Quarterly Exam Questions 2024
Latest Updates
பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி
பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை.
கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது. முதுகலை பட்டம் தமிழ் வழியிலும்,
இளங்கலை படிப்பை ஆங்கில வழியில் முடித்திருந்தாலும், ஆசிரியர் பணி வழங்க
வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது,' என மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள்: மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச
புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி
முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான
புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் கிடங்கில்
இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து,
லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி
வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில்
இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2
பாடப்புத்தகங்களை, பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள்
மூலமாக வழங்குவார்கள்.
8ம் வகுப்பு தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்
தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்
தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மே 1ம் தேதி அன்று பன்னிரெண்டரை வயது
பூர்த்தி அடைந்தவர்கள், தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத
விரும்பினால், ஆன்லைன் மூலம் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை தேர்வுத்துறை அமைத்துள்ள மண்டல
மையங்களுக்கு நேரில் சென்று தேர்வுத் துறை இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
TNTET வழக்கு தள்ளுபடி - ஜெயா+ செய்திகள்...
தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. - ஜெயா+ செய்திகள்...
- இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்..
- 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..
புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
Click Here For Excel File Download
TNTET - New weightage கணக்கிடும் முறை
தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை :
முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக 1050, 1050/1200*100=87.5 87.5/100*10=8.75
பட்டம் 52% so 52/100*15=7.8
பட்டயம் 86% 86/100*15=12.9
TET 102 102/150*100=68 68/100*60=40.80
TOTAL 70.25.
இதைப் போன்றே தாள் 1 க்கும் கணக்கீட்டு கொள்ளவேண்டும்.
TET JUDGEMENT ANNOUNCED
TET CASES JUDGEMENT HAS ANNOUNCED 2012 CANDIDATES 5% CAN NOT GIVE
RELAXATION. BECAUSE THAT PROCESS ALREADY FULLY COMPLETED. 2013
CANDIDATES 5% STANDS CORRECT. WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC
METHOD (INSTEAD OF MECHANICAL METHOD) 12th obtained marks converted to
10 eg. 85% = 8.5 marks degree converted to 15 eg. obtained percentage/
100 X 15 B.ed obtained percentage/ 100 X 15 tet mark= obtained tet
mark/150 X 60
6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு - தினகரன்
அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து
வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் முகாம்களுக்கு
அனுப்பப்பட்ட நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1
வகுப்பு விடைத்தாள்களையும் அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய பள்ளி
கல்வித்துறை உத்தரவிட்டது.
மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.
பெண் ஊழியர் தேர்தல் பணிக்கு நியமித்தது தொடர்பாக RTI தகவல் கேட்டு TNHHSSGTA கடிதம்
பெண் ஊழியர் தேர்தல் பணிக்கு நியமித்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டு TNHHSSGTA கடிதம்
தேர்தல் பணியில் மரணம் - நிவாரணம் கோரி கலெக்டர் கடிதம்
தேர்தல்
பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மரணமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு
நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, கலெக்டர் கடிதம்
அனுப்பியுள்ளார். தமிழகத்தில், தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் என, 6 லட்சம் பேர் ஈடுபட்டனர். அவர்களுக்கு, கிரேடு
அடிப்படையில், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட்டது. மேட்டூர், கொளத்தூர்
பெருமாள் கோவில் நத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசு, 44, தர்மபுரி,
கொளத்தூர் கே.பள்ளிப்பட்டி ஓட்டுச்சாவடியில் பணியாற்றினார்.
30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க டெண்டர்
அரசு
பஸ்களில் பயணிக்கும், 30 லட்சம் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தயாரிக்கும்
பணிக்கு, இந்திய சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி., சார்பில்,
டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
கல்வி கட்டண விவரம் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை
அரசின் கல்வி கட்டண விவரபட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில், பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.