Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 47 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை


       புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த 47 ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. 2003 ஏப்.1க்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 

முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடாததால் பெற்றோர் கவலை


            பெரும்பாலான மாவட்டங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தவிர்த்து, இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படவில்லை. இதனால், கோடை விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பெற்றோர், கவலையில் ஆழ்ந்துள்ளனர்.


பிளஸ் 2 முதன்மைத் தேர்வுகளை கண்காணிக்க 4,000 பேர்!


           தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடங்களில், 43 மாணவர்கள், "பிட்" அடித்து பிடிபட்டனர்.


துவக்கப் பள்ளி மாணவர் வாசிப்புத்திறன் குறைவு: இணை இயக்குனர் ஆய்வில் அதிர்ச்சி - Dinamalar


           "துவக்கப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை, ஏப்ரல் மாதத்துக்குள் அதிகப்படுத்த வேண்டும். இல்லையெனில், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குனர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் வெளிநாடு செல்ல பல்கலைக்கு தலா ரூ.20 லட்சம்: அமைச்சர் பழனியப்பன்


         ""வெளிநாடு சென்று, மாணவர்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள, ஒவ்வொரு பல்கலைக்கும் ஆண்டுதோறும் தலா 20 லட்ச ரூபாய் அரசு ஒதுக்குகிறது,'' என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.

சிலம்பம்: அரசு பள்ளி மாணவன் சாதனை


                திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர், சிலம்பத்தில் பதக்கங்களை குவித்துள்ளார்.


பள்ளி மாணவர்களுக்கு காப்பீட்டு திட்டம் கிடைக்குமா?


         கேந்திர வித்யாலயா பள்ளிகளை போல், தமிழக பள்ளி மாணவர்களுக்கும் காப்பீடு (இன்சூரன்ஸ்) திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற, எதிர்பார்ப்பு பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.


உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் கைது


        சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.மேலும் உண்ணாவிரத பந்த‌லுக்கும் சீல் வைக்கப்பட்டது.


வானவில் ஔவையார் எழுத்துருவை பயன்படுத்தி தட்டச்சு செய்ய எளிய வழி


          தமிழக அரசு அலுவலகங்களிலும், கல்வித்துறையிலும் அலுவலக ரீதியிலான தகவல் தொடர்புகள் மற்றும் டாக்குமென்ட்களில் வானவில்-ஔவையார் எழுத்துரு பயன்படுத்தப்படுகிறது.
          இது ஒரு தனியார் நிறுவனத்தின் எழுத்துரு ஆகும். இதனை தட்டச்சு செய்ய அவர்களது நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பொதுவாக இந்த மென்பொருளை வாங்குவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் இல்லை. இதனால் அரசு அலுவலகங்கள் கிராக் செய்யப்பட்ட மென்பொருளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. கிராக் செய்யப்பட்ட மென்பொருளும் வின்டோஸ் 7 இயக்கச்சூழலில் வேலை செய்வது இல்லை.

வேறு இலவச மாற்று வழி இருப்பின் அரசு அலுவலகங்களுக்கு மிகவும்பயனுடையதாக இருக்கும். என்.எச்.எம் ரைட்டர் இதற்கு மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. (ஆமாம்! யுனிகோடுக்கு மாற வேண்டியது தானே!)

என்.எச்.எம் ரைட்டரை வானவில் ஔவையார் எழுத்துருவை தட்டச்சு செய்ய பயன்படுத்துதல்.

TPF to GPF Proposal - Always Available our Padasalai Site in Forms & Proposals Tab


           அன்புள்ள ஆசிரியர்களே நீங்கள் முன்னதாக TPF இல் இருந்து தற்போது GPF இல் தொடர விரும்புகிறீர்களா? 

இதோ உங்களுக்காக மிக அறிய Proposal 




"மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்"


     "மக்களிடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்" என கருத்தரங்கில் தெரிவிக்கப்ட்டது.


வறுமையே தடைக்கல்லாய் முன் நிற்கிறது


           கால்பந்தாட்ட போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதிக்கத் துடிக்கும், சேலம் மாணவிக்கு பொருளாதார ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவிக்கரம் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில், 106 வயது மூதாட்டி, தன் பள்ளி சான்றிதழை, பல ஆண்டுகளுக்கு பின் பெற உள்ளார்.



        அமெரிக்காவில், 106 வயது மூதாட்டி, தன் பள்ளி சான்றிதழை, பல ஆண்டுகளுக்கு பின் பெற உள்ளார்.



மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .




(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))

           நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. 

அரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக




         போட்டோஷாபில் ஆர்வம் உள்ளவர்கள்  இது போன்ற அருமையான 3D அனிமேஷன் மென்பொருள்களை கற்றுக்கொள்ளலாம். இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இதனை முழு பதிப்பாக  இலவசமாக பெறுவதை இங்கே பார்ப்போம்.


 
முதலில் அரோரா 3D அனிமேஷன் மேக்கர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை


               கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களை இடைநிறுத்தம் செய்தல் -தினமலர் செய்தி எதிரொலி-விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப கோரும் பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை 



விடைத்தாள் திருத்துவதில் தவறு ஆசிரியர்களுக்கு அபராதம்


         எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை, அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


12 வயதில் குழந்தைப் பருவம் முடிந்துவிடுகிறது: ஆய்வுகள்

       வளர் இளம் பருவத்தை எட்டுவதற்குள் தங்கள் குழந்தைகளின் குழந்தைப் பருவம் முடிந்துவிடுவதாக மூன்றில் இரண்டு பங்கு பெற்றோர்கள் ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.  
 

மஞ்சள் காமாலை உருவாகக் காரணம் மற்றும் தீர்வு


 
 
       பொதுவாக மஞ்சள் காமாலை நோய் பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

விண்வெளி வீரருக்கான உணவுகள்


220px-Russian_space_food
220px-AstronautsEatingBurgers
 
          1960 களிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப்புவதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுவிட்ட போதிலும், விணவெளியில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பொருத்தமான உணவினை தயார் செய்வதில் அவர்கள் சிக்கல்களையே
எதிர்கொண்டனர்.
 

இந்தி, உருது மொழிக்கல்வியின் நன்மைகள்


        இந்தியாவில் ஏராளமான மொழிகள் பேசப்படுகின்றன. வடமொழிக் குடும்பம் மற்றும் திராவிட மொழிக் குடும்பம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிந்துள்ள அம்மொழிகளில், பல்வேறான வேலைவாய்ப்புகள் உள்ளன.

பிளாஸ்டிக் அழிக்க ஆராய்ச்சி: பேராசிரியருக்கு விருது


         மக்காத பிளாஸ்டிக் கழிவுகளான கேரிபேக், வாட்டர் பாட்டில்களை, நுண்ணுயிரை பயன்படுத்தி சிதைவடைய செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி கண்ட மதுரை போராசிரியர் வி.பிரபாகரனுக்கு, டில்லி விஞ்ஞானிகள் அமைப்பு சார்பில் அச்யூமென்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு நேரில் கற்றுத் தருவதை விட, கம்ப்யூட்டர் மூலம் கற்பித்தல் எளிமையாக புரியும்படி உள்ளது


        பள்ளிப் பாடத்தை, கம்ப்யூட்டர் வழியில் கற்றுத் தருவதற்கான செயல் திட்டங்களுக்கு, தேசிய கற்பித்தல் விருது வழங்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களிடம் இருந்து, செயல் திட்டங்கள் வரவேற்கப்பட்டன.

பொதுவான பாடத்திட்டங்கள், முன்னேற்றத்திற்கு உதவாது: யு.ஜி.சி


        "நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் என்பது, முன்னேற்றத்திற்கு உதவாது. ஒவ்வொரு பகுதியிலும், அங்குள்ள தேவையை அறிந்து, அதற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி, கல்வியை வழங்கினால் தான், நாடு முன்னேறும்" என, பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் (யு.ஜி.சி) வேத் பிரகாஷ் பேசினார்.

பழங்குடியின மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பயிற்சிகள்


          முதுமலை கார்குடியில் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகம் கார்குடியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் அனைத்து மாணவர்களும், பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்.


01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.

 

       01.01.2012 ன் படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நாளை (09.03.2013) அந்ததந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களில் காலை 10.00மணியளவில் நடைபெறுகிறது.

சான்றிதழ்கள், ஓய்வூதியம் வழங்க இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம்


            பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட, பொதுமக்களுக்கான சேவைகளை, குறித்த நேரத்தில் வழங்காமல், இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு, கடிவாளம் போடப்பட உள்ளது. சேவைகளை குறித்த நேரத்தில் வழங்காத அதிகாரிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.


தேசிய அளவில் இலவச "ரோமிங்': அக்டோபருக்கு முன் அமலாகிறது!



           மொபைல் போன் வாடிக்கையாளர்கள், நீண்ட நாட்களாக எதிர் பார்த்த, தேசிய ரோமிங் வசதியை, அக்டோபர் மாதத்திற்கு முன், அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்க மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

 

        அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இருக்க மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தி சொல்லப்படுகிறதா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலம் 2ம் தாள் தேர்வு: 12 மாணவர்கள் சிக்கினர்


         பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த ஆங்கில இரண்டாம் தாள் தேர்வில், 12 மாணவர்கள், பிட் அடித்து, பிடிபட்டனர். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை, 66 மாணவர்கள் பிடிபட்டு, தேர்வுத்துறையின் தண்டனை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

செய்முறை வகுப்பு: 10ம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு சிக்கல்


         செய்முறை வகுப்புக்கு விண்ணப்பிக்க தவறிய, பத்தாம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்கள், உடனடி தேர்வு எழுத, ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive