2. BRT ( கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின் BRT யாக யாரும் நியமிக்கப்படவில்லை. அதே நேரம் வருடா வருடம் BRT இல் குறிப்பிட்ட சதவீதம் பள்ளிக்கு பனி மாறுதல் பெற்று செல்கின்றனர். எனவே காலி பணியிடம் நிறைய உள்ளது)
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
"பள்ளி மாணவர்களை மதிய உணவு இடைவேளையின்போது, வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம்" என பெற்றோர், பள்ளி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு காரணம் என்ன, எங்கு இந்த கோரிக்கை என்றால், வழக்கம் போல, வெளிநாட்டில் தான்.
D.TEd பட்டயம் +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.Ted +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது .முழு தீர்ப்பின் நகல்
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை, தேர்வுத்துறை துவக்கியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் உள்ளிட்ட முழு விவரங்கள் அடங்கிய பட்டியலை, இம்மாதம், 30ம் தேதிக்குள், தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி
துறை சார்பில் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா
நேற்று நடந்தது. பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார். பள்ளிக்கல்வி
துறை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.
TET - மறுதேர்வில் 1112 நபர்கள் மட்டுமே Paper 1 மற்றும் Paper 2 என இரண்டிலுமே வெற்றி பெற்று உள்ளார்கள். இவர்கள் அனைவரும் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மட்டுமே முன்னுரிமை தந்து இருப்பார்கள் என்பதால் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு மேலும் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறோம்.
சென்னை: இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளி கல்வி துறையால் அனைத்து பள்ளிகளின் காலி பணியிட விவரம் சேகரிக்கப்படுகிறது.
எனவே TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், இணைய தளத்தில் பட்டியல் வெளியாகி உள்ள Watchman & Sweeper ஆகியோருக்கும் விரைவில் பனி நியமன கலந்தாய்வு நடைபெறும் எதிர் பார்க்கப்படுகிறது.
TET மதிப்பெண் சலுகை கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
ஆனால் மிக குறைந்த நபர்கள் தேர்ச்சி பெற்ற போதே மதிப்பெண் சலுகை தராத அரசு தற்போது குறைக்க வாய்ப்பு குறைவு என கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அரசு தெளிவாக அரசாணை வெளியிட்டு படிப்படியாக செயல்படுவதால் நீதிமன்றம் எந்த அளவிற்கு இதில் தலையிடும் என்பது கேள்வி குறி. மேலும் இது போன்ற வழக்குகள் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பனி நியமனத்தில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும்.
பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.