Quarterly Exam Questions 2024
Latest Updates
மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு 12,149 பேர் எழுதுகின்றனர்
மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு இன்று
நடக்கிறது. 89 பணியிடத்துக்கு 12,149 பேர் தேர்வு எழுதுவதாக டிஎன்பிஎஸ்சி
தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மகப்பேறு மற்றும் குழந்தை நல
சுகாதார அலுவலர் பதவியில் 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை
கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி
பள்ளி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல்,
தொழில்நுட்ப போட்டி நடைபெறுகிறது. சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான்
பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப்
போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைத்து அரசு, தனியார்
பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
12th Quarterly Exam Key Answer
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Mr. P.Ilayaraja - Tamil Medium Key
- Physics Quarterly Exam Answer Key 2015-16 | Mr. G.Gobu - English Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. R.Prabagaran - English Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. R.Prabagaran - Tamil Medium Key
- Maths Quarterly Exam Answer Key 2015-16 | Mr. E. Rajesh Kumar - Tamil Medium Key
10th Maths Quarterly Exam Model Question
- Maths Quarterly Exam Model Question Paper 1 (2015-16) | Mr. P.Thirukumaresa Kani - English Medium
- Maths Quarterly Exam Model Question Paper 1 (2015-16) | Mr. P.Thirukumaresa Kani - Tamil Medium
தமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே
தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்
பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின்
ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது.
தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்: வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது நிதியமைச்சகம்
தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு
விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம்
வெளியிட்டுள்ளது.இதன்படி தங்கத்தின் எடைக்கு இணையான
விலை மதிப்புள்ள பத்திரங்களை அரசு வெளியிடும். 2,5,10 கிராம்கள் அல்லது
இதற்கு அதிகமான எடைக்கு இணையான விலையில் இந்த பத்திரங்கள் இருக்கும்.
சர்வதேச தங்கக் கடன் சந்தை நிலவரத்திற்கேற்ப இப்பத்திரங்களுக்கு வட்டி
நிர்ணயிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டம்: கிடைக்ககூடிய வருமானம்… முக்கியஅம்சங்கள்…. சிறப்பு பார்வை
உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித்
தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு
அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில்
எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது
பார்க்கலாம்.
ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி! அக்.6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்…
தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவசப் பயிற்சியில் சேர
விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.2016-ம்
ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு தமிழக
அரசு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மீண்டும் பணி வழங்க வேண்டும்: மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம்
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி
வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்க
வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்
கோரியுள்ளது.
இராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.
மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும்
செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள்
பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்
பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?
அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர்
இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க
வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய
கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி
அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து
வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.
நம் இணைய இணைப்பை தனக்குப் பயன்படுத்தும் விண்டோஸ் 10
உங்களுடைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப்
பதிந்துவிட்டீர்களா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரையும் அதில் உள்ள
இணைய இணைப்பினையும் விண்டோஸ் 10 சிஸ்டம் நீங்கள் அறியாமலேயே பயன்படுத்திக்
கொண்டிருக்கும். அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, விண்டோஸ்
10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட்
“விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச பயன்பாடு” (Windows Update Delivery
Optimization (WUDO) என அழைக்கிறது. இந்த தகவலை, மைக்ரோசாப்ட் நிறுவனம்,
தன் விண் 10 குறித்த கேள்வி பதில்
(http://windows.microsoft.com/en-us/windows-10/windows-update-delivery-optimization-faq)
பகுதியில் தெரிவித்துள்ளது.
REGARDING FAMILY PENSION IN NPS
Family Pension for NPS Employees – A
report states that between April 1994 and April 2004, more than 50 lakh
youths joined Government Services. However, the same dropped to around
33 Lakhs after April 2004. Experts blame the Governments’ decision to
abolish pension for this, which forced the youths to move towards the
corporate sector.
பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்
ஆசிரியர்
கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16
கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள்
விண்ணப்பித்துள்ளனர்.பி.எட்.
படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன்
முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய
2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட்.
படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,பெயர், முகவரி திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
பதினெட்டு வயது பூர்த்தியான புதிய
வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும்,
விடுபட்டோர் தங்கள் பெயரை பட்டியலில் இணைத்துக் கொள்ளவும், வாக்காளர்
பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்யவும், வரும் அக்., மாதம் 20ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்காக
பொதுமக்கள் வீணாக அலையாமல், எங்கு செல்ல வேண்டும், என்ன படிவம், என்ன
ஆவணங்கள் இணைத்து தர வேண்டும் என்பதையும், தேர்தல் கமிஷன் விளக்கமாக
தெரிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு
மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி
தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து
தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும்
குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி.,
சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.
'ஆன்-லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்
ரயில் டிக்கெட்டை, 'ஆன்-லைன்' மூலமாக
முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை,
நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:30
மணி வரை, ரயில் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி,
2010, ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யும்
நேரத்தை மேலும், 15 நிமிடங்கள் அதிகரித்து, ரயில்வே வாரியம்
அறிவித்துள்ளது.
சர்வதேச இன்ஜினியரிங் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கு 151வது இடம்
உலக இன்ஜினியரிங் பல்கலைகள் தரவரிசை
பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கு, 151வது இடம் கிடைத்துள்ளது.
'பிரிக்ஸ்' நாடுகள் பட்டியலில், சென்னை பல்கலை, 78வது இடத்தை
பிடித்துள்ளது.
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா
அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர்
இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க
வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய
கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி
அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து
வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.
இன்று மற்ற வலைதளங்களில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான செய்திக்கு மறுப்பறிக்கை வெளியீடு
நமது வலைதளத்தில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம்
சார்ந்த செய்தி
சார்ந்து… தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின்
தலைமை நிலைய
செயலாளர் திரு,க.சாந்தகுமார்
என்பார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
தான் இப்பொருள்
சார்ந்து இயக்குநரை
சந்திக்கவில்லை என்றும் முழுக்க முழுக்க தவறாக
என் பெயரை
பயன்படுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளது
என்றும் தெரிவித்தார்.
ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு: இ-சேவை மையங்களில் புதிய வசதி
ஆதார் அட்டை வைத்திருப்போர் இ-சேவை மையங்களில் தங்களது இ-மெயில் மற்றும் செல்போன் எண்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர்
அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15
மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை
மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.