வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண்
(பான்) அட்டையைப் பயன் படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல்
செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை
வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர்.
1. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உடனே உங்கள் ஹால் டிக்கெட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இது கடைசி நேர பரபரப்பு மற்றும் பதட்டத்தை குறைக்கும்.
2. தேர்வுக்கு நீல நிற அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று
பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள்
மூலம் வழங்கப்பட உள்ளது.
மதுரையில் பல்கலைகளின் தொலைநிலைத் தேர்வுகள்
பள்ளி நாட்களில் நடத்தப்படுவதால், வழக்கமான வகுப்புகள் நடத்துவதில் சிரமம்
ஏற்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீண்ட
நாட்களாக நிலுவையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு
ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழுக்களை அமைக்க அரசு
உத்தரவு
பிரதமர் மோடி அறிவித்த, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு
திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளிடம், மத்திய அரசு உதவி கோரியுள்ளது.
அரசுத் தேர்வுத்துறை தேர்வு மையங்களில் துறை அலுவலர்கள் நியமிப்பதில், அரசு
உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதில் வஞ்சனை செய்து வருகிறது. இனி
வரும் காலங்களில் துறை அலுவலர்களாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை
நியமிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10ம் வகுப்பு மற்றும் 12ம்
வகுப்புக்கான, தற்காலிக தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ
படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை முன்னதாகவே இணைய தளங்களில்
வெளியிடப்படுவது வழக்கம்.
சென்னை ஐ.ஐ.டி., சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவர்களுக்கான,
தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் குறித்த, மூன்று நாள் பயிற்சி
வகுப்பு நடத்தப்படுகிறது. ஐ.ஐ.டி., வளாகத்தில், இம்மாதம் 14 முதல், 16ம்
தேதி வரை, தமிழ், ஆங்கிலத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், முறைகேட்டை தடுக்க, விடைத்தாள் கட்டுகள்
அடங்கிய உறையில், தேர்வர் முன், 'சீல்' வைக்கவும், இரு தேர்வர்களின்
கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு
செய்துள்ளது.
மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு
ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம்
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார்.
கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்து, இரண்டு ஆண்டுகளாகியும், முடிவை வெளியிடாததால், அதிருப்தி அடைந்தோர், கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமென்ட் விற்கப்படும் 'அம்மா சிமென்ட்' திட்டம் திங்கள்கிழமை திருச்சியில் தொடங்கப்பட்டது.
சந்தாதாரர்கள் வீடு வாங்க உதவுவதற்கு வருங்கால
வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டம் வரையறை
செய்ய நிபுணர் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு
நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) 5 கோடிக்கு அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை;
எட்டு வடிவ நடைப்பயிற்சி :
ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு;
ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 4,000 கோடி ரூபாய்;
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு, 1,465 கோடி ரூபாய் கடன்
நிலுவைத் தொகை என, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் போக்குவரத்து
கழகங்கள் தவிக்கின்றன.கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, பஸ்
கட்டணத்தை உயர்த்தாமல் என்ன வழியை பின்பற்றுவது என்பது தெரியாமல், அரசுக்கு
கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைவது என்றால் அலாதி
பிரியம். தற்போதைய நவீன காலத்தில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம்
தான் பாடமே எடுக்கப்படுகிறது. தற்போது குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வு
விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குழந்தைகளுக்கு படம் வரையவும்,
வண்ணங்களை பிரித்தறிந்து கொள்ளவும் ஓவியப் புத்தகங்கள் வாங்கிக்
கொடுப்போம்.
தற்போது 2014-2015 கல்வியாண்டில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் மட்டும் ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது 1 மற்றும் 2 ஆம் வகுப்புகள் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும்.
அனைவருக்கும் கல்வி இயக்க தொடர் பயிற்சியால்,
தொடக்க பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் கடந்த 2000-த்தில் ஒன்று முதல் எட்டாம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி தரத்தினை மேம்படுத்த தொடங்கப்பட்டது.
வேலுார்:''பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆரம்ப
கட்டத்திலேயே, நோய்களை கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம்,
விரைவில், செயல்படுத்தப்பட உள்ளது,'' என, மத்திய அரசின் சுகாதாரத்துறை
சிறப்பு பிரதிநிதி செண்பகவல்லி கூறினார்.
ஆசிரியர் பணி நியமனத்தில், தமிழ் வழிக்கல்வி என்பதற்கான சான்று அளிக்குமாறு கேட்கக்கூடாது என, உயர்கல்வித் துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்று வெளியிட்ட
அறிக்கை: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர் மற்றும்
ஆசிரியர்கள் ஆகியோர் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதியான நாளுக்கு முந்தைய
தினம் ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்
என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் தொகுப்பு (மெயின் சீட்) பக்கங்களை
குறைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 40
முதல் 56 பக்கங்களை கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது.
வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும்
நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 2014-15ம் கல்வியாண்டில்
மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவீடு செய்யும் வகையில் அரசு, நகராட்சி,
நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இதனை வாக்கு சாவடி அமைவிடம், மண்டல அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் பொது
மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை
அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து
வந்தது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வழியில் அரசு ஊழியர்களும் தயார்:விரைவில் 'ஸ்டிரைக்' அறிவிப்பு? தமிழக அரசுக்கு அடுத்த சவால். ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் மூலம்
அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என, முயற்சித்த அரசுத் துறை ஊழியர் சங்கங்கள்,
விரைவில், வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளன.
புதிதாக வாங்கும்
செல்
போன்களுக்கு
இன்ஷூரன்ஸ்
எடுக்கலாம்.
ஒரு
செல்போனுக்கு
அதிக
பட்சம்
3வருடங்கள்
வரை
இன்ஷூரன்ஸ்
கிடைக்கும்.
அதற்கு
மேல்
இன்ஷூரன்ஸை
புதுப்பிக்கும்
போது
இன்ஷூரன்ஸ்
கிடைப்பதில்
சிக்கல்
வரும்.
செல்
போனின்
மதிப்பில்
2-லிருந்து
3 சதவிகிதம்
தான்
பிரீமியம்
இருக்கும்.
நாற்பது வயதில்
நாய்க்குணம்
என்பது
சென்ற
தலைமுறைக்கு
வேண்டுமானால்
பொருந்தி
இருக்கலாம்,
ஆனால்
இந்த
தலைமுறையில்
பெரும்பாலோனோர்க்கு
அது
பொருந்துவது
இல்லை.
நாற்பது
வயதில்
தான்
இப்போதெல்லாம்
ஒரு
மனிதன்
பக்குவப்படுகிறான்
அல்லது சூழலால்
பக்குவப்படுத்தப்
படுகிறான்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய அரையாண்டு தேர்வில், தமிழ்
பாடத்திலேயே 10 முதல் 20 மாணவர்கள் வரை, தேர்ச்சி பெறாதது, ஆசிரியர்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; நுாறு சதவீத இலக்கை எட்டுவதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும் திறன் மிகுந்த ஆசிரியர்களை
உருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை
மத்திய அரசு துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு, 12வது ஐந்தாண்டு
திட்டத்தில், 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடக்கவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான கேள்வித்தாள் கோவை வந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் அரையாண்டுத் தேர்வில்
குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடித்
தேர்வு வருகிற 5-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் தொடங்கி நடைபெற
இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.