Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.இ.ஓ., மாற்றம்


               பள்ளி கல்வித் துறையில், பல மாதங்களாக இழுபறியில் உள்ள அதிகாரிகள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு, ஓரிரு நாளில் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2ம் கட்ட கலந்தாய்வு


              மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு


          ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண் அதிகரித்து உள்ளது.

2ம் பருவத்திற்கு 2.29 கோடி புத்தகங்கள்: பாடநூல் கழகம் ஏற்பாடு


        வரும் செப்டம்பர் இறுதியில், ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வழங்க, இரண்டாம் பருவத்திற்கு, 2.29 கோடி பாடப் புத்தகங்களை அச்சிடும் பணியை, பாடநூல் கழகம், மும்முரமாக செய்து வருகிறது.


12,618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிக்க நடவடிக்கை


          தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளில் செயலாளர்களை நியமிப்பதற்கான பணி வரன்முறைகளை வகுத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சீட் கொடுக்க பள்ளிகள் மறுப்பு


              இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 56,682 இடங்கள் இருந்த போதும், 18,946 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. இது, 33.42 சதவீதம். 1,012 தனியார் பள்ளிகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு, "சீட்' கொடுக்க மறுத்துள்ளன. "இந்த பள்ளிகள் மீது, விரைவில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


            இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாற்றம்: பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - நாளிதழ் செய்தி


            அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட நிதி, விரயமாவதை தடுக்க, 3,500க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கட்டாய பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

ஒரே நாளில் இரு தேர்வுகள்: அரசுத் துறைகள் மோதலால் தேர்வர்கள் பாதிப்பு - நாளிதழ் செய்தி


                 வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், சுருக்கெழுத்து டைப்பிஸ்ட் காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி மூலம் போட்டி எழுத்து தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடக்கிறது. இத்தேர்வில் சுமார் 9 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் பள்ளி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்


           மார்த்தாண்டத்தில் அனுமதி பெறாத கட்டடத்தில் செயல்படும் தனியார் பள்ளி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

டி.ஆர்.பி., பணியிடங்கள் பல மாதங்களாக காலி: அலுவலர்கள் திணறல்


           முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில், மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர் பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மூளையைத் தூங்க விடாதீர்கள்!


           பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


          நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்


          இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு


        சென்னை பல்கலைக்கழக இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டப் பல்கலை இணையதளம் முடங்கியது: பரிதவித்த மாணவர்கள்


          சட்டப் பல்கலைக்கழக இணைய தளம் திடீரென முடங்கியதால், "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர்.

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு


          உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது?


          பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வு: 18 நாளில், 20 ஆயிரம் பேர் ஆப்சென்ட்


          பொறியியல் பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில் மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் ஓய்வில் சிக்கல்: நிதி இழப்பை ஈடுகட்ட வேண்டும்


           தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன், அவர்கள் பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும், நிதி இழப்பு இருந்தால், அதை சரி செய்ய வேண்டும். இல்லை எனில், அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்த, மாவட்ட கல்வி அலுவலர்களே, முழு பொறுப்பாவார்கள், என பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 
 

நேரத்தில் உறங்காத பிள்ளைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது


           இரவில் தமது பிள்ளைகள் நேரத்தோடு படுக்கைக்குச் செல்கிறார்களா என்பது பற்றி கவலைபடாத பெற்றோர்கள், தமது இளம்பிள்ளைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுவதற்கு இடமளித்துவிடுகிறார்கள் என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

ஆசிரியர் கல்வி டிப்ளமோ கவுன்சலிங்: தனியார் பள்ளிகளில் சேர ஆளில்லை


         ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்புக்கு மிக மிக குறைவாகவே மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளதால், கவுன்சலிங்குக்கு வருபவர்களுக்கு அரசு நிறுவத்னத்திலேயே வாய்ப்பு கிடைப்பதால், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் யாரும் சேர முன்வரவில்லை.
 

விளம்பரமின்றி யூடியூப்


          வயது வித்தியாசமில்லாமல், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் இணையம் மூலம் வீடியோ பார்க்க பயன்படுத்தும் தளம் யூடியூப்தான் (YouTube Video Website).

மற்ற மாநில TET வினாத்தாள்களை போன்று தயாரிக்கப்படும் TNTET வினாத்தாள்கள்


            மிக மிக நுட்பமான முறையில் வினவப்படும் TNTET வினாத்தாள்கள் முழுமையாக ஒரு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா?


            இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்வோம்


            ஒரு வேலையை தடையின்றி, குறித்த நேரத்தில் செய்வதற்கு, நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தை எப்படி செலவழிப்பது என்பது பற்றி அறிந்து கொண்டால், பெரும்பாலும் நமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு, எளிதில் தீர்வு காணலாம்.

நெல்லை பல்கலை.,யில் பி.எட்.,படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


            நெல்லை பல்கலை., தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் மூலம் பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்த வரவேற்கப்படுகின்றன.

உதவி பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது


              தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உதவி பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. உதவி பேராசிரியர் நியமனம் குறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பி.எச்டி., குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை. அவர்களின் பணி அனுபவம் எவ்வாறு எடுத்து கொள்ளப்படும் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive