பல்கலைக்கழகத்தில்
கல்வி கற்பதற்கான மாணவர் சேர்க்கைக் கடிதத்தை மூங்கிலால் ஆன தாளில்
அச்சிட்டு அளித்து புதுமை செய்துள்ளது சீனப் பல்கலைக்கழகம்.
Quarterly Exam Questions 2024
Latest Updates
வேளாண்மை கலந்தாய்வு: 644 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க நடவடிக்கை
ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும்
மாணவர்களை நல்வழிப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிட்டுள்ளார்.
தட்கல் முன்பதிவில் விதிமுறை தளர்வு: செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது
அடையாள அட்டை எண் அல்லது அடையாள அட்டை நகல் வழங்க தேவையில்லை என ரயில்வே
நிர்வாகம் அறிவித்துள்ளது.
குரூப் 2 ஹால்டிக்கெட் இண்டர் நெட்டில் வெளியீடு.
விரைவில் நடைபெற உள்ள குரூப் 2- தேர்விற்கானஹால் டிக்கெட் இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கான ஹால்
டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்
எனவும், ஹால் டிக்கெட்டில் சந்தேகம் எதுவும் இருப்பின்
contacttnpsc@gmail.com என்ற இணைய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும்,
மேலும் 18004251002 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
கவுன்சலிங்கில் பழைய முறையை அமல்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை.
ஆசிரியர் கவுன்சலிங்கில், பழைய முறையை அமல்படுத்த வேண்டும்' என, மாவட்ட
பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்ட
மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்,
நாமக்கல்லில் நடந்தது.
பி.எட்., மாணவர் சேர்க்கை விதிமுறைகள் அறிவிப்பு
இந்த
ஆண்டு, பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள்
அறிவிக்கப்பட்டு உள்ளன. தர வரிசை பட்டியலில், உயர் படிப்புக்கு ஏற்ற,
'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.கடந்த ஆண்டு வரை, பி.எட்.,
ஓராண்டு படிப்பாக இருந்தது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளின்படி, இந்த
ஆண்டு முதல், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
டான்சி நிறுவனத்தில்: இளநிலை உதவியாளர், கணக்காளர் காலியிடத்திற்கு மாநில அளவில் பரிந்துரை
டான்சி
நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் கணக்காளர் பணிக்காலியிடங்களுக்கு
மாநில அளவில் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்
நிதியாண்டு
2014-15-க்கான வருமான வரியை சம்பளதாரர்கள் தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட்
31-ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வருமான வரித் துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பாடத்திட்டம் இல்லாமல் எப்படி பாடம் நடத்துவது ஓவிய ஆசிரியர்கள் முதல்வர் அலுவலகத்தில் மனு.
'வரையறுக்கப்பட்ட பாடத்திட்டமே இல்லாத நிலையில், வரையறுக்கப்பட்ட
பாடத்திட்டத்தை மட்டுமே, ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும்
கல்வி இயக்ககம், மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டிருப்பது, ஓவிய
ஆசிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அனைவருக்கும் கல்வி
இயக்ககம் சார்பில், மாநில திட்ட இயக்குனரின் சுற்றறிக்கை, சமீபத்தில்
அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது.
ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க நடவடிக்கை.
ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த தகுந்த
நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித் துறை இயக்குநரை ஐகோர்ட் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்துநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம், ஐகோர்ட்
மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தற்போது விவாகரத்து
வழக்குகளும், முதியோர் இல்லங்களும் அதிகரித்துள்ளன. கூட்டுக் குடும்ப முறை
சிதைந்து விட்டது. முதியோரிடம் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள்
அதிகரித்துள்ளன.
கிரெடிட் கார்ட் கடனுக்கு புதிய விதிமுறை: 90 நாளில் செலுத்தாவிட்டால் வாராக்கடன்
கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை 90 நாட்களுக்குள் செலுத்தத்
தவறினால், அதை வாராக்கடன் பட்டியலில் சேர்த்து சிபில் உள்ளிட்ட கடன் தகவல்
அமைப்புகளுக்கு தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
விஜயகாந்தை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்:ஆக., 1ல் அவர் வருவாரா
சென்னையில் ஆசிரியர்கள் நடத்தும் பிரமாண்ட தொடர் முழக்க போராட்டத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்க உறுதி அளித்துள்ள நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தரப்பில் இருந்து மட்டும் இதுவரை பதில் வரவில்லை.
ஆசிரியர்கள் நியமனத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு
திண்டுக்கல்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கையில் முறைகேடு புகார்
யு.ஜி.சி. விதிகளின்படி தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியர்களை நியமிக்கும் போக்கு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழில் பி.எச்டி. பட்டம் பெற்ற கோவையைச் சேர்ந்த பெண், கல்லூரிகளில் ஆசிரியர் சேர்க்கை தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
பொறியியல் கலந்தாய்வு: 25 தனியார் கல்லூரிகளில் ஒரு இடம்கூட நிரம்பவில்லை
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கி 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், 25 கல்லூரிகளில் இன்னும் ஒரு இடம்கூட நிரம்பவில்லை. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் நடந்து வருகிறது.
நாடு முழுவதும் 100 அரசு பொது மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்த முடிவு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
நாடுமுழுவதும் 100 அரசு பொது மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப் படும். ஒவ்வொரு மருத்துவக்கல் லூரியிலும் 100 எம்பிபிஎஸ் மாண வர்கள் சேர்க்கப்படுவார்கள். காரைக்காலில் ஜிப்மர் கிளை அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார்.
“வாட்ஸ்ஆப் ” பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள்முயற்சி ?
இணையதள சமத்துவம் குறித்து தொலைத்தொடர்பு அமைச்சக நிபுணர் குழு, மத்திய அரசுக்கு அளித்துள்ளஅறிக்கையில் பரிந்துரைத்துள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.நுகர்வோருக்கு இணையதள சேவை அளிப்பதில் கட்டணத்தின் அடிப்படையிலோ அல்லது வேகத்தின் அடிப்படையிலோ பாகுபாடு காட்டக் கூடாது என்று அந்தக் குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
3120 பக்க NMMS RESULT ல் தேர்வான மாணவர்களின் பெயர்களை காண்பது எப்படி?
240 பக்க தகவல்கள் ஒரே நீள் வரிசையில் வரவேண்டியவை . excel to pdf
convert செய்யும் பொது பல பக்கமாக மடங்கி உள்ளது. உங்கள் மானவர்ன்
விவரங்கள் அடங்கிய அணைத்து பக்கங்களையும் வரிசைபடுத்தி print எடுக்கவும்.(
excel copy வெளியிடப்படவில்லை )
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ்
2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தாற்காலிக
மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று
அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்தது.
சாதி எனும் சகுணம் - Special Article
“ஒன்றே
குலம் ஒருவனே தேவன் -
திருமூலர்
“சாதிகள்
இல்லையடி பாப்பா” -
பாரதி
’வாழ்க்கை’ என்னும் காலக்கண்ணாடி
’சாதி’ என்ற கல்லடி பட்டு, ’சமூகம்’ எனும் பிம்பமாகி பல நூறு துண்டுகளாக சிதைந்து போகின்றது.
’சமத்துவம்’ என்னும் தெருவில் சாதி என்ற ‘வெறி நாய்கள்’ தன் உமிழ்நீரை ஒழுகவிட்டுக்
கொண்டே செல்கின்றன. இக்கொடிய எச்சில் பட்ட சில தெரு நாய்களும் தன் பங்குக்கு சமூகத்தைப்
பதம் பார்த்து விடுகின்றன. இதன் விளைவாக சமூகமே ’சாதிவெறி’ என்னும் சவக்குழிக்குள்
தள்ளப்படுகிறது.
அரசு, தனியார் துறைகளில் முடிவு எடுக்கும் எல்லா குழுக்களிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உயர்நிலைக் குழு பரிந்துரை
அரசு மற்றும் தனியார் துறையில் முடிவு
எடுக்கும் அனைத்து குழுக் களிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்நிலைக் குழு பரிந்துரை
செய்துள்ளது. பெண்களுக்கு எதிரான
வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், பெண்களுக்காக தேசிய அளவில் ஒரு கொள்கையை
உருவாக்கவும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மகளிர்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் உயர்நிலைக் குழு
அமைக்கப்பட்டது.