எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் (2013-14)
அடிப்படையில், 200-க்கு 200 தொடங்கி 200-க்கு 190 வரை ஒரே கட்-ஆஃப்
மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கீழே அளிக்கப்பட்டுள்ளது.
கட்-ஆஃப் எத்தனை பேர்?
200-க்கு 200 7
200-க்கு 199.75 14
200-க்கு 199.50 33
பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு அதிகப்படியான கட்டணம்
வசூலிக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து நாமக்கல்லிலுள்ள மூன்று
பிரபல தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை
திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில்
மாணவர்கள் வெற்றி பெற, தேசியளவில் ஒரே பாடத் திட்டம் அவசியம் என, ஓய்வு
பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் என்.திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, ஆகஸ்ட் 25ம் தேதி நடத்தப்படுகிறது என்று அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மே மாதம்
நீதிமன்றம் விடுமுறைக்கு பின்பு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வரும் என்று
எதிர்ப்பார்க்கப்பட்டது. பின்னர் ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்து
கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
எம்.எட்., உடன், எம்.பில்., மற்றும் பி.எச்டி.,
தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கு, இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்க வழி வகை
செய்யும் அரசாணை, குழப்பங்கள் நிறைந்ததாக இருப்பதால், 20 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊக்க தொகையை பெற முடியாமல், தவித்து
வருகின்றனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கக்கல்வித்துறையை
சார்ந்த ஆசிரியர் சங்கங்களுடன் வருகிற 19ம் தேதியும், பள்ளிக்கல்வித்துறையை
சார்ந்த அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி சங்கங்களுடன் 20ம் தேதியும்
கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள்
பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பொதுச்செயலாளர் திரு. செ.முத்துசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து
ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விரைவில் முடிவெட்டப்படும்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது
அதிகரித்துள்ள நிலையில், உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்வு இல்லாததால், பிளஸ்1 சேர்க்கையில் இடம் கிடைக்காமல், மாணவர்கள்
தவிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, 8,000 பள்ளிகளுக்கு, நடப்பு
கல்வி ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை
நிர்ணயித்து அறிவித்துள்ளது. ஆண்டு கட்டணமாக, 3,000 ரூபாய் முதல், 35
ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளுக்கு தகுந்தாற்போல், கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு விட்ட நிலையில்,
கவுன்சிலிங் தொடங்குவதற்கான இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இந்நிலையில்,
கவுன்சிலிங் தொடர்பான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு
மட்டும் முதல்கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
திட்டமிட்டுள்ளது.
முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில்,
பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து
வருகிறது. பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை
எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.
உணவு பற்றிய படிப்பை ஒரு சிறந்த ஆர்வமூட்டும்
படிப்பாக கருதும் மாணவர்களுக்கு, அத்தொழில்துறையில், பல அற்புதமான
வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்,
2013-14ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங்
ஜுலை 1ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழங்கப்படும் இளநிலை படிப்புகள்
வேளாண் அறிவியல் படிப்புகள் - சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை
* பி.எஸ்சி., (வேளாண்மை) - 4 வளாகங்களில் சேர்த்து 420 இடங்கள்(சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு இதுவரை சுமார் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது மேலும்
சில லட்சம் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், "ஆசிரியர் தேர்வு தொடர்பான
பள்ளிக்கல்வித் துறை அரசாணை 252-ஐத் திரும்பப்பெற வேண்டும்; தகுதித்
தேர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஜூன் 17 ல் விற்பனை செய்யப்பட உள்ளது.
"கடந்த ஆண்டு, கட்-ஆப் 200க்கு, 200 மதிப்பெண்களை, 32 மாணவர்கள்
பெற்றனர். இந்த ஆண்டு, 12 மாணவர்கள் மட்டுமே, 200க்கு, 200 மதிப்பெண்களை
பெற்றுள்ளனர்" என பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் தெரிவித்தார்.
பணி தொடர்பான புகார் கடிதங்களை பிரதமர்
அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு
எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் குறைகளுக்குத் தீர்வு காண வேறு வழிகளை
அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளிகளில் நன்கொடை வசூல் தொடர்பாக தணிக்கை
குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார் தெரிவிக்க வசதியாக டெலிபோன்
எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகிக்கும் பணி துவங்கிய 15 நாளில் 127 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளன.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான சென்டாக் சேர்க்கைக்கு, 6765 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
அரசு அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ.,
எச்சரித்துள்ளார்.
எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி
சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.
1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும்
ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் சர்வதேச கிளைகளை தொடங்குவதற்கு மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம் (எம்.எச்.ஆர்.டி., ) திட்டமிட்டுள்ளது.
இதன்படி முதன்முறையாக கத்தார் நாட்டில் ஐ.ஐ.டி., மற்றும்
ஐ.ஐ.எம்., ஆகியவற்றின் கிளைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என
(எம்.எச்.ஆர்.டி., ) தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட
டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை
என்பது ராணுவத்தோடு தொடர்புடையது.
பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ததை கல்வித்துறை கடைசி
நேரத்தில் அறிவித்ததால், கல்வியாண்டின் துவக்க தினமான நேற்று, பெற்றோரும்,
குழந்தைகளும் குழப்பம் அடைந்தனர்.
ஆசிரியர்
தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013
மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை
10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும்
விற்பனை செய்யப்படும்.