Quarterly Exam Questions 2024
Latest Updates
IGNOU MEd & BEd Entrance Test Old Question Papers
We will give IGNOU MEd Entrance Test Question Papers & IGNOU BEd Entrance Test Previous year Question Papers for your reference.
MED Entrance Previous Year Question Papers
- IGNOU MEd Entrance Question Paper 2013 - Click Here
- IGNOU MEd Entrance Question Paper 2012 - Click Here
- IGNOU MEd Entrance Question Paper 2011 - Click Here
BEd Entrance Previous Year Question Papers
இளநிலை உதவியாளர் பணி: 18ல் கலந்தாய்வு துவக்கம்.
'இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, இம்மாதம், 18
முதல் 23ம் தேதி வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தேர்ச்சி வீதம் குறைவுக்கு ஆசிரியரை குறை சொல்ல முடியாது: ஐகோர்ட்..
'மாணவர் தேர்ச்சி வீதம் குறைவுக்கு, ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது' என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் பள்ளி பொது தேர்வு : 20 லட்சம் மாணவர் எழுதுவர் என எதிர்பார்ப்பு
அடுத்த ஆண்டு, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை எழுத உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம்
குறித்த கணக்கெடுப்பு பணியை, அடுத்த மாதம் நடத்த, தேர்வுத்துறை ஏற்பாடு
செய்துள்ளது. 20 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
TET Paper2 minimum cutoff list
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2க்கான இறுதிப்பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இப்பட்டியலின் அடிப்படையில் பாடவாரியாக, இனவாரியாக குறைந்தபட்ச கட்ஆப் கணக்கிட்டு வெளியிட்டுள்ளோம்.
Please Visit www.TrbTnpsc.com
தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கபள்ளிகள், ஈராசிரியர் பள்ளிகளாக இயங்குகின்றன: ஆய்வுத் தகவல்.!?
தமிழகத்தில் 17 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 2 ஆசிரியர்களே பணியாற்றுவதாக அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?
ஆசிரியர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?.?.?.?. ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும். அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும்
கூகுளில் தேடலில், இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை
இதுகுறித்து
தெரிவிக்கப்பட்டுள்ள வலைப்பதிவில், பாதுகாப்பான அம்சங்கள் கொண்டுள்ள
இணையதளங்களுக்கே (http-க்கு பதிலாக https பயன்படுத்துதல்) முன்னுரிமை
அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம்
தெரிவிக்கையில்,” இந்த அம்சமானது இணையத் தேடலில் 1% மீதே தாக்கம்
செலுத்தும். மற்ற அம்சங்களுக்கும் கூகுள் தேடலில் தொடர்ந்து முக்கியத்துவம்
அளிக்கப்படும்.
எபோலா: பாதிப்பு, புகார், சந்தேகம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தமிழகத்தில்
எபோலா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லை. அப்படி யாருக்காவது இருப்பதாக
சந்தேகம் ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை
அச்சுறுத்தி வரும் எபோலா பல்வேறு நாடுகளுக்கும் தற்போது பரவி வருகிறது.
தமிழகத்திலும் ஒருவருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று பீதி
கிளம்பியது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு எபோலா
பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு
பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தேர்தெடுக்கப்பட்ட 27 அரசு உயர் / 19 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், நிர்வாக பயிற்சியளித்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு
இளமை பருவத்தில் இருக்கும் உங்கள் மகன்/மகள் மனதில் இடம் வேண்டுமா?
விடலைப் பருவத்தில் (Teen Age) உள்ள குழந்தைகளை
சமாளிப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதற்கு நிறைய பொறுமையும்,
சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் தேவை. குழந்தைப் பருவத்தில் இருந்து
விடலைப் பருவத்திற்குள் நுழையும் மகனுக்கோ அல்லது மகளுக்கோ உடல், பலவிதமான
இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது. உள்ளமோ பலவிதமான உணர்ச்சித் தாக்குதலைத்
தூண்டுகிறது.
பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க!
இன்றைய
காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக
கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப்
பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு,
எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால்
அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல்
பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெரும் வரவேற்பு!
ஆலந்துார் பள்ளியில் நடந்த அறிவியல் மற்றும்
கணித கண்காட்சியில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் வரவேற்பை
பெற்றன. ஆறு மாணவர்கள்: பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் உருவாக்கிய புதிய
கண்டு பிடிப்புகள் அடங்கிய அறிவியல் மற்றும் கணித கண்காட்சி ஆலந்துார் நிதி
மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. அதில் 50 அறிவியல் கண்டுபிடிப்புகள்
மற்றும் 15 கணித கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது
பள்ளி
கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி
இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அந்த உத்தரவில்
கூறப்பட்டிருப்பதாவது: அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப
போட்டிகளை நடத்த வேண்டும். வரும் அக்டோபர் 28ம் தேதி விளையாட்டு தினவிழாவை
நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க
வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கம் பெறும் திறமை
வாய்ந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் இளம்வயது சிறுவர், சிறுமியர்
உடல்திறனை கண்டறிந்திட அவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
ஆகஸ்ட் 2ம் வாரத்திற்குள் உடல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிபெற்று ஆசிரியை சாதனை -- தினகரன்
முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேனி ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.ஆர்.பி தேர்வு, ஆகஸ்ட் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட் 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான 2ம் தாள் தேர்வு நடந்தது. தேர்வுகள் முடிந்து வெயிட்டேஜ் முறை கணக்கிட்டு பலமாதங்கள் ஆன நிலையில் பணிநியமன அர சாணை உத்தரவுக்காக பல்லாயிரம் ஆசிரியர்கள் காத்திருந்தனர். நேற்று முன்தினம் இடைநிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற் றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன உத்தரவுக்கான அர சாணை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.ஆர்.பி தேர்வு, ஆகஸ்ட் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட் 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான 2ம் தாள் தேர்வு நடந்தது. தேர்வுகள் முடிந்து வெயிட்டேஜ் முறை கணக்கிட்டு பலமாதங்கள் ஆன நிலையில் பணிநியமன அர சாணை உத்தரவுக்காக பல்லாயிரம் ஆசிரியர்கள் காத்திருந்தனர். நேற்று முன்தினம் இடைநிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற் றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன உத்தரவுக்கான அர சாணை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.
BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை.
- BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம் ஏன்?
ஆசிரியர் நியமனத்தில் தமிழ் பாடத்திற்கு சொற்ப இடம் : நியமன வரிசையில் தமிழை முதலில் சேர்க்க கோரிக்கை
முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம்
தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி
தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று
பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140
பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள்,
நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய
வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
பல்கலையில் பணியிடங்களை நிரப்ப யு.ஜி.சி., உத்தரவு
மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி., உத்தர விட்டுள்ளது.