கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன.
பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு
வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப்
படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின்
பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
Quarterly Exam Questions 2024
Latest Updates
‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’
இது உங்களுக்காக....‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’.. ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’-வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள்
அதிகரித்து வரும் ஆட்டிசம் குறைபாடு: சிறப்புப் பயிற்சியின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்
தனக்கென்று தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதில் சுகமாக
பயணிப்பவர்கள் தான் ஆட்டிசம் குழந்தைகள். தற்போது ஆட்டிசம் குழந்தைகள்
அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எதனால் வருகிறது
ஆட்டிசம்? மருந்துகளின் மூலம் குணப்படுத்த முடியுமா? போன்ற கேள்விகளுக்கு
விடையளிக்கின்றனர் மனநல மற்றும் உளவியல் நிபுணர்கள்.
TET Posting - 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்'பட்டியலை, வெளியிட்டது:271பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று,சாதனை!
அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்'பட்டியலை, நேற்று வெளியிட்டது. கடந்த
ஆண்டு,வெறும், 11 பேர் மட்டும், 'கட்-ஆப்' மதிப்பெண்,200க்கு, 200 பெற்ற
நிலையில், இந்த ஆண்டு, 271பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று,சாதனை
படைத்தனர்.
கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு
எந்த
குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க
வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள்
ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு
நடக்கும் கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
முப்பருவ கல்வி முறை: திண்டாடும் 10ம் வகுப்பு மாணவர்கள்
முப்பருவ
கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த
மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு
ராமநாதபுரம்
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளில்
விளக்கம் கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர் .
'கவுன்சிலிங்'கை புறக்கணித்த ஆசிரியர்கள்
மதுரையில் நடந்த முதல்நாள் ஆசிரியர் 'கவுன்சிலிங்'கை பலர் புறக்கணித்தனர்.
அரசு
மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கான
பொதுமாறுதல் 'கவுன்சிலிங்' துவங்கியது. முதல்நாளான நேற்று ஆசிரியர்
பயிற்றுனர்களுக்கான பணிநிரவல் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ
இருதயசாமி தலைமை வகித்தார். மாவட்டத்தில் 67 பேர் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
இதில், முன்கூட்டியே விருப்ப மாற்றத்தில் 7 பேர் மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல் பெற்றனர். 13 பேர் மட்டும் பங்கேற்றனர். அவர்களுக்கு மாறுதல்
உத்தரவு வழங்கப்பட்டது. மீதமுள்ள 49 பேர் கவுன்சிலிங்கை புறக்கணித்தனர்.
இதில் சிலர், தாங்கள் பணிபுரியும் இடங்களில் கையெழுத்து போட்டுவிட்டு
சென்றனர்.
பணி மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஓ.டி வழங்கப்படுமா?
அரசுப்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் பணியிட மாறுதல்
கவுன்சலிங் நடத்தி, ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கு மாறுதல் உத்தரவுகள்
வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை
மற்றும் படிக்கும் மாணவர்களின் வருகை என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு
பணி நிரவலும் வழங்கப்படுகிறது. அதன்படி
இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. நேற்றைய கவுன்சலிங்கில்
உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடந்தது.
இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி
உயர்வு வழங்கப்படுகிறது. 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்
மற்றும் பணியிட மாற்ற கவுன்சலிங் நடக்கிறது.
நீதிமன்றத்தில்,அவமதிப்பு மனு தாக்கல்!
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், இழப்பீடு நிர்ணயிக்க, ஓய்வு பெற்றநீதிபதியை
நியமிக்க, அரசு உத்தரவு பிறப்பிக்காததால், சென்னை உயர்
நீதிமன்றத்தில்,அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை,
இம்மாதம், 19ம் தேதிக்கு,தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்
பணியிட
மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை
(ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன்
தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியை ஆதரிப்போம்!
அரசு
பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்
பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி
உதவி அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள்
சிறப்பான வளர்ச்சியை பெற முடியும்.
வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கானதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கானதரவரிசைப்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொது கல்வி பிரிவில்
ஆர்.சூர்யமல்லிகராஜ்,
டி.இலக்கியபிரியா ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள்பெற்றுள்ளனர்.
DEE - பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும் - TNPTF
பணி நிரவலை பொறுத்த மட்டில் அந்தந்த ஒன்றியங்களிலேயே நிரவல் செய்யப்படும். மாற்று ஒன்றியத்திற்கு மாற்றும் திட்டம் எதுவும் தொடக்கக்கல்வித்துறையிடம் இல்லை-TNPTF
ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும் - TNPTF
ஆசிரியர்கள் பதவி உயர்வில் முதலில் 2013 பேனலும், அடுத்ததாக 2014 பேனலும் கடைபிடிக்கப்படும்; , அதேபோல் பணி நிரவல் குறித்து அச்சமடைய தேவையில்லை TNPTF வேண்டுகோள்.
ஆசிரியர்கள் நியமன ஊழல்!
போபால்:
கடந்த 2011ஆம் ஆண்டு மத்திய
பிரததேச மாநிலத்தில் மாஜி தொழில்நுட்ப கல்வி
அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா,மாநில அரசு
நடத்திய ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்
செய்வது தொடர்பாக ஊழல் பிரச்சினையால் 6 மாதத்திற்கு
பிறகு தேர்வுதுறையின் அதிரடிபடையால் கைது செய்யப்பட்டார்.பின்னர்
வெளியில் விடுவிக்கப்பட்டார். சர்மா மாநில முதல்வர்
சிவராஜ்சிங் சவுகானுக்கு நம்பகமான உதவியாளராக இருந்துள்ளார்.
பொறியியல் :தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படுகிறது
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687
பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படுகிறது.