மச்சம் உள்ளவனுக்கு மத்திய அரசில் வேலை' என்று புதிதாகச் சொலவடைஉருவானாலும்
ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய
ஆணையம் வந்து 'ஊத' வைத்துவிடுகிறது. மாநில அரசு ஊழியர்களுக்கு இதில்
ஏக்கமும் பொறாமையும் இருந்தாலும், 'இதர வருவாய் இனங்கள்'என்று பார்த்தால்
மாநில அரசு ஊழியர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். (நம்மைச் சொல்லுங்கள்
அன்றாடங்காய்ச்சி!)
Quarterly Exam Questions 2024
Latest Updates
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி
மாநில
கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கக் கல்வி
ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
பல இடங்களில்
வை–பை வசதிகளை ஏற்படுத்தி அதில் மூலம் இணையதள இணைப்புகளை பார்த்து
வருகின்றனர். ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில்
வை–பை வசதி செய்யபட்டு உள்ளது. இதுபோல அலுவலகங்கள், வீடுகளில் வை–பை
வசதிகள் தாராளமாக வந்துவிட்டன.
மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க கற்றலில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்த யோசனை
பள்ளி
மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கற்றலில் நவீன
தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கல்வி
தொடர்பான மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் காலாண்டு தேர்வு பாதிக்கப்படுமா?
ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுவதால், காலாண்டு தேர்வுக்கு,
மாணவர்களை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி
மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,
அனைவருக்கும் கல்வி இயக்ககம் - எஸ்.எஸ்.ஏ., சார்பில், அரசுப்பள்ளி
ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; வேலை நாட்களில் பயிற்சி
வழங்கப்படுகிறது.
மாணவர்கள் குறைவு: சத்துணவு சிக்கல்
தமிழகத்தில் உள்ள, 42 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவர்கள்
சத்துணவு சாப்பிடுகின்றனர். விதிமுறைப்படி, இந்த மையங்களில், தலா, 42
ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், சத்துணவு
சமையலர்கள் என, 1.26 லட்சம் பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 84
ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்; 42 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
'மைக்ரோசாப்ட்' கணி-னி கல்வி50 பள்ளிகளில் துவங்க முடிவு
இந்தியாவில், 50 பள்ளிகளில், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் மூலம் கணினி கல்வி
வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன-.இதற்காக பள்ளி அள வில், 'மைக்ரோசாப்ட்
ஐ.டி., அகாடமியை' துவக்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில்,
காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள்
நடத்தப்பட உள்ளன. 'வெலாசஸ் கன்சல்டிங்' என்ற நிறுவனத்துடன் இணைந்து
இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை
பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க
உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல்
கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு
உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அருண்பிரகாஷ்.
இவர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு
விருதுக்கான (2014-15) கண்காட்சியில் சாதனை படைத்து, தேசிய கண்காட்சிக்கு
தேர்வு கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்: 522 அஞ்சலகங்களில்ஆன்லைன் ஷாப்பிங் வசதி - பொதுமக்களிடம் வரவேற்பு
தமிழகத்தில் பரிசோதனை அடிப் படையில் 522 அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம்
ஷாப்பிங் செய் யும் திட்டம் நடைமுறைக்கு வந் துள்ளது.அஞ்சல் துறையை
லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு
மேற்கொண்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம்
பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை, எம்விகர்ஷா என்ற நிறுவனத்துடன்
இணைந்து தொடங்கியுள்ளது.
அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லஞ்ச புகார் மையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க, 'லஞ்ச புகார் மையம்' அமைக்க
அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை
திருமலாபுரம் டி.கொடிமங்கலத்தைச் சேர்ந்த பி.சடையாண்டி, உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
Special TET / PGTRB - PET Exam Study Material
PET - Study Materials Model Question Paper & Answer Keys.
12th Computer Science Study Materials
New Materials:
Prepared byMr. P.CHANRASEKARAN M.C.A, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE] &
Mr. T.SANKARA SUBBU M.SC, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE]
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு
பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும்
திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரிகள் பள்ளிகளில் காலை, மாலை இறைவணக்கத்தில் திறந்தவெளி
கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ, மாணவியருக்கு விளக்க
வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவியர் பயன்படுத்த செய்ய
வேண்டும்.
TNPSC சார்பில் மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு
மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழகம்
முழுவதும் 3 மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மகப்பேறு மற்றும் குழந்தை நல
சுகாதார அலுவலர் பதவியில் காலியாக உள்ள 89 காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.
எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும் நெசவு தொழிலாளி மகள் தவிப்பு
சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும்,
கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், நெசவுத்
தொழிலாளியின் மகள் தவிக்கிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த,
நரியம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முருகேசன் மகள் கவிதா. இவர், 6ம்
வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை, ஜலகண்டாபுரம் அரசு பள்ளியில்
படித்தார். 10ம் வகுப்பு தேர்வில், 480 மதிப்பெண் பெற்றார்.இதனால்,
மேட்டூரிலுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை இலவசமாக
வழங்கியது.