மத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில்
செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல்
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க்,
தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு வரை
கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கையை ரத்து செய்யும் வகையில், கல்வி
உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
நடப்பு
ஆண்டு மாணவர்களுக்கே இன்னும் இலவச காலணிகள் முழுமையாக வழங்காத நிலையில்,
அடுத்த ஆண்டுக்கான செருப்பு பட்டியலை அனுப்பு மாறு, அரசு
உத்தரவிட்டுஉள்ளதால், ஆசிரியர்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.
மாநில
அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பார்லிமென்டில் டிச.,17ல் பாராட்டு விழா நடக்கிறது.பா.ஜ.,
எம்.பி., தருண் விஜய் முயற்சியால் மாநில அளவில் பள்ளி, கல்லுாரி
மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டி நடந்தது. நவ.,
1ல் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றம் சார்பில் தமிழக அளவில் போட்டிகள்
மதுரையில் நடத்தப்பட்டன.
பிளஸ்
2 பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 4 வரை
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுத்
தேர்வுத்துறை இயக்குனர், பொறுப்பு, வசுந்தராதேவி வெளியிட்ட
செய்திக்குறிப்பில், 'மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும்
தனித்தேர்வர்கள், நவ., 27 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
தமிழக
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 90 ஆயிரம் இடங்கள் காலியாகி, இன்ஜி.,
படிப்புக்கு மவுசு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு
ஏராளமான இன்ஜி., மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் நிலைமை மாறி
உள்ளது. இதன் மூலம், வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும்
பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
முன்வைத்த உலகப் பிரபலமான, 'பொது சார்பியல் கொள்கை', இந்த வாரம்
நுாற்றாண்டு காண்கிறது. நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய இதே நவம்பர் இறுதி
வாரத்தில் ஒரு நாள், ஐரோப்பாவே போரின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில்,
இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தன், பொது சார்பியல் கொள்கையை
விளக்கும் அந்த சமன்பாட்டை எழுதினார்.
அல்வாவுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் திருநெல்வேலி தான் என்று, உலக அரங்கில்
உரக்கச் சொல்லியவர். 13 வயதிற்குள், 5 உலக சாதனைகள், 12 சர்வதேச கணினிச்
சான்றிதழ்கள் பெற்றவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்
அவர்களின் பாராட்டை, தன் 3 வயதிலேயே பெற்றவர். தன் வீடு முழுவதையும்
பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களால்
நிறைத்து இருப்பவர்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய்
நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல்காஸ் சிலிண்டர்
வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம்,
நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ்,
வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான
மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12
சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல்
போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோநிர்வாகிகள், தலைமைச்
செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து,
மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு
பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ,
கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.
தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு
பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு
செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு
பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது
(RTI-பதில்).
பகுதி நேர பயிற்றுநர்கள் நவம்பர் 2015 மாதத்தில் குறைவாக பணி செய்த நாட்களை டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2015 மாதத்தில் ஈடு செய்ய வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு பின்னர் கனமழை பெய்தது. இதன் காரணமாக
பள்ளிக்கூடங்களுக்கு 19 நாட்கள் தொடர்ந்து விடுமுறைவிடப்பட்டது. குறிப்பாக
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால்
விடுமுறைவிடப்பட்டது. மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் சில
நாட்கள் விடுமுறைவிடப்பட்டது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி
நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளது.
அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து,
அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை
வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12
வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள்
திறக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர்
எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல்
விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.