனுக்காக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் புதிய அரசு தொழில்பயிற்சி
நிலையங்களை, முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி
காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தங்களுக்கான
கின்டர்கார்டன் சேர்க்கையில், 4 பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120
மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட, தமிழக அரசு முடிவு
செய்துள்ளது. ஒரு பள்ளி, சிறியதா, பெரியதா? என்பது இந்த கணக்கில் வராது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கிராமப்புற
மாணவர்கள் நலன் கருதி முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட கல்வி உதவித்
தொகை திட்டத்தில் மாற்றம் வேண்டும், என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போது அத்தியாவசிய பயன்பாட்டிலுள்ள "சிடி"
மற்றும் "டிவிடி"க்கள் 500 ஆண்டுகளானாலும் அழியாது என்பதால் அதுகுறித்த
விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த கோவில்பட்டியில் நான்கு நாட்கள்
கண்காட்சி நடத்தப்படுகிறது.
ஆசிரியர்
தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), சர்ச்சைக்குரிய விடைகள் மற்றும் கேள்விகள்
குறித்து, ஆய்வு செய்ய, அனுபவம் வாய்ந்த சிறப்பு நிபுணர் குழு
அமைக்கப்படும்' என, டி.இ.டி., தேர்வர்களிடம், ஆசிரியர் தேர்வு வாரிய
(டி.ஆர்.பி.,) தலைவர், விபு நய்யார், உறுதி அளித்தார்.டி.இ.டி., தேர்வில்,
சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காத தால், ஒரு மதிப்பெண் மற்றும் இரு
மதிப்பெண்களில், ஏராளமான தேர்வர் கள், தோல்வி அடைந்துள்ளனர்.
வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ.
பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின்
பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளது.