Quarterly Exam Questions 2024
Latest Updates
ஆளுமைத் திறன் வகுப்பறையை இனிப்பாக்க ஒரு புத்தகம்!
படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த, விருப்பமான ஒரு பெயர், ஆயிஷா
இரா.நடராசன். இவரின் ஆயிஷா எனும் குறுநாவல், மிகவும் புகழ்பெற்றது.
அறிவியலை நேசிக்கும் சின்னப் பெண் பற்றிய உருக்கமான கதை. அதனாலேயே, இவரின்
பெயரின் முன்னால் ஆயிஷா ஒட்டிக்கொண்டாள்.
தொடர்ந்து சிறுவர்களுக்கான நூல்களை எழுதிவரும் ஆயிஷா நடராசனின் புதிய
நூலான, 'இது யாருடைய வகுப்பறை?’ கல்வி பற்றி ஆழமான கருத்துகளை
முன்வைக்கிறது.
முதல் மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்த அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு சரி: ஐகோர்ட்டு உத்தரவு
திருவாரூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலக உதவியாளராக வெங்கன்
பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இருக்கும்போதே,
அவருக்கு தெரியாமல் 2–ம் திருமணம் செய்துகொண்டார். அதுபற்றி தெரிய
வந்ததும், துறை அதிகாரியிடம் முதல் மனைவி புகார் கொடுத்தார். புகாரின்
முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, நன்னடத்தை விதிகளின்படி, வெங்கனுக்கு
போக்குவரத்துத்துறை செயலாளர் கட்டாய ஓய்வு அளித்து உத்தாவிட்டார்.
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு? ஏப்ரல் முதல், 167 ரூபாய் கூலி
தேர்தல் எதிரொலியாக, ஏப்ரல், 1ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்
தில், கூலித்தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்த, மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது; மேலும், 100 நாள் வேலையை, 150
நாட்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், தேசிய ஊரக வேலை
உறுதி திட்டம், 2005ம் ஆண்டு, ஆக., 25ல் அமல்படுத்தப்பட்டது. இது, விவசாய
பணிகள் இல்லாத காலத்தில், பொதுப் பணிகள் மேற்கொள்ளும் வகையில், கிராம
மக்களுக்கு, 100 நாட்கள், வேலை அளிக்கும் திட்டமாக கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம், நல்ல வரவேற்பு பெற்றதால், 2009, அக்டோபரில், "மகாத்மா காந்தி
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லோக்சபா
தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஏப்ரல், 1ம் தேதி முதல், இத்திட்டத்தில்,
நாள் கூலித் தொகை, 148 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாக உயர்த்தி வழங்க,
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 100 நாட்கள் வேலை என்பதை, 150
நாட்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
3rd Term CCE Exam Time Table Now Published.
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது I ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும் (Link Error Rectified)
12th Physics Study Material Collection
Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.
- Physics Unit Test Questions - 5 Set - Tamil Medium
- Physics 2nd Volume Full Study Material - Tamil Medium
RTI - Letter
த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்
பிளஸ் 2 முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நாளை தொடக்கம்- அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் தலைமையில் பறக்கும் படைகள்.
தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான முக்கிய பிளஸ் 2 பாட தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகின்றன.
அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா.
அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என,பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள,32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர்.
மாணவர்கள் இலவச சீருடை திட்டத்தில் சிக்கல் : நிதி ஒதுக்காததால் நூல் தயாரிப்புநிறுத்தம்.
தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கீடுசெய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்திநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் எதிரொலி சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம்.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக, சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கான 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன
சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் "அவுட்' : இன்டர்நெட்டில் வெளியானதாக பரபரப்பு.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான, மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதாக,"பகீர்' தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளிகளை பசுமைப்படுத்த மரக்கன்றுகள் நட உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
TET NEW METHOD WEIGHTAGE CALCULATOR
என் பெயர் கார்த்திக் ஆசிரியர் தகுதி தேர்வில் weightage பார்ப்பதற்கு புதிய முறையில் Ms Excell format ல் தயார் செய்துள்ளேன்.இதன் சிறப்பு
ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை கொடுத்தால் போதும் percentage weightage தானாகவே வரும்
50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
TNPSC Group 4 Expected Cut off Full Detail
குரூப் -4 தேர்வு எழுதியவர்களின்
மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம்
வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை
உதவியாளர்களுக்கு மட்டும் 3469 உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள்
இருந்தால் பணி கிடைத்துவிடும் என சிலர் தவறாக
எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள்.
கடினமான பணி குழந்தைகளுடன் பணிபுரிவது தான்!!!
சுண்டல் விற்பது முதல் சடலம் எரிப்பது வரை 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலைகள், ஆனால் கடினமான பணி குழந்தைகளுடன் பணிபுரிவது தான்!!!
TET Court Case Detail (07.03.2011)
சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு
நல்ல நினைவாற்றலுக்கு என்ன தேவை?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின்
காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே
உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். காரணம்,
மாதக்கணக்கில் படித்தவைகளும்கூட நொடிப்பொழுதில் மறந்து விடுவது போன்ற
பிரச்சினைகளுடன் அநேக பெற்றோர் தங்கள் குழந்தைகளை என்னிடம் அழைத்து
வருவதுண்டு. ‘டாக்டர், இவன் படித்ததை எல்லாம் மறந்துபோகிறான். மறந்து
போகாமல் இருக்க மாத்திரை கொடுங்கள்” என்பார்கள். அதற்கெல்லாம் மாத்திரை
இல்லை என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, படிக்கும் முறைகளை
சொல்லிக்கொடுப்பேன். அப்போதும் பெற்றோர்கள், டாக்டரிடம் வந்தும் மருந்து,
மாத்திரை இல்லாமல் வெறும் கையோடு போகிறோமே என்ற ஆதங்கத்தோடுதான்
செல்வார்கள்.
2 தேர்வெழுதுவோருக்கான ஒரு புதிய சலுகை!
சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு நடைமுறை சீர்திருத்தங்களின்
வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில் தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை அறிமுகப்படுத்தவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய
அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன்
சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய
அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இயக்குனர் கடிதம்
மேல்நிலை தேர்வுபணி-2014 ல் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைபூதியம் /சில்லறை செலவினம் தலத்திலேயே வழங்கவேண்டும் -அரசு தேர்வுகள் இணை இயக்குனர் கடிதம்
நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி, 10% அகவிலைப்படி வழங்குவதிலும் தாமதம்
தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு
ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயிலிருந்து, அரசு ஊழியர்
சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில
அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி
அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில
அரசு, அறிவிக்கும்.