சர்ச்சைக்குரிய
கட்டுரையை வெளியிட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர்
ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற
மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், தமிழக மீனவர்
பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா
எழுதிவரும் கடிதங்கள் குறித்து கொச்சைப்படுத்தப்பட்டு ஒரு கட்டுரை
பதிவேற்றப்பட்டிருந்தது.