Quarterly Exam Questions 2024
Latest Updates
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய சேர்க்கைத் தேர்வில் கலந்துகொள்ள...
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில்,
சேர்க்கைக்கான தேர்வில் கலந்துகொள்ள, வீரர், வீராங்கனைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் திறன் மேம்படுத்தல் தொழில்
முயல்வோர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையில்,
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் உதவியுடன் செயல்படுகிறது. பயிற்சி மையத்தில், கூடுதல்
வசதியுடன், விஞ்ஞான பூர்வமான பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு
வீரர்களின் தரத்தை உயர்த்துகிறது.
தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்
தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு
உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல்
தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார்
இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே
கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுநீர்ப் பாதை தொற்றை தவிர்க்க அருமருந்தாகும் தண்ணீர்!
சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள்
சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: 'இகோலை' என்ற கிருமிகள்,
எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர்
போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே
போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால்,
பெண்கள், சிறுமியர் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதால், 'யூரின் இன்பெக்ஷன்'
ஏற்படுகிறது.
ஆன்-லைன் மூலம்ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் சுருட்டல்
ஆசிரியையின்
வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன்
மூலம் ரூ.43 ஆயிரம் சுருட்டியது
தொடர்பான புகாரை வாங்க மறுத்து,
கேளம்பாக்கம் போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு
லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள்
தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி
வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல்
30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர்
துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.
ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை
மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல்
நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளி
மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும்
வகையில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ‘நடமாடும் உளவியல் ஆலோசனை
மையங்கள்‘ தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி : ராதாகிருஷ்ணன் முதலிடம்
2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய
விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. லண்டனில் இருந்து
வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல்
10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது.
எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
10th Maths Study Material
Maths Study Material
- Maths Group Test Questions | B. Mohan Kumar (English Medium) - Click Here
- Maths Model Test Questions | B. Mohan Kumar (English Medium) - Click Here
12th Centum Special Question Paper (Bio-Botany)
12th Centum Special Question Paper (Bio-Botany)
- Biology Botany Question Paper | Mr. S.M. Balasubramaniyan (English Medium) - Click Here
பாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள்,
மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும்
அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு
குழு அமைக்கப்பட்டுள்ளது.
கற்பித்தலில் ஆசிரியர்களின் புதிய உத்திகளை பதிய வேண்டுகோள்
பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல்
மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை
இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2012 முதல் பள்ளிக் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்
ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல
நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யும்
பணி நடக்கிறது.