Quarterly Exam Questions 2024
Latest Updates
செப்., 2 ல் மத்திய அரசு ஊழியர் ஸ்டிரைக் மத்திய சம்மேளனம் தகவல்
'14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 2
ல் நாடு தழுவிய ஸ்டிரைக்கில் பல லட்சம் பேர் பங்கேற்பர்,'' என, மதுரையில்
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில அமைப்பு செயலாளர் ஷியாம் நாத்
தெரிவித்தார்.
CTET: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்
மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம்
முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய
விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள்
இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு
பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப்
பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள்
அதிகம்..? என்ன அவை..?
அடுத்த மாதத்தில் 7,000 நர்ஸ்கள் பணி நியமனம் ஆணை
'தேவை கருதி, அரசு மருத்துவமனைகளுக்கு, புதிதாக, 7,243 பேர்,
தொகுப்பூதிய அடிப்படையில் நர்ஸ் பணியில் சேர்க்கப்படுவர்' என, அரசு
தெரிவித்தது. இதற்கான தகுதித்தேர்வு, ஜூனில் நடந்தது. இதில், தேர்வு
செய்யப்பட்டோருக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி.,
சான்றிதழ் சரி பார்ப்பு பணியை, கடந்த வாரம் முடித்தது.
இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர்
யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில்
சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. 71
நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை
எழுதவுள்ளனர். கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், 'சிசாட்' என்ற
திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
வாட்ஸ் அப் டிப்ஸ்
வாட்ஸ்
அப் செயலி தொடர்ந்து தன்
பயனாளர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே
செல்வதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது. டெக்ஸ்ட் அனுப்புவது, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது
போன்ற புதிய வசதிகள், பலரை
இதன் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
இறுதியாகத் தெரிந்த வரை, 80 கோடி
பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி
வருகின்றனர்.
TET Teachers Appointment - கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்
கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு
தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு
பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.
1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் : பணி நிரவலில் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி
தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390
ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு
பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த,
8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு, பல
கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376
பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னையில் அதிகக் கட்டணம் எந்தப் பள்ளிக்கு?:
இதுவரை
கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மிக அதிகமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள
நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2
வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல,
இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு
ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்
டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு
படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ.,
முடிவு செய்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த,
வரைவு திட்டத்தையும் அறிவித்துள்ளது.
வகுப்பு புறக்கணிப்பு: பேராசிரியர்கள் முடிவு
அரசு கல்லுாரிகளில் பணியாற்றும், 2,000
பேராசிரியர்களுக்கு, மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால்,
பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கணினி மூலமே வருமான வரி 80 வயதினருக்கு உத்தரவு
வருமான வரி கணக்கை, கணினி மூலம் தாக்கல்
செய்வது, 80 வயது உட்பட்டோருக்கு கட்டாயம்' என, வருமான வரித்துறை
அறிவித்துள்ளது.வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மதிவாணன் வெளியிட்டுள்ள
அறிக்கை:
பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை
பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற
நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க,
விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10
உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள்
குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.