Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைபட்டம் வழக்கு வருகிற 12ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


          இரட்டைப்பட்டம் எனும் முறையில் ஓராண்டு பட்டப்படிப்பு மற்றும் மூன்றாண்டு பட்டம் படித்தவர்களுக்கு இடையேயான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் இன்று மாலைக்குள் தற்காலிக முடிவு தெரியவரும் என்று  பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் தெரிவித்தன.

TET மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு


          அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்கள் ப.சிவகுமார், மு.திருமாவளவன் மற்றும் முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் இணைந்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 
 

அரசுப் பணியில் சேர என்ன தகுதி வேண்டும்? ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்


          அரசு அலுவலகம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நூலாம்படை படர்ந்த சுவர்கள்; வெற்றிலை பாக்கு உமிழ்ந்த இடங்கள்; அங்குமிங்குமாக கிடக்கும் மேஜைகள், நாற்காலிகள்; குவிக்கப்பட்ட கோப்புகள்; உடைந்த நாற்காலியில் ஒரு காலை சம்மணமிட்டு தூங்கி வழியும் அலுவலர். பரபரப்போ அவசரமோ இல்லாத நிதானமான தாமதமான சூழல், அரசு அலுவலகத்துக்கான முத்திரை என்றாகிவிட்டது. இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே நிலைதான்.

தமிழகத்தில் 900 நர்சரி பள்ளிகளை மூட அரசு உத்தரவு


           அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

கல்வி துறை கேட்கும் "விருப்ப கடிதம்": ஆசிரியர்கள் எதிர்ப்பு


           தமிழகத்தில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்தாண்டு பிறப்பித்துள்ள "விருப்ப கடிதம்" உத்தரவால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
   

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 20 சதவீதம் பள்ளி வாகனங்கள் இயங்குமா?


          தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 03ம் ‌தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த விடுமுறை ஜூன் 09 வரை நீடிக்கப்பட்டது.
 

"அனைவருக்கும் தரமான உயர்கல்வி சாத்தியமாக வேண்டும்": எல்.பி.யு., துணை வேந்தர்


        பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக துணைவேந்தர் ரமேஷ் கன்வர் தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
 

ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வாழ்த்துக்கள்


         கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி துவங்குகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் , வாழ்க்கையில் சாதிக்கும் ஆசை கொண்ட மாணவர்கள் இவைதான் முக்கிய கருப்பொருள்கள் இங்கு. 
 

தேர்வு வாரியம் புதிய நிபந்தனை முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்


           "முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் வருகைப்பதிவேடு உள்ளிட்ட சான்றுகளை சமர்பிக்க வேண்டும்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ள, புதிய நிபந்தனையால், முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக விண்ணப்பிப்போர் கலக்கம் அடைந்து உள்ளனர்.
 

பள்ளிகளில் கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுக் கொள்ளலாம்: அமைச்சர் வைகைச்செல்வன்


          பள்ளிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் ஆசிரியர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
 

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


          கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டது.
 

ஆசிரியர் நியமனம்: இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தல்


           ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசாணை எண். 252 இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது. எனவே, அந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
 

SSLC - Sup. Exam - Tatkal Apply Starts From 11.6.12 to 12.6.12 upto 12 p.m.




         ஜூன்/ஜூலை 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத்  தேர்விற்குத்  தனித்தேர்வர்களை ‘சிறப்பு அனுமதித்   திட்டத்தின்’ கீழ் தேர்வெழுத அனுமதித்தல்
   
செய்திக்குறிப்பு

    ஜூன்/ஜூலை 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் Online-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் டீn-டiநே-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

1. மார்ச் 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.


தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்


        2013 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில் தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும்  தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1.      அரசின் நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும், காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.

SSLC சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை


           இந்த மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
 
வ.எண் நாள் கிழமை தேர்வு
1 24.06.2013 திங்கள் மொழித்தாள் - I
2 25.06.2013 செவ்வாய் மொழித்தாள் - II
3 26.06.2013 புதன் ஆங்கிலம் முதல் தாள்
4 27.06.2013 வியாழன் ஆங்கிலம் இரண்டாம் தாள்
5 28.06.2013 வெள்ளி கணிதம்
6 29.06.2013 சனி அறிவியல்
7 01.07.2013 திங்கள் சமூக அறிவியல்


ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி?


          தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
 

வெளிநாட்டில் கல்வி கற்க நுழைவுத்தேர்வு: 3 ஆண்டுகளில் 20% உயர்வு


         வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த, மூன்றாண்டுகளில், 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் “டி”


         உங்கள்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?
 

"அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் - ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” - சாதக, பாதகங்கள் குறித்த ஒரு ஆய்வு - சிறப்பு கட்டுரை


     பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் எனவும், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர் எனவும், இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.

     இது குறித்து சில சாதக பாதகமான விமர்சனங்கள் குறித்த அரசு ஓர் ஆய்வு. ஆணும், பெண்ணும் இணைந்துள்ள இந்த சமுதாயத்தில் இது தேவையா? அவசியமா? என்பதற்குள் புகு முன், இதை செயல்படுத்த கூறப்பட்டுள்ள காரணம், ஆண் ஆசிரியர்களை இச்சமுதாயம் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கப்படுவதை எண்ணி வருத்தப்பட வேண்டும்.
    

கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - சிறப்பு கட்டுரை


         கட்டுரையாசிரியர் திரு. எஸ். ரவிக்குமார் அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக வழங்கிய முந்தைய கட்டுரை - வாசகர்களின் மறு பார்வைக்காக.


9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகம்


          சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது


            அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
 

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்


           ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி:அனைத்து பாடங்களுக்கும் "வழிகாட்டி"


            அரசு பொது தேர்வுகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களின் ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

TETல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள்


Thanks to TeacherTN

              அனைவருக்கும் தரமான கல்வி, கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்ற நோக்கோடு செயல்படும் அரசு. முதலில் TET அறிவித்து அதில் தவறிவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு வைத்து அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு நேர்மையான முறையில் அதிரடியாக பணி நியமனம் வழங்கி பலரின் வாழ்வில் ஒளி ஏற்றியதை யாரும் மறுக்க முடியாது.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு


           கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு முடிந்தபின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை விடுமுறை விடப்பட்டது. 2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த, 3ம் தேதி முதல் துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது.
 

அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்


                அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011,12, 2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
 

கோவையில் 30 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து


         கோவை மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வந்த, 30 பள்ளிகளின் அங்கீகாரத்தை, அதிரடியாக ரத்து செய்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வரவேற்பு இல்லை: பாலிடெக்னிக்கில் 25 படிப்புகள் நிறுத்தம்


          மாணவர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால், 20 முதுகலை டிப்ளமோ பாடங்கள் உள்ளிட்ட, 25 படிப்புகளை அரசு ரத்து செய்துள்ளது.

திருவள்ளுவர் பல்கலையில் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல்


          விடைத்தாள் திருத்துவதற்கு, தொகையை உயர்த்த மறுப்பதால், திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவு வெளியிடுவதில், தாமதம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 20 பள்ளிகளை மூட உத்தரவு


           சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 20 மழலையர் பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive