குரூப் 2 தேர்வு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,472 பேருக்கு வரும் 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான 6,695 பதவிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினர்.