Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக சட்டசபை தேர்தல் தேதியை முடிவு செய்ய தேர்தல் கமிஷனர்கள் சென்னை வருகை

         தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 20–ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், முகவரி மாறியவர்கள், திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.,1 கடைசி

         சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (AIPMT) மே1-ம், 2016ம் ஆண்டு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
 
 

மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய திட்டங்கள் வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

          பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது தான் அந்தசெய்தி ஆகும்.


இன்று சூரியன் மிக விரைவாக மறைந்துவிடுமாம்... ஏன் தெரியுமா?

         இந்த ஆண்டின் மிகக் குறுகிய பகல் பொழுதைக் கொண்ட டிசம்பர் 22ம் தேதி அதாவது இன்றைய தினம், மாலையில் சூரியன் மிக விரைவாகவே அஸ்தமனம் ஆகிவிடும்.உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது, பகல் - இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர்.


பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ காமராஜர் பெயரில் புதிய செயலி: ஜி.கே.வாசன் இன்று அறிமுகம்

         தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக காமராஜர் மின் ஆளுகைச் செயலி (இ-காமராஜர் ஆப்) என்கிற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-


கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பிஎஸ்என்எல் ப்ரீபெய்டுக்கு சலுகை

        கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


CPS: இன்று -ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் எதிர்கால வாழ்வை ஒழித்து கட்டிய நாள்...நம் ஓய்வூதிய உரிமையை இழந்த நாள்!!!

               ICF ல் கடந்த ஆகஸ்டு 2014 அன்று ஓய்வு பெற்ற திரு.நடராஜன் என்பவர் NPS திட்டத்தில் பெரும் ஓய்வூதியம் வெறும் ரூ. 820/- மட்டுமே. ஆனால் இதுவே இவர் பழைய பென்ஷன் திட்டத்தில் ஓய்வுபெற்றிருந்தால்இவரது ஓய்வூதியம் சுமார் ரூ 12500/- இது மேலும் DA மற்றும் ஊதியக்குழுபரிந்துரைகளின் அடிப்படையில் தொடர்ந்து உயரும் ஆனால் NPS திட்டத்தில் இது போ‌ன்ற எந்த ஒரு உயர்வுக்கும் வாய்ப்பு கிடையாது. சிந்தியுங்கள் தோழர்களே.


1.1.2011 பிறகு இதுவரை பெற்ற PP ரூ.750 அரசுக்கணக்கில் திரும்ப கட்ட வேண்டும்!


          P.P.Rs.750/- தனி ஊதியம் பதவி உயர்வு பணியில் ஊதியத்திற்கு பிறகு கழிக்கப்படும் என்பதற்கான தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் கரூர் DEEO - 1.1 11க்கு பிறகு திரும்பி செலுத்த ஆணை

Director's Proceedings

  1. 750 PP Regarding Important Proceeding by DEEO, Karur - Click Here

இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்...

          உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்

      பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்..

       தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை. இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு தேதி மாற்றம்..

TNPSC DEPARTMENTAL EXAM PREPONED:மீலாது நபி: துறைத் தேர்வுகள் நாளை நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

         மீலாது நபி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை நடைபெறவிருந்த அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் புதன்கிழமை (டிச. 23) நடக்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு 20 கி.மீ., தூரத்துக்குள் தேர்வு பணியை வழங்கணும்.

         தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர்புஷ்பராசு தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் புதிதாக வளர்ந்து வரும் விரும்பதகாத செயல்களில் இருந்து மாணவர்களை மீட்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நடமாடும் உளவியல் ஆலோசகரை அரசு நியமித்துள்ளது.


அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள்.

       அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி

         அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.


அகரம் ஃ​ ​ பவுண்டேஷனின் "விதை" மற்றும் "தை" திட்டங்கள்!


      அகரம் 
​ ​
பவுண்டேஷன் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக சென்னை-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். 2010-இல் தொடங்கப்பட்ட
"விதைத் திட்ட"த்தின் மூலம் இதுவரை சுமார்
​​
1300
மாணவர்களின் கல்லூரிக் கனவை நிஜமாக்கி இருக்கிறோம். 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
​​
"தைத் திட்ட"த்தின்
மூலம்,  பள்ளிக் கல்வி இடைநின்ற மாணவர்களுக்காக திறன் வளர்ப்புப் பயிற்சியை வழங்கிவருகிறோம். 


School Level Painting Competiton

Income Tax Slabs for Financial Year (FY) 2015-16

FY 2015-16 tax rate applies to income earned between 1st April 2015 and 31st March 2016. Income Tax rates for individuals are same for FY 2015-16 and FY 2014-15.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)

        நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி  டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,). எந்தெந்த பள்ளிகள்? மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு, மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) ஆசிரியர் தகுதி தேர்வானது (சி..டி.இ.டி.) நடத்தப்படுகிறது. 
 

80 Higher Secondary HM Promotion Order


        01.01.2015 நிலவரப்படி 2015/16 ல் காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமைப்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு1 முதல் 530 வரை உள்ள நபர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர்களாக ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
 

மத்திய அரசு அலுவலகங்களுக்கு 24-ல் மிலாடி நபி விடுமுறை

          மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 24-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு பணியாளர்கள் நல்வாழ்வு ஒருங்கிணைப்புக் குழு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையை தமிழக அரசு 23-ம் தேதிக்குப் பதிலாக 24-ம் தேதி அறிவித்துள்ளது. 
 

10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சிபெற 13 லட்சம் சிறப்பு கையேடுகள்: அச்சடிக்கும் பணி மும்முரம்

      வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடு, உடமைகளை இழந்த மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

NMMS Exam மாணவர்கள் - அதிக அளவில் பங்கேற்ப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் - இயக்குநர்

       அதேஇ - NMMS தேர்வு - மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்ப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்

ஈட்டிய விடுப்பு குறைக்கப்படவில்லை என்பதற்கான அரசுக் கடிதம்

        மருத்துவ விடுப்பிற்கும், மகப்பேறு விடுப்பிற்கும், மருத்துவ சான்றின் பேரில் ஊதியமில்லா விடுப்பிற்கும் ஈடாக அமைச்சு பணியாளர்களுக்கு பணியில் ஈட்டிய விடுப்பு குறைக்கப்படவில்லை என்பதற்கான அரசுக் கடிதம்.

மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள்

       கோயம்புத்தூரில் மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகோப்பைகளும். சான்றிதழ்களும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அறிவிக்க சொல்கிறார் கருணாநிதி!

      இந்த ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அரசு அறிவிப்பதே முறை என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive