Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊர்ல உள்ள எல்லா பய புள்ளைகளும் படிச்சாகணும் - தினமலர்


         நல்லாசிரியர் ராமசாமி, இவர் தன் கிராமத்தில் மட்டுமின்றி தனது சுற்று வட்டார கிராமத்தில் உள்ள எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார், பணம் சார்ந்த இந்த உலகத்தில் குணம் சார்ந்து வாழும் அந்த பெரியவரின் கதை இது.


TET Hall Ticket only by Online| ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்


               ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை


            ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.

புதிய SSA மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


              புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை சிறுபான்ன்மை நலத்துறை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை


             இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு


                ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு


                சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு


              கலந்தாய்வு மூலம், கல்லூரிகளில் சேரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், அரசால் வழங்கப்படும்.

நெட் தேர்வு: சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு


              யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு (நெட்), சென்னையில், நாளை நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

விவரம் கோரி உத்தரவு

            தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி உத்தரவு.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

 
          மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 
 

TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

          
*  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

*  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.

ஆய்வுக்கூட்டம்

           தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.

 

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்


            ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது? - நாளிதழ் செய்தி

           பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு பரிசுத் தொகை, இன்று வரை வழங்கப்படவில்லை.

தேர்வு எழுதினால்தான் மாநில அதிகாரிகள் இனி ஐ.ஏ.எஸ்.,


             மாநில அளவிலான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற, இனி தேர்வு எழுத வேண்டும் என, மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில் அண்ணா பல்கலை "ஹவுஸ்புல்"


              பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்த இடங்கள், நேற்றுடன் நிரம்பிவிட்டன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை


              பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடிப்படை வசதிகளற்ற பி.எட். கல்லூரிகள் மூடல்


            "தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச தரத்தில், பாடத் திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார்.

போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"


          டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி


          உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

PGTRB - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்


           முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

TRB தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை


           மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்ணை எடுத்தால்தான், அரசு பணியில் சேர முடியும்.


மாற்றித்தான் பார்ப்போமே... தினமணி தலையங்கம்


              பள்ளி வேலைநேரத்தில் மாற்றம் இல்லை; பாடவேளையில் மட்டுமே மாற்றம்'' என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது.

அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது


           அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு


          நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு


          இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசூலாகாத கல்வி கடன்கள்: கனரா வங்கி புதிய திட்டம்


              வசூலாகாத கல்விக் கடன்களை திரும்பப் பெறுவதற்கு, கடன் சீர்திருத்த திட்டத்தை, கனரா வங்கி செயல்படுத்த உள்ளது. இவ்வங்கியின் வசூலாகாத கல்விக் கடன், 9 சதவீதமாக உள்ளது. இதை, 2 சதவீதமாகக் குறைக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.

ரயிலில் இடமில்லை... பொறியியல் கலந்தாய்வு செல்லும் மாணவர்கள் தவிப்பு


           நாமக்கல் பகுதிகளில் இருந்து, சென்னைக்கு, பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்லும் மாணவர்கள், பேருந்து மற்றும் ரயிலில் இடம் கிடைக்காமல், அவதிப்படுகின்றனர். எனவே, சேலம் வழியாக, சென்னைக்கு, சிறப்பு ரயில் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு


           கல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது.

எம்.டி.எஸ்., படிப்புக்கு ஜூலை 2ம் தேதி கலந்தாய்வு


          "முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு (எம்.டி.எஸ்.,), ஜூலை, 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்" என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"


          டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

''ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல!''


           ''உலகம் முழுவதும் ஆரம்ப கல்வி கற்பிக்கவே 1.7 மில்லியன் ஆசிரியர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள். 
 

பிளஸ்–1 மாணவிகளுக்கு நன்னெறி பயிற்சி முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள் அறிவுரை


பிளஸ்–1 வகுப்புகள்

          தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கி உள்ளன. 10–வது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பை தொடர்கிறார்கள். சிலர் வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை


          அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன் அரசாணை வெளியிட்டும், பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive