Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம்


           ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்குரிய படி வழங்கப்படாததால் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு


           தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது


          மத்தியப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநில அரசுகள், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%சதவீதமாக உயர்த்தியது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்


           தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி - Dinamalar


            கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது

GO.190 Higher Education Dept Dt.27.09.2013 – Equivalence of Degree – M.Sc. Statistics awarded by University of Madras as equivalent to M.Sc. Mathematics – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

          "எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்


            அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு


         மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை, என்று, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி


                 அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

Express Pay Order

      தொடக்கக் கல்வி - RTE 2009ன் படி அகஇ கீழ் தோற்றுவிக்கப்பட்ட 3565 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.12.2012 முதல் 31.12.2013 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு


தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

    
    பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நூலக புத்தகங்களைக் கொண்டு மாணவர்களுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
 

அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி


             அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்


           மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: "ஸ்லோ லேனர்ஸ்" பட்டியலிட உத்தரவு


             ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும், கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை பட்டியலிட, சி.இ.ஓ., அய்யண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

பார்வையற்ற மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


           பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், 12 நாட்களாக நடத்திய போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது.

மதிய தூக்கம் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்


             பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குரூப்-1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்அறிவிப்பு


                தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்&1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
 

எவ்வித குறைவும் ஏற்படாமல் செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு

 

  •            தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் திட்டம் - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடநூல்கள் பள்ளிகளுக்கு 20.09.2013 விநியோகம் செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு

44 மாதிரி பள்ளிகளில் RMSA "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்


              மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
 

வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட நேரம் தவறாமல் பள்ளி மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று விட வேண்டும்


          தூத்துக்குடி தொகுதியில் அடுத்த மாதம் நேரம் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் கேட்கும் படிவங்களை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அங்கு செல்லாமல் இருந்து விடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சியில் வாக்குப்பதிவு அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான மதுமதி தெரிவித்தார்.

முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படுமா? 30-ந் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு


            ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 

காலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி


           காலாண்டு தேர்வு விடுமுறையில், தொடர்ந்து ஆன்லைன் அலுவலக பணி, ஆசிரியர்களுக்கு திணிக்கப்படுவதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் முதல் பருவத்தேர்வு முடிவடைந்து, அக்டோபர், 2ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில், பவர் ஃபைனான்ஸ் தொடர்பான ஆன்லைன் பணிகளை மேற்கொள்ளும்படி, உத்தரவிடப்பட்டுள்ளனர்.
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம்


          ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு


          முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

         சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு வந்தது. 
 

இயக்குநர் உத்தரவு

             தொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வழங்க, பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

 

ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு

             செப்டம்பர் / அக்டோபர் 2013 - மேல்நிலை / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதியம் மற்றும் சில்லறை செலவினங்கள் அந்தந்த தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு

 

பிப்.,16ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு


              மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET)-2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது.

பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை


                   காலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
 

கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு

            தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு

அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு


        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு


          மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்த ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து இதன் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி


           தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive