தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஊழியர் பற்றாக்குறையால் சான்றிதழ் சரிபார்ப்பு பணி பாதிப்பு
தேர்வுத்துறை இயக்குனரகத்தில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், ஆன்-லைன் மூலம் பணிகள் நடக்கும்போது, இப்பணி சீராகும் என்கின்றனர். அதுவரை, இப்பிரச்னையை கையாள வழி என்ன என்ற கேள்வி தொடர்கிறது.
பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பல்வேறு துறைகளில், தேர்வுத்துறை மிகவும் முக்கியமானது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் உட்பட, ஆண்டுக்கு, 40 தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை தரும் பெரும் பணியை, இத்துறை செய்து வருகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களை திருத்த நேரில் வர வேண்டாம்
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு யாரும் நேரில் வர வேண்டியதில்லை; தேர்வு நாளன்று அவர்கள் குறிப்பிடும் விருப்பப் பாடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக அக்டோபர் 14-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 15ல் துவங்குகிறது - அட்டவனை வெளியீட
15.10.12 மொழி முதல் தாள்
16.10.12 மொழி இரண்டாம் தாள்
18.10.12 ஆங்கிலம் முதல் தாள்
19.10.12 ஆங்கிலம் இரண்டாம் தாள்
22.10.12 கணிதம்
25.10.12 அறிவியல்
26.10.12 சமூக அறிவியல்
டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது. பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.
N.S.S - மாணவர்களை வேலை வாங்கக் கூடாது ஆசிரியர்களுக்கு உத்தரவு
என்.எஸ்.எஸ்., முகாம்களால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு இடையூறு கூடாது, என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் இளைஞர் விவகாரம், விளையாட்டு துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்படுத்தப்படுகிறது.
பள்ளி பஸ் உதவியாளருக்கும் "லைசென்ஸ்': அறிமுகமாகிறது புதிய நடைமுறை
பள்ளி மாணவ - மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டிரைவர்கள் மட்டுமின்றி, பள்ளி பஸ்சின் உதவியாளர்களுக்கும், "லைசென்ஸ்' கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
ஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறை இழக்கும் ஆசிரியர்கள்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், மங்களூர் வட்டாரத்தில், தென் மாவட்டங்களான, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்து, நாளை முதல், 30ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுக்கு பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் நண்பன் திட்டத்தில், பள்ளிகள் விபரம் பதிவு செய்யப்படுகின்றன. சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும். பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகள்,
இணையதளத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி மின்னஞ்சல் முகவரி அளிக்கப்படும்.
இணையதளத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி மின்னஞ்சல் முகவரி அளிக்கப்படும்.
ஆசிரியர் நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
ஜூலை தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ல் துணைத் தேர்வை நடத்துவது என்றும், மேலும், தேர்வு நேரத்தை ஒன்றரை மணியிலிருந்து 3 மணி நேரமாக நீட்டிப்பது என்றும் கல்வித் துறை முடிவு செய்தது.
ஏற்கனவே நடந்த, டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வில், 382 பேர், மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளனர்.
முதல்தாள் தேர்வு:
.ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-75
.4 முதல், 9 வரை பெற்றவர்கள்-23
.3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-52
இரண்டாம் தாள் தேர்வு:
.ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-116
.4 முதல், 9 வரை பெற்றவர்கள்-40
.3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-76.
High school&Hr.Sec Schools Re-Open 3.10.12 - CEO, Vellore
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு 3.10.12 அன்று திறக்கும். - முதன்மை கல்வி அலுவலர். வேலூர்
4000 - பேர் நேற்று 20-09-2012 பணிக்கு வரவில்லை. ஏன் பந்த் அன்று பணிக்கு வரவில்லை என்று விளக்கம் கேட்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் நேற்று20-09-2012 பணிக்கு வராதவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கணக்கு எடுத்தது. இதில் பணியாற்றும் 1 லட்சத்து 36 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 24 முதல் விண்ணப்ப விநியோகம்- CEO - அலுவலகங்களில் கிடைக்கும் (விலை -50)
ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத விரும்பும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
TNTET - டி.இ.டி, தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு - புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு(TN TET) அக்டோபர் 14 ந் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-க்கு பதிலாக அக்டோபர் 14ந் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக இந்த வருடம் முடித்தவர்களையும் சேர்த்து தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர்த் தேர்வு வாரிய தலைவர் இவ்வாறு பதிலளித்துள்ளார் என ஆசிரியர் தேர்வு வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
CCE - மார்க்கை கிரேடாக மாற்ற - Thanks to Mr.Ganesan, Teacher
சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)
தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation முறையை பின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்.