தமிழகத்தில்
உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள்
உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 40,432 பேர்
விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான
போட்டித்தேர்வு, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, மற்றும் திருச்சி
நகரங்களில், 89 மையங்களில் நேற்று நடந்தது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.
கோவை மாவட்டத்தில், சட்டம், நீதிமன்றம் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு
இன்மையால், நாளுக்கு நாள் அதிரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க
முடியாமல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திணறி
வருகின்றனர்.
மதுரை மருத்துவ கல்லூரியில் முதலில் சேர்ந்த பழைய மாணவி
மதுரை
மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் முதல் மாணவியாக, கடந்த
ஆண்டு பிளஸ் 2 முடித்த பழைய மாணவி சனிக்கிழமை சேர்ந்தார்.
உலகில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர் 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்
உலக அளவில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர், 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்
மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது: விளையாட்டு வீரர்கள் தேர்வு
இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசுபட்டது: சர்வதேச அமைப்பு
இந்தியாவில் உள்ள மொத்த மேற்பரப்பு நீரில் 80 சதவீதம் மாசுபட்டது என சர்வதேச அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு
10-ம் வகுப்பு
மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் நாளை (திங்கள்கிழமை) வெளியிடப் படும் என்று
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை
இயக்குநர் கே.தேவரா ஜன், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணாமலை பல்கலை.,யில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்
சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல்
படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது. கலந்தாய்வை, நேற்று
காலை, 9:00 மணிக்கு, துணைவேந்தர் மணியன் துவக்கி வைத்தார். பொறியியல் தர
வரிசை பட்டியலில், 194.75 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்ற,
புவனகிரியைச் சேர்ந்த அருள்வேல் என்ற மாணவர், சிவில் இன்ஜினியரிங் படிப்பை
தேர்வு செய்தார்.
எந்த ஹெல்மெட் நல்லது?
தமிழகத்தில்
ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்...‘மறுபடியும் மொதல்ல இருந்தா’ என பலரும்
இந்த அறிவிப்பைக் கலாய்க்கலாம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசம்
காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு. ‘அரசு தரச்
சான்றிதழான ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்தான் அணிந்திருக்க வேண்டும்.
கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின
கோவை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு
கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின் இளங்கலை
வேளாண்மை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.
இதில் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விளையாட்டு பிரிவு
மாணவர்களுக்கு 5 இடம், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 8 இடங்கள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு 18 இடம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்
வாரிசுகளுக்கு ஒரு இடம் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம்
தேனியைச்
சேர்ந்தவர் வி.தமிழ்மொழி, மாவட்ட கருவூலக நிரந்தர இளநிலை உதவியாளர். இவர்
2010ல் நடந்த கணக்காளர் பணிக்கான தேர்வில் உயர் அதிகாரிகள் தயாரித்த வினா,
விடைத்தாளை திருடி முழு மதிப்பெண் பெற்றது தெரிந்தது.
முடி கொட்டுமா, வியர்க்குமா, மூச்சு விட முடியுமா? 'ஹெல்மெட்' சந்தேகங்களுக்கு டாக்டர்களின் பதில்
'ஹெல்மெட்டா... தலைவலிக்கும்,
வியர்க்கும், முடிகொட்டும், கழுத்து வலிக்கும், காது
கேட்காது, பக்கவாட்டில்
வாகனம் வந்தால்
தெரியாது...' என்றெல்லாம் பல்வேறு எதிர்மறை சாக்கு
போக்குகள், சந்தேகங்கள் வாகன ஓட்-டிகளுக்கு
இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு துறை நிபுணர்களான
டாக்டர்கள் பதில் இதோ...
அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமே!
அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான -
ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே
மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை
அறிவித்துள்ளது.
ஏழு ஆண்டுகளாக சம்பள உயர்வின்றி தவிக்கும் கல்வித்திட்ட ஊழியர்கள்
:தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன்
பணியில் சேர்ந்து சம்பள உயர்வின்றி தவிப்பதாக அனைவருக்கும் இடைநிலை கல்வித்
திட்ட( ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்:பல்கலை துணைவேந்தர் ஆலோசனை
கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில்
பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில்
நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான
காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய
நடைமுறை அமலாகிறது.
படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்கள் அதிகரிப்பு?
தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு
தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம்
வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில்
நிறுத்தப்பட்டுள்ளனர்.
செயல்வழிக்கற்றல் கல்வியில் தொய்வு:புது வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு
தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை
அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி
முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு,
அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால்,
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால்
பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு
அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான
ஆர்வம் அதிகரித்தது.
‘இ-டிக்கெட்’ விரைவாக பெற நவீன சர்வர்கள்
பயணிகளுக்கு
இணையதளம் மூலம் எடுக்கும் ‘இ-டிக்கெட்’கள் விரைவாக கிடைப்பதற்கு வசதியாக
ஐஆர்சிடிசி நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து ஐந்து சர்வர்களை வாங்கியுள்ளது.
பி.எட்.–எம்.எட். படிப்புகளில் யோகா பாடம் சேர்ப்பு: கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர்,
ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின்
முதல்வர்கள், தாளாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
SSA Training
அகஇ-2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான கதை புத்தகங்களுக்கான ஓவியங்கள் வரைதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!
Next Primary CRC Date: 11.7.2015
11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை
சென்னை பிளஸ்–2 மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.
மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்
பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு
பொது தேர்வை எதிர் கொள்ளும் மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண்
வாங்குவதற்காக பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள்.