அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில், பொருட்காட்சி மற்றும்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சி
அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரிட்டிஷ்
கவுன்சில் மூலம், ஆங்கில பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக அரசு
தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், தனியார் நர்சரி
மற்றும் பிரைமரி பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 'அரசு பள்ளியில் ஆங்கில
கல்வி சரியாகக் கிடைப்பதில்லை' என, பெரும்பாலான பெற்றோர் புகார்
கூறியுள்ளனர்.
குழந்தைகள் மொழி அறிதலை அளவிடும் ஜெர்மன் கருவி
காந்திகிராம பல்கலையில் ஜெர்மன் கருவி மூலம் குழந்தைகளின் மொழி அறிதல்
திறன் அளவிடப்பட்டு, மேம்படுத்தப்பட உள்ளது.ஜெர்மன் லிப்னிஸ் ஹானோவர்
பல்கலை, காந்திகிராம பல்கலை மனையியல் துறை இணைந்து குழந்தைகள் ஆய்வு
மையத்தை அமைக்கின்றன. இந்த மையம் மூலம் குழந்தைகளின் மொழி அறிதல் திறன்
அளவிடப்பட்டு மேம்படுத்தப்படும்.
பொறியியல் படிப்பின் எதிர்காலம் என்ன ஆகும்?
தமிழகத்தில், 536 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு நடந்த
கலந்தாய்வுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா
பல்கலைக்கழக வளாகத்தின் கீழ் உள்ள இடங்களில் காலி ஏதும் இல்லை; இடங்கள்
நிரம்பி விட்டன. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கல்வி பயில பல்வேறு
கல்விப் பிரிவுகளில் இடம் இருந்தபோதும், 94,500 இடங்கள் நிரம்பவில்லை.
இவ்வாறு நிரம்பாத கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என்பது,
சேர்க்கை முடிவில் தெரியவந்திருக்கிறது.
10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோகம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல்,
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதிய அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் உள்ளிட்ட பள்ளி
மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, இந்த ஆண்டு முதல், தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
DEE- AEEO Transfer Counselling Regarding Proceeding
தொடக்கக்கல்வி - AEEO/AAEEO 2015/16 பொது மாறுதல் கலந்தாய்வு - நடுநிலை தலைமையாசிரியர்களிருந்து உதவி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் "கலந்து கொள்ள தகுதிகள்" - இயக்குனர் செயல்முறைகள் (நாள் 03/08/2015)
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு: தாமதமின்றி நடத்த வலியுறுத்தல்
தமிழகம்
முழுதும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றப்
பொதுக் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கல்லூரி
ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சிறந்த தமிழ் நூலுக்கு பரிசு விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறந்த தமிழ் நுாலுக்கான பரிசு பெற
விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பவித்ரம்
தொண்டு நிறுவனம் சார்பில், ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை நுால் பரிசளிப்பு
விழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சிறந்த நுாலை எழுதிய,
ஐந்து தமிழ் எழுத்தாளர்களுக்கு, இம்மாதம், 30ம் தேதி, சென்னையில் நடைபெறும்
விழாவில், பரிசு வழங்கப்பட உள்ளது.
CPS MISSING CREDITS - விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது
2014-15ம் நிதியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பிடித்தங்களில் விடுபட்ட தொகையினை (CPS MISSING CREDITS) விரைவில் ஏற்றிட கோரப்பட்டுள்ளது
TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET DOWNLOAD LINK
TNPSC: D.E.O MAIN EXAM HALL TICKET DOWNLOAD LINK.....EXAM DATES 06.8.15,07.8.15 & 08.8.15 - Click Here
டி.இ.ஓ., பதவிக்கு 6ம் தேதி தேர்வு
மாவட்டக்
கல்வி அதிகாரியான டி.இ.ஓ., நேரடி பதவிக்கு, முதல்நிலைத் தேர்வு
முடிந்துள்ளது. 19,614 பேர் விண்ணப்பித்து, 9,773 பேர் தேர்வு எழுதினர்;
இவர்களில், 3,127 பேர் முதன்மைத் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். வரும்
6ம் தேதி முதல், மூன்று நாட்கள் சென்னையில் முதன்மைத் தேர்வு நடக்கும்;
அதற்கான நுழைவுச் சீட்டுகளை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்யலாம்.
30% salary hike confirmed in 7th Pay Commission for CG Employees
30% salary hike confirmed in 7th Pay Commission for CG Employees
"The wages
of public sector bank employees are revised once every five years. The
recent 10th Bipartite wage agreement gave them an increase of 15%."
United Forum of
Bank Unions (UFBU) had initially put forth a demand of 21% wage hike.
It was only after an extensive series of negotiations that the Indian
Bank Association agreed to settle for 15%.
நல்லாசிரியர் விருது வழங்குவதில் அரசியல் தலையீடு
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
வழங்குவதில், அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. விதிகளுக்கு முரணாக,
அரசியல் கட்சி சார்பான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருவதாக புகார்கள்
எழுந்துள்ளன.
சிறுபான்மை கல்வி உதவித்தொகை:வருமான சான்று மற்றும் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலை பெற அலைய வேண்டாம் பெற்றோரே கையெழுத்திட்டு தரலாம்
'சிறுபான்மை
மாணவர் கல்வி உதவித்தொகை பெற, வருமானச் சான்றிதழில் பெற்றோரே
கையெழுத்திட்டு அளித்தால் போதும்' என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்து உள்ளனர்.
வீடுகளுக்கு மானிய விலையில் நான்கு 'எல்.இ.டி., பல்பு'
வீடுகளுக்கு,
10 ரூபாய் விலையில், 'எல்.இ.டி., பல்பு' வழங்க, மின் வாரிய அதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர். மத்திய மின் துறை அமைச்சகம், விளக்கு மூலம் மின்சாரம்
சேமிக்கும் திட்டத்தை, 2009ல் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ்,
வீட்டு மின் இணைப்புக்கு, குறைந்த திறன் குண்டு பல்புக்கு பதில், அதிக
திறன் கொண்ட, 'காம்பக்ட் புளோரசன்ட்' என்ற 'சி.எப்.எல்., பல்பு', 15 ரூபாய்
என்ற விலையில் வழங்கப்பட்டது.
மாணவனுக்கு பள்ளியில் தண்டனை அறிக்கை அளிக்க உத்தரவு
சிவகங்கை
மாவட்டம் திருப்புவனம் டி.பாப்பாங்குளம் தண்டபாணி மகன் வினோத் ஸ்ரீராம்.
திருப்புவனத்திலுள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். வட்டார
தடகள போட்டியில் பங்கேற்க, இவருக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வன்
பயிற்சி அளித்தார்.
AIPMT-2015 மறுதேர்வுக்கான முடிவுகள் ஆக.,17ல் வெளியாகும் என எதிர்பார்ப்பு
அனைத்திந்திய மருந்துவ நுழைவுத்தேர்வான (AIPMT-2015) மறுதேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
22 பேராசிரியர் நியமன பிரச்னை முடிவுக்கு வந்தது : சிண்டிகேட் கூட்டத்தில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
சென்னை
பல்கலையில், ஓர் ஆண்டாக சர்ச்சைக்குள்ளான, 22 பேராசிரியர் பணியிடங்களை
நிரப்ப, பல்கலை சிண்டிகேட் அனுமதி அளித்தது. இதையடுத்து, 20 பேராசிரியர்கள்
உடனடியாக பணியில் சேர்ந்தனர்.