தனியார் பள்ளிகளின் வெளியே கல்வி கட்டண
விபரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்‘ என கல்வி அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் ஜூன் 2ம் தேதி
திறக்கப்பட உள்ளன. பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக்
பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம்
நேற்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள்
முன்னிலையில் நடந்தது. இதில், பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வர உள்ளதால்,
மாணவர்களின் பதிவு எண் தொடர்பாக எந்த குழப்பங்களும் இருக்கக்கூடாது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக
நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும்
அழைப்பு விடுக்கப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏற்கனவே கடந்த 10ம் தேதியே
திருத்தி முடிக்கப்பட்டன. இதுபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான
விடைத்தாள்களும், பெரும்பாலான மையங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக திருத்தி முடிக்கப்பட்டன.
பள்ளிகளில் நுழைவு தேர்வு: அரசு எச்சரிக்கை
கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நுழைவுத் தேர்வு வைத்து மாணவர் சேர்க்கை நடத்தியதால் பெற்றோர் அதிருப்தி
அடைந்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், வரும் கல்வியாண்டில் 6 முதல் 9ம்
வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு நேற்று நுழைவுத் தேர்வு நடந்தது. இதற்கு,
பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது தமிழகத்தில் தனியார்
பள்ளிகளில் கூட மாணவர் சேர்க்கை நடத்திட, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று கல்வித் துறை தெரிவித்துள் ளது.
தேர்தல் முடிந்தும் ஊதியம் கிடைக்கவில்லை: அதிருப்தியில் அரசு ஊழியர்கள்
மக்களவை தேர்தலில் பணியாற்றிய, தமிழ்நாடு
சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, இதுவரை ஊதியம்
வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு
2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி
வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம்
பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு
நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி
மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று....
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்”
என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர்
பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்தவர் பாவலரான பாரதிதாசன் அவர்கள்.
மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பணி வரன்முறை இல்லை பரிதவிக்கும் ஆசிரியர்கள்; அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் நிறைவு
அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர்
கழகத்தின் கீழ் பணியாற்றி வந்த, 271 பேர் பணிநிரந்தரம் செய்யவுள்ளதாக,
தமிழக அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவில்லை.
கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்
மே
மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை
வெளிவருவது, அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது.
விடிய, விடிய பஸ் ஸ்டாண்டில் பரிதவித்த பெண் ஊழியர்கள் (ஆசிரியைகள்)
தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், நடு இரவு,
இரண்டு மணிக்கு விடுவிக்கப்பட்டதால், பெண் ஊழியர்கள் விடிய, விடிய, ஈரோடு
பஸ் ஸ்டாண் டில், பஸ் இல்லாமல் பரிதவித்தனர்.
மாணவர்கள் "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு எளிது : தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி
பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே,
தாமதம் இன்றி, உடனுக்குடன், "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய,
கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
TRB PG TAMIL/TNPSC தொல்காப்பியம் 1
தொல்காப்பியம்
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
ரகசியமாக நடத்தப்படுகிறதா கோடை பயிற்சி முகாம்?
தமிழக அரசின் சார்பில், ஆண்டுதோறும்
நடத்தப்படும், சிறுவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம், 26ம் தேதி
துவங்கி உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா?
தனியார்
பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடத்திட, அவர்களுக்கு, நுழைவுத் தேர்வு
நடத்தக்கூடாது. மீறி, நுழைவுத் தேர்வு நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளிகள்
மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம்
தெரிவித்து உள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில்
(ஆர்.டி.இ.,), பள்ளிகளுக்கான விதிமுறைகள் குறித்து, பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அடுத்த மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த திட்டம் : தமிழக அரசு பரிசீலனை
தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில்
இயங்குவதால், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு
தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக
மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் அதிகபட்சம் 10 மணி நேரம்
வரையும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது.
கலை, அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்
தமிழ்நாட்டில்
பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக
காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில்
சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது.
10, 12-வது வகுப்பு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான ஆலோசனை நிகழ்ச்சி: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
10-வது மற்றும் 12-வது வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு அவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கு ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு
மாவட்டத்திலும் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.