பகுதிநேர கலை ஆசிரியர் களுக்கான தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித் துள்ளார்.சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதத்துக் குப் பதிலளித்து பேசும்போது கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள்:
Quarterly Exam Questions 2024
Latest Updates
வருகிறது பாடத்திட்டத்தில் மாற்றம்
புதுடில்லி: விலங்குகளிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில்இடஒதுக்கீடு கோரி வழக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.சொக்கலிங்கம்,ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மாற்றுத்திறனாளிகள் சமவாய்ப்பு,உரிமை மற்றும் முழு பங்களிப்பு சட்டத்தின்படி, அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போதும், பதவி உயர்வு வழங்கும்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதஇடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு- அமைச்சசர் அறிவிப்பு
சென்னை:'ஜவகர் சிறுவர் மன்ற பகுதிநேர கலை
ஆசிரியர்கள் மற்றும் திட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படும், மாத
தொகுப்பூதியம், உயர்த்தி வழங்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
வீரமணி அறிவித்தார்.கலை பண்பாட்டுத் துறை சார்பில், சட்டசபையில் அமைச் சர்
வெளியிட்ட அறிவிப்புகள்:● சென்னையில் உள்ள, ஜவகர் சிறுவர் மன்றங்களில்
பணியாற்றும், பகுதிநேரக் கலை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு
வழங்கப்படும் தொகுப்பூதியம், 2,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக
உயர்த்தி வழங்கப்படும்.
போராட்டத்தில் பங்கேற்ற Part Time Teachers பட்டியலை திரட்டும் அரசு
பணி நிரந்தரம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பகுதி நேர
ஆசிரியர்கள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திரட்டி வருவதால்
பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழக பகுதி நேர
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசின் கவனத்துக்கு எடுத்து
செல்லும் வகையில் கடந்த 31ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம்
முழுவதும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், எந்தெந்த பகுதிகளில் யார்? யார்?
பங்கேற்றனர் என உளவுத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தகவல்களை
திரட்டி வருகிறது.
499 தொடக்க பள்ளிகள் புதிதாக துவக்க திட்டம்.
சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான வாதத்தின் போது, நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்து, கொள்கை விளக்க குறிப்பு தாக்கல்
செய்யப்பட்டது.
பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்
பிஎட் மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக உயர்கல்விதுறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
தமிழகத்தில் உள்ள 672 பிஎட் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப
விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. வரும் 10ம் தேதி வரை விண்ணப்ப
விநியோகம் நடைபெறும்.
TET COURT NEWS: உச்சநீதிமன்றம் டி.இ.டி வழக்கில் வின்சென்ட்டுக்கு நோட்டீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
01.09.2015 நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளில் இந்த 5 சதவீத மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய காரணமான திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் அவர்களின் பதிலை அறியும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது...
இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
TET ARTICLE : ஆசிரியர் தகுதித்தேர்வின் இழுபறிக்கு காரணம் என்ன? அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் முந்தைய விவரம் :
தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது, பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் திடீரென்று 5சதவீத இடஒதுக்கீடும் வெயிட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.. அதில் வெயிட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது, அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செய்து உத்ததரவிட்டது ....
Flash news ஆசிரியர் தகுதித் தேர்வு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- இன்று 01.09.2015 வெயிட்டேஜ் தெடர்பான வழக்கு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு ரத்து குறித்த தமிழக அரசு மேல் முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் வந்தது
- இதில் வெயிட்டேஜ் தடை வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து லாவன்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரனைக்கு வந்தது
TNPSC : இன்னும் ஒரு வாரத்தில் குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள்
1241 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் தெரிவித்தார்.
தேசிய நல்லாசிரியர் விருது: 25 ஆசிரியர்கள் தேர்வு
தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தில் இருந்து 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்
இன்று நடக்கவிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்தினால், பள்ளிகள் செயல்படுவதில் தடை ஏற்படாது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செப்.8-இல் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலான ராணுவப் பள்ளி கேட்டு மத்திய அரசுக்கு மாநிலங்கள் கடிதம்: 'தமிழகத்திடம் இருந்து கோரிக்கை இல்லை'
கூடுதலான ராணுவப் பள்ளிகள் கேட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 15
மாநிலங்களின் அரசுகள் கடிதம் எழுதியுள்ளன. ஆனால், இப்பட்டியலில் தமிழகம்
இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.