Quarterly Exam Questions 2024
Latest Updates
கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!
மத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம்,
தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை
நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய
மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள்
பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வித்துறை
அரசு தொழில்நுட்பத் தேர்வை நடத்தாமல், கல்வித்துறை தாமதப்படுத்தி
வருகிறது.கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பத் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன. இதில் ஓவியத்தில் 10 தேர்வுகள், தையலில் 4, நடனம்,
இசையில் தலா 3 தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி
அடைந்தோர் எழுதலாம்.2012 வரை டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறைக்கு 25 பள்ளிகள் தேர்வு!
தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம் சார்பில், முதற்கட்டமாக, காஞ்சிபுரம்
மாவட்டத்தில், 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி
முறை துவங்கப்பட உள்ளது. இதற்காக, அப்பள்ளிகளில், கணினி வசதிகள் குறித்து,
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில்,
2013ம் ஆண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், 'கனெக்டிங் கிளாஸ்' கல்விமுறை
அறிமுகப்படுத்தப் பட்டது.
பக்ரீத் பண்டிகை வரலாறு-தியாகத் திருநாள்
(Eid al-adha, அரபு: عيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக
அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த
பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான
இப்ராகிம்நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய
மாதம் துல்ஹஜ் (Dul Haji) 10-ம் நாள் இது கொண்டாடப் படுகின்றது.
அன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்!
கல்லும் மலையும் கடந்து வந்தேன்; பெருங்காடும், செடியும் கடந்து வந்தேன்!
ஆசிரியர் குருமூர்த்தி, கற்றலில் பின்தங்கியிருந்த அரசுப்பள்ளி ஒன்றை
செயல்வழிக் கற்றலின் மூலம், மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக
மாற்றியவர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப்
பாடங்களையும் முழுமையான காணொலியாக மாற்றியவர்.
TNTET Paper 2 - Previous Year Questions Free Online Tests
Paper 2 [2012 Previous Year Questions - Free Online Tests]
English Medium
- TNTET Paper2 Free Online Test For 2012 - 1st Exam (English Medium - Maths & Science) - Click Here
- TNTET Paper2 Free Online Test For 2012 - 1st Exam (English Medium - Social Science) - Click Here
Tamil Medium
TNTET Paper 1 - Previous Year Questions Free Online Tests
Paper 1 [2012 Previous Year Question Free Online Tests]
பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.
ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விதிமீறி ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு தேனி தொடக்க கல்வி அலுவலகம் முற்றுகை.
ஆசிரியர்கலந்தாய்விற்கு பிறகு விதிகளை மீறி பணி மாறுதல், பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்
நடத்தினர்.தேனி மாவட்ட தொடக்க கல்வித் துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு
கடந்த மாதம் நடந்தது.
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 தொடக்கப் பள்ளிகள் - முதல்வர் ஜெயலலிதா
தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 39 அரசுத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்
என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் இதுதொடர்பாக அவர்
புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு' - அமைச்சர் கே.சி.வீரமணி
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை
குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும்
கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர்
கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித
நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு
தீர்மானம் கொண்டு வந்தனர்.
இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு
பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு
சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி
நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை
ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி,
தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை
கண்டுபிடித்துள்ளனர்.
தேசிய மல்யுத்தம்பழநி வீரருக்கு தங்கம்
தேசியஅளவிலான மல்யுத்தப் போட்டியில் பழநியாண்டவர் கலை கல்லுாரி மாணவர்
பி.பிரதீப்குமார் தங்கம் வென்றார்.இவர் திருச்சி யில் நடந்த தேசிய அளவிலான
மல்யுத்த போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பெற்று தங்கம் வென்று
உள்ளார்.
இதன்மூலம் வங்கதேசத்தில் நடக்கவுள்ள சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியா
சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். அவரை கல்லுாரி முதல்வர்
அன்புச்செல்வி, வரலாற்றுத் துறை தலைவர் ரவிச்சந்திரன் மற்றும்
பேராசிரியர்கள் பாராட்டினர்
ரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தில் 1,054 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட 1,263 கோடியே 53 லட்சம்
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு
பேசிக் கொண்டிருக்கும்போது இடையே அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு
வழங்க இயலாது என தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. Call
Drop எனப்படும் இந்தப் பிரச்னையில் என்ன செய்யலாம் என பொதுமக்கள்
உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் தொலைத் தொடர்பு கண்காணிப்பு ஆணையமான TRAI
கருத்துகேட்டிருந்தது.