1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
வங்க கடலில் மீண்டும் காற்று அழுத்த தாழ்வு நிலை
''வங்க கடலில், மீண்டும் காற்று அழுத்த
தாழ்வு நிலை உருவாவதால், இந்த வார இறுதியில், சென்னை உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில், கனமழை பெய்யும்,'' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
CPS திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி
மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறுதலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 1.1.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தபால்காரர், மெயில்கார்டு பணிக்கான தேர்வு:இணையதளத்தில் அனுமதிச்சீட்டு வெளியீடு
தபால்காரர் (போஸ்ட்மென்), மெயில் கார்டு தேர்வுக்கான அனுமதிச் சீட்டைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில் கடைமுக தீர்த்தவாரி: நவ.16-ல் உள்ளூர் விடுமுறை
மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு நவ.16-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது:
முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு அட்டவணை தயாரித்த பின்னும் முன்பதிவு செய்யும் முறை அமல்
ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது. இந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120–லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது.
'குரூப் - 2ஏ' தேர்வு: அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர்
விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் - 2ஏ பிரிவில், நேர்முகத் தேர்வு
அல்லாத பதவிகளில், காலியாகவுள்ள, 1,863 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து,
அக்., 12லும், பின், 84 கூடுதல் பணியிடங்களுக்கு, அக்., 20லும் அறிவிப்பு
வெளியானது. 'இத்தேர்வுக்கு, நவ., 11 வரை விண்ணப்பிக்கலாம்' என,
அறிவிக்கப்பட்டிருந்தது.
பி.எட்., பாடத்திட்டத்தில் குளறுபடி ஆசிரியர்கள், மாணவர்கள் புகார்
பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக,
ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
உத்தரவுப்படி, தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டில் இருந்து,
இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை, தமிழக
ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.
பள்ளியில் மாணவி;பக்கத்து வீட்டில் ஆசிரியை
ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருத்தி, கற்றல் குறைபாடுள்ள சிறுமிக்கு பாடம் நடத்துகிறாள். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில்,
ஐந்தாம் வகுப்பு படிப்பவள் காயத்ரி. இவளது வீட்டுக்கு அருகில், ப்ரியா என்ற
சிறுமி, பெற்றோருடன் வசிக்கிறாள்; கற்றலில் குறைபாடு உள்ளவள். மற்ற
மாணவியரை போல், கல்வி கற்க முடியாததால், வீட்டில் இருக்கிறாள்.
Flas News: இன்று (12/11) விடுமுறை 3 மாவட்டங்கள்
- சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- கனமழை பெய்வதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வடியாததாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாலும் இன்றும் விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Flash News: கனமழை - இன்று (11/11) விடுமுறை 5 மாவட்டங்கள்
- தருமபுரி, பள்ளிகள் மட்டும் விடுமுறை
- கிருஷ்ணகிரி, பள்ளிகள் மட்டும் விடுமுறை
- கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நீலகிரி, பள்ளிகள் மட்டும் விடுமுறை
சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு
செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில்,
கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அஞ்சல் துறை
அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.
தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைப்பது உறுதி:இம்மாதத்துக்குள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி
மாணவர்களுக்கும், இம்மாத இறுதிக்குள் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற
கல்வித்துறையின் அறிவிப்பால், பள்ளி நிர்வாகத்தினர்
நிம்மதியடைந்துள்ளனர்.
குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனம் நவ.16 முதல் கலந்தாய்வு
குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர்
16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.
10th Science | New Practical Manual 2015-16
PREPARED BY
BIOLOGY - M.G.RAYMOND, M.Sc.,B.Ed.
PHYSICAL SCIENCE – A.JOHNSON PRABHU, M.Sc.,B.Ed.
BIOLOGY - M.G.RAYMOND, M.Sc.,B.Ed.
PHYSICAL SCIENCE – A.JOHNSON PRABHU, M.Sc.,B.Ed.