தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், ஒன்பதாம்
வகுப்புக்கும், முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை
அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட மாநில அளவிலான பயிற்சி முகாம்
சென்னையில் நடக்கிறது.
என்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் ஜூன் 21ம் தேதி
முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலை., துணைவேந்தர்
(பொறுப்பு) காளிராஜ் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்
ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை குறித்து மக்களவையில்
எழுப்பப்பட்ட கேள்வியின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் மாண்புமிகு
ஸ்ரீ நமோ நாராயன் மீனா அவர்கள் அளித்த பதில் உரையில், ஏற்கெனவே பழைய
ஓய்வூதியத் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய விதிகளின் படியே புதிய
பங்களிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்களில் இறப்பு / இயலாமை
ஆகிய காரணங்களால் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் ஊழியர் / ஊழியர்
குடும்பங்களுக்கு பணிக்கொடை தற்காலிகமாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது
என்றும், ஓய்வூதியத்தில் மட்டும் தான் மாற்றம் கொண்டுவரப்பட்டதே தவிர
பணிக்கொடை மற்றும் ஏனைய பலன்களில் எவ்வித மாற்றமும் மத்திய அரசு
செய்யவில்லை என்று நேற்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்த மத்திய
அரசு சுற்றறிக்கை எண்.38/41/06-P & PW(A) நாள்.5.5.2009 அன்றைய
தேதியில் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில், அனைத்து வகை பள்ளிகளுக்கும்,
ஏப்ரல் 21ம் தேதி முதல், ஜூன் 2ம் தேதி வரை, கோடை விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறைக்கு பள்ளிகளில் உள்ள
ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் விடுமுறையில் இருப்பர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ.
ஆகிய தொழில் படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் (முதல்
தலைமுறை) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக்
கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளித்து
வருகிறது.
ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு
கட்டுரை எழுத சொன்னார் தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்",
என விரும்புகிறீர்கள் ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு
கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.பில்.,
மற்றும் பிஎச்.டி., ஆய்வு பட்டங்களை தரப்படுத்தும் வகையிலான சில கண்டிப்பான
முடிவுகளை யு.ஜி.சி., மேற்கொண்டுள்ளது.
"சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால்
ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க முடிந்தது,' என, அகில இந்திய அளவில், 7வது
இடத்தில் வெற்றி பெற்ற மதுரை டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்
வினாத்தாள் மையங்களில் வழங்கப்படும் என்பதால் தலைமையாசிரியர்கள் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வி
இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு 15ம்
தேதி முதல் ஆரம்பமாகிறது. இப்பணியில் ஈடுபட பட்டதாரிகள், மாணவர்கள்,
ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக
உட்படுத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்
சங்கம் முடிவு செய்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்,
இன்று (மே 4) முதல், தமிழகம் முழுவதும், 59 மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் பொறியியல் இடங்கள்
இருப்பதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனம் சார்பில் 2013-14ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE
நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறையிலுள்ள அனைத்து அனைத்து மாவட்ட CEO,
SSA CEO, DIET PRINCIPAL, DEO, DEEO, IMS ஆகிய அலுவலர்களுக்கு பயிற்சி
நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது.
நமது சமூகத்தை ஒரு மோகம் ஆட்டிப் படைக்கிறது. அது, இன்ஜினியரிங்
தொழில்நுட்ப மோகம். இன்றைய காலத்தில், பிறக்கும் குழந்தைகள் எல்லாம்,
தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மூளையுடனேயே பிறக்கின்றன என்பது பெற்றோர்
உள்ளிட்ட பலரின் நினைப்பு.
மனித உடல்நலத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
தொடர்புடைய மருத்துவம் மற்றும் உயிரியல் ஆகியவற்றிலுள்ள சிக்கல்களை
தீர்த்தல் அல்லது தொடர்புடைய உபகரணங்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை, பயோமெடிக்கல் இன்ஜினியர் மேற்கொள்கிறார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-4,
குரூப்-2,வி.ஏ.ஓ., தேர்வுகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் இலவச
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தேர்வர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
"பொறியியல் கல்லூரிகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர்
சேர்வதற்கான, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம்
கோர்ட்டில், தமிழக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த
வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என,
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
"ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), குறைந்தபட்ச மதிப்பெண்களை
குறைப்பது தொடர்பான கோரிக்கையை, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை
அறிவிப்பார்" என, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
பிளஸ்–2 தேர்வு முடிவு 9–ந்தேதி
வெளியிடப்படுகிறது. அன்று முடிவுகளை தெரிந்துகொள்ள அரசு இணையதள முகவரிகள் 4
அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம்பேர் பிளஸ்–2
தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி
இருக்கிறார்கள்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
8% அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்
இன்று உத்தரவிட்டார். இதையடுத்து தற்பொழுது 72% ஆக உள்ள அகவிலைப்படியானது
80% ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர்
தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில்
தகுதித் தேர்வு நடக்கும் என சூசகமாக கூறப்பட்டது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ.,யின், கொள்கையால்,
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்க, கால தாமதம் ஏற்படுகிறது, என,
வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி பயிலும், ஆறு முதல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வரையிலான மாணவ, மாணவியருக்கு, "ஜாமின்ட்ரி பாக்ஸ்" வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளிக்கல்வித்துறை
சார்பில் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.