Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Moblie Calls without Balance
பேலன்ஸ் இல்லாத சமயத்திலும் மொபைலில் Call செய்ய முடியுமா....?
மொபைலில் பேலன்ஸ் இல்லாத தருவாயிலும் எப்படி
போன்கால் செய்வது என்பதன் தகவலை இங்கே பார்க்காலம். அதற்கு குறிப்பிட்ட
எண்கள் கொடுக்கப்படுகின்றன.
ஆசிரியர் தகுதி தேர்வான, டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும்' என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த
ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த,ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம், 22
ஆயிரத்து 500 பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு - இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் இறப்பு / இயலாமையால் ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை பெற தற்காலிகமாக அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவு
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்
ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறித்து மக்களவையில்
எழுப்பப்பட்ட கேள்வியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு
ஸ்ரீ நமோ நாராயன் மீனா அவர்கள் அளித்த பதில் உரையில், ஏற்கெனவே பழைய
ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய விதிகளின் படியே புதிய
பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களில் இறப்பு / இயலாமை
ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர் / ஊழியர்
குடும்பங்களுக்கு பணிக்கொடை தற்காலிகமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது
என்றும், ஓய்வூதியத்தில் மட்டும் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டதே தவிர
பணிக்கொடை மற்றும் ஏனைய பலன்களில் எவ்வித மாற்றமும் மத்திய அரசு
செய்யவில்லை என்று நேற்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்த மத்திய
அரசு சுற்றறிக்கை எண்.38/41/06-P & PW(A) நாள்.5.5.2009 அன்றைய
தேதியில் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ.
ஆகிய தொழில் படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் (முதல்
தலைமுறை) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக்
கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளித்து
வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவதில் இழுபறி: இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம் - Dinamalar
தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக
உட்படுத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்
சங்கம் முடிவு செய்துள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று வினியோகம்
நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்,
இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள்
இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மாணவர்களே... உங்களின் மூளை பன்முகத் திறன் வாய்ந்தது!
நமது சமூகத்தை ஒரு மோகம் ஆட்டிப் படைக்கிறது. அது, இன்ஜினியரிங்
தொழில்நுட்ப மோகம். இன்றைய காலத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம்,
தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மூளையுடனேயே பிறக்கின்றன என்பது பெற்றோர்
உள்ளிட்ட பலரின் நினைப்பு.
ஒரு பயோமெடிக்கல் இன்ஜினியர் என்ன செய்கிறார்?
மனித உடல்நலத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
தொடர்புடைய மருத்துவம் மற்றும் உயிரியல் ஆகியவற்றிலுள்ள சிக்கல்களை
தீர்த்தல் அல்லது தொடர்புடைய உபகரணங்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை, பயோமெடிக்கல் இன்ஜினியர் மேற்கொள்கிறார்.
டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி: முன்பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-4,
குரூப்-2,வி.ஏ.ஓ., தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இலவச
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தேர்வர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் மரணம்
புகழ் பெற்ற அறிவியல் எழுத்தாளரும் ரபீந்திரா புரஸ்கார் விருது பெற்றவருமான ஆருப் ரத்தன் பட்டாச்சார்யா காலமானார்.
"ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி மாணவர்கள் சேர்க்கை"
"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ம் தேதி திறப்பு
மாணவர்களின் கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 20ம் தேதி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
8% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்
இன்று உத்தரவிட்டார். இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது
80% ஆக உயர்ந்துள்ளது.
"அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை வரும் ஆண்டு துவங்கும்"
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ.,யின், கொள்கையால்,
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்க, கால தாமதம் ஏற்படுகிறது, என,
வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.