பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில்
99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின்
பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் பி.எட்., பயிற்சிக்காக,
விடுப்பு எடுத்து செல்வதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம்
உள்ளது.
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக
பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட
ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்டுள்ள
ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில்,
மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் தராததால், வேறு பள்ளியில் சேர
முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் சி.சி.இ. மதிப்பீட்டு முறை
நடைமுறைக்கு வந்த பிறகு, பள்ளி மாணவர் களிடையே கற்றல் இனிமையாகி
இருக்கிறது. இனிமையான சூழலுடன் மாணவர்கள் பாடங்களைச் சுமையின்றிக்
கற்கிறார்கள்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில்,
மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 211 மாணவர்களுக்கும், இன்று
கோட்டையில், முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் பரிசு வழங்குகிறார்.
தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி
பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று
தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல்
கலந்தாய்வு, ஜூலை, 1ம் தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில்,
தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
ஐந்தாம் வகுப்பு பயிலும் 46.5 சதவிகித
மாணவர்களுக்குக் கணித அறிவாற்றல் மிகவும் குறைவாக உள்ளது என்று இந்திய
அளவில் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது,
இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று
56வது இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை
கலெக்டர் தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
"ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப்
பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு
விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற
வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும்
விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்"
என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.
"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி
மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை, 6 லட்சத்தை
எட்டியுள்ளது; கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம்
விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.
நீதிமன்றங்கள்
வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய
மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி நடத்த
தொடக்கக்கல்வித் துறை உத்தரவு
பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில்
சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக்
கல்வித்துறை தெரிவித்துள்ளது.