Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத்தில் கோரிக்கை


            சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி முதல்வர் மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.
 

ஆசிரியர் பொது மாறுதல், ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை


              ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர், நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது


          பி.இ., விண்ணப்பம் விற்பனை, நேற்றுடன், 2.26 லட்சமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 1.86 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இந்த ஆண்டு, விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளே, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன.
 

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்


            மகாராஷ்டிரா மாநில, 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, இந்திய வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, அம்மாநிலம், சீனாவுக்கு சொந்தமானதாக காட்டப்பட்டுள்ளது.
 

தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?


         மலேசிய கல்வித்துறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஹ்மான், சமீபத்தில் கூறுகையில், "மலேசியாவில் மலாய் மொழி பள்ளிகள் மட்டுமே செயல்பட வேண்டும். தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிகளை தடை செய்ய வேண்டும். அப்போது தான் தேச ஒற்றுமை ஏற்படும்" என்றார்.
 
 

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு


         சி.ஏ., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம் தாள் தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்


         "பிரபல, நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில், இடம் வாங்கித் தருவதாக கூறும், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என போலீசார் எச்சரித்துள்ளனர்.
 
 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி? - Poll Related Article.


வாசகர்களே தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதமாக அமைய ஒத்துழையுங்கள்.

( நினைவில் கொள்ளுங்கள் - இன்று பிற்பகல் 9 மணியுடன் வாக்கெடுப்பு முடிவடைகிறது )

அன்பான பாடசாலை வாசகர்களே,
  • ஆங்கில வழிக்கல்வி திட்டதின் மூலமாக அரசுப்பள்ளிகளில் எந்தளவிற்கு சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
  • ஆங்கில வழிக்கல்வி எனும் ஒரு காரணம் மட்டுமே கிராமத்து பெற்றோர்களை சுண்டியிழுத்து விடுமா? 

பள்ளிக்கல்வித் துறையின் 2013-2014 ம் ஆண்டிற்கான பள்ளி நாள்காட்டி வெளியீடு


       தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் விபரம்: புதிய மென்பொருள் மூலம் கண்டுபிடிப்பு


           திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்கள், 4,826 பேர் என, கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கினால் விருது: முதல்வர்


          "தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, புதிய விருதுகள் வழங்கப்படும்," என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முதல்முதலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி


           தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேல் படிப்பு என்ன படிக்கலாம் என்பது குறித்து அவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கைவிடக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - நாளிதழ் செய்தி


          அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கும் முடிவை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 
 

1108 மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்


           சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க விரும்புகிறார். ஆனால் சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.
 
 

டி.இ.டி : அறிவிக்க தயங்கும் டி.ஆர்.பி - கையை பிசையும் பயிற்சி மையங்கள் - Dinamalar


          ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் தேதியை அறிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம், காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், ஜூனுக்குள் பயிற்சியை முடித்து விடலாம் என, கணக்குப் போட்டிருந்த பயிற்சி மையங்கள் தற்போது கையை பிசைந்து வருகின்றன.

1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் : தமிழக முதல்வர்


         பள்ளிகளைத் தரம் உயர்த்தி, அதற்கேற்ப ஆசிரியர்களை பணியமர்த்த புதிதாக 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
 


 

Employment Online Registration - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


           தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.


பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை


              ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ள பகுதி நேர கணினி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு பதிவு செய்தவர்கள் பதிவுமூப்பு மற்றும் தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
 
 

பாடநூல் கழகம் பெயர் மாற்றம்


            பாடநூல்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாடநூல் கழகம் இனிமேல்,கல்வியியல் கழகம் என்ற பெயரில் செயல்படும் எனவும், மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கும் பணியை, கல்வியியல் கழகம் செய்யும் எனவும் அறிவித்தார்.

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்


               2013-2014ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும். கூடுதலாக ஒரு ஆரம்ப கல்வி பிரிவு தொடங்கப்படும்.
 

2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து தமிழக முதல்வர் உத்தரவு.


            தமிழக சட்டமன்றத்தில் பேரவை விதி 110-ன் கீழ் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் 2013-14ம் கல்வியாண்டில் புதியதாக 54 தொடக்கக் பள்ளிகள் துவக்கவும், அப்பள்ளிகளுக்கு தேவைகேற்ப ஒரு தொடக்கப்பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் 54 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 54 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தவும்.
   
 

Flash News : 2013-14 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு


                 தமிழக முதலைமைச்சர் இன்று சட்டசபையில் வெளிட்ட அறிக்கையில் 2013-14 ஆம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் ஆகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து வரும் பொது மாறுதல் கலந்தாய்வில் இந்த புதிய பள்ளிகளில் உள்ள பணியிடங்களும் காலிப் பணியிடங்களாக காட்டப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அறங்காவலர் வங்கியாக (Trustee Bank) 01.07.2013 முதல் Axis Bank என்ற தனியார் வங்கியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு

          

                    01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமான முடிவினை இடைக்கால  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர் வங்கி) ஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA  ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது.
 
 

                 வருகின்ற 01.07.2013 முதல் TRUSTEE BANK (அறங்காவலர் வங்கி) ஆக  வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதிய நிதியை கையாளும் வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில் ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி உள்ளது.அதை கையாளும் உரிமை AXIS வங்கிக்கே உள்ளது

             கடந்த  சிலஆண்டுகளுக்கு  முன்  பலஅமெரிக்கதனியார்வங்கிகளில்  3 லட்சம்கோடிரூபாய்ஓய்வூதியநிதிதிவால்ஆகிவுள்ளநிலையில் PFRDA -ன் TRUSTEE -BANK  (அறங்காவலர்வங்கி) ஆக  தேர்வுசெய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின் முதல் படியாகும் .பல்வேறுநாட்டுடைமைவங்கிகளுக்குபின்னடைவுஏற்படுத்தும்.

PG TRB 2012 தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 23, 24–ந்தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

             முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடப்பிரிவுகளில் தமிழ்வழி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 23, 24–ந் தேதிகளில் சென்னை உள்பட 7 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.


ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி - ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தஒரு பயிற்சி மையத்திலும் கலந்துகொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

click here to download the SCERT proceeding for cce std 9 - teachers traning

குறிப்பு : ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தவொரு பயிற்சி மையத்திலும் ஆசரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

           

                      மாவட்ட கல்வியியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் - 2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி 3 சுற்றுகளாக (23&24 / 27&28 / 29&30.5.13) நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தஒரு பயிற்சி மையத்திலும் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சியில் ஒரு சுற்றுக்கு 40 ஆசிரியர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர்.

           மேலும் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி 18.5.13 அன்று நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 


ஒரே பள்ளியில் 3 ஆண்டுக்கு மேல் வேலை பார்த்தால் டிரான்ஸ்பர் : அரசு உத்தரவு வெளியீடு - நாளிதழ் செய்தி

   
             அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவு இந்த ஆண்டும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:  

மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது


           "மாணவர்கள் மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வருவதால், இன்றைய ஆசிரியர்கள், பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு போர்டு உறுப்பினர் கோகிலா தங்கசாமி பேசினார்.

பிளஸ்–2 முடிக்காமல் பட்டப்படிப்பை படித்ததாக குற்றச்சாட்டு, தலைமை ஆசிரியரின் பதவி உயர்வை திரும்பப் பெற்ற அதிகாரியின் நடவடிக்கை ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


               பிளஸ்–2 படிக்காமல் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை திரும்பப் பெற்ற கல்வி அதிகாரியின் நடவடிக்கையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மார்க் ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்: மாணவர்களுக்கு முதல்பட்டதாரி சான்று


                ப்ளஸ் 2 முடித்த மாணவர்களில், முதல் பட்டதாரி சான்றுக்காக, வரும், 27ம் தேதி வழங்கப்படும் மதிப்பெண் சான்றுக்காக காத்திருக்க வேண்டியதில்லை, என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

ரஷ்யாவில் தமிழைக் கௌரவித்த ரஷ்ய அதிபர் மாளிகை!


              Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை) தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)
 

உயர்கல்விக்கு தடை போடும் வறுமை: தவிப்பில் முதல் ரேங்க் மாணவி


            கொட்டாம்பட்டி அருகே வெள்ளாலபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றும் வறுமையால் உயர்கல்வி பயிலமுடியாத நிலையில் உள்ளார்.
 
 

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்

           அரசுப்பணியாளர் தேர்வு வினாத்தாளில், திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்து, அடியை கொடுத்து, "மேற்கோள் காட்டுதல்" என்ற ரீதியில் கேள்வி கேட்கப்படும். திருக்குறளில், ஆறு சீர்கள் கொடுத்து, விடுபட்ட சீர், கேள்வியாக கேட்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் அடுத்த வாரம் முதல் வழங்கல்


               ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அடுத்த வாரத்தில் இருந்து வழங்கப்பட உள்ளன. கடந்த கல்வி ஆண்டு நிலவரப்படி, 625 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive