Quarterly Exam Questions 2024
Latest Updates
பொதுத்தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு 10ம் தேதி பரிசு
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற
மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்
வழங்கப்படுகின்றன. கடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில், முதலிடம்
பிடித்த, 21 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த வாரம் ரொக்கப் பரிசு
மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
நாடு முழுவதும் 906 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி
இந்தியா
முழுவதும் 906 ஐ.பி.எஸ்., பணியிடங்கள் காலியாக உள்ளதாக யு.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது. இதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மொத்தமுள்ள 4754 பணியிடங்களில், 3,843 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.
வைரஸ் தாக்கிய பென்டிரைவ் லிருந்து file களை மீட்கும் வழிகள்
தற்பொழுது தகவல்களை சேமிக்க
பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில்
முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால்
வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை
பாதிக்கிறது.
தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு
அகில
இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான(2015) தேர்வு நடைபெற
இருந்த நிலையில், அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சில மாநிலங்களில்
வெளியானதைத்தொடர்ந்து இந்த தேர்வை தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த
மாதம் 15-ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது.
பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத் திட்டம்!
மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப்
பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO)
திட்டமிட்டு வருதிறது.
பல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி 110 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்: மருத்துவ கல்வி இயக்குனர் பேட்டி
சென்னை,
பல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த 110 மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இந்த வருட கலந்தாய்வில் இடம் கிடைத்தது.
கல்வித்துறையில் தமிழகம்
அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்றுகொண்டிருப்பதாக பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள் 135 பேருக்கு தலைமை ஆசிரியர்களாக'பிரமோஷன்'
கல்வித் துறை வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு 135 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்களாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.
கவலையளிக்கும் கலந்தாய்வு: களமிறங்கும் 'ஜாக்டோ'
தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும்
அறிவிக்கப்படாததால் ஆக.,1ல் நடக்கும் ஜாக்டோ தொடர் முழக்கப் போராட்டத்தில்
இப்பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.பள்ளிக் கல்வியில்
கல்வியாண்டு துவங்கும் முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு
கலந்தாய்வு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும்
இரண்டு ஆண்டுகளாக தாமதமாக நடத்தப்பட்டது. இந்தாண்டு ஜூலை முதல் வாரம் கடந்த
பின்னரும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் அறிகுறி கூட தெரியவில்லை.
பாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழப்பம்! : சிறப்பாசிரியர்கள் பாடு திண்டாட்டம்
சிறப்புப் பாடங்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படாததால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
மருத்துவம் சார் பட்ட படிப்பு: முதல் நாள் 8,316 விண்ணப்பம்
பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு,
ஒரே நாளில், 8,316 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து
அரசு மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., -
பி.எஸ்.சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்
பட்டப்படிப்புகள் உள்ளன. 150 சுய நிதி கல்லுாரிகளையும் சேர்த்து, மொத்தம்,
8,000 இடங்கள் உள்ளன.
தமிழக கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து 'நாக்' ஆய்வுக்கு பின் வழங்க யு.ஜி.சி., முடிவு
தமிழகத்தில், ராணி மேரி கல்லுாரி, பச்சையப்பா கல்லுாரி மற்றும்
அமெரிக்கன் கல்லுாரி உள்ளிட்ட, நான்கு கல்லுாரிகளுக்கு, விரைவில் பாரம்பரிய
கல்லுாரிக்கான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்., அதிகாரி சாதனை
“ஐ.ஏ.எஸ்., தேர்வை பொறுத்தவரை, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எளிதில்
வெற்றி பெறலாம்” என, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ள, ஐ.பி.எஸ்.,
அதிகாரி ராஜா கூறினார்.
அரசு துறைகளில் 14,481 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 14,481 பணியிடங்களுக்கு நேரடி நியமனம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வின் மூலமும் நியமனம் நடைபெற இருப்பதால் தகுதியுடையோர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், தேர்வு
முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள்
அந்தந்த இணையதள முகவரில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிரமம்
அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி.,
பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால்,
ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர்.
இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்
தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள்
ஆகியும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 'ஒரிஜினல்'
மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.
பள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகை பெறுவதில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக்
கொள்ளுமாறு, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு
அறிவுறுத்தியுள்ளது.
50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி
இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால்,
தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத
நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச்
சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.