COMMUNITY WISE PASS % OF PAPER II 5% RELAXATION CANDIDATES (82-89)
COMMUNITY PASS %
BC 13371 ( 53.09%)
BCM 481 (1.91%)
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும்
மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம்
இதில் இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய முடியாது - TATA
KIPSON
நாட்டின் 17 மாநிலங்களில் சேர்த்து, மொத்தமாக 24 மத்தியப் பல்கலைகள் திறக்கப்படவுள்ளன. பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி,
புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பதற்கான ஒப்புதலை வழங்கியது.
இன்று மாலை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தொடர்பு கொண்டு
2013-14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வின் நிலை பற்றி கேட்டறிந்தார்.
Model Questions.
- NMMS - Mat & Sat - Question with Tentative Key Answer - Click Here
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த
பாகுபாடு? பதவி உயர்வு வாய்ப்பும் பறிபோகும் நிலை... அனைத்து ஆசிரியர்
சங்கங்களும் குரல் கொடுக்குமா...?
தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகள் மே 2014 ஆறிவிக்கை
வெளியீடு I விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 I தேர்வு நடைபெறும் தேதி :
24.05.2014 முதல் 31.05.2014
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர்
பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் நியமனம் குறித்து, பல்கலைக்கழக மானியக் குழுவான
யு.ஜி.சி., ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
63 பள்ளிகளில், 192 தலைமை ஆசிரியர்கள் உள்ளனர்.
அளவிற்கு அதிகமாக தலைமை ஆசிரியர்கள் இருப்பதற்கு மாணவ அமைப்புகள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
2013-14ம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற வழக்குகளால் தடைப்பட்டது. அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பதவி உயர்வு மற்றும் பணி நியமனத்திற்கு இரட்டைப்பட்டம் செல்லாது என தீர்ப்பளித்து எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிநியமன பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள்.
மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள TRB வழக்குகளை மார்ச் 3 முதல் நீதியரசர்
கே.ரவிச்சந்திர பாபு அவர்களும் ,முதுகலை ஆசிரியர் தமிழ் அப்பீல் வழக்குகளை
நீதியரசர்கள் வி.இராமசுப்ரமணியம்,வி.எம். வேலுமணி அடங்கிய அமர்வும்
விசாரிக்கக்கூடும் என தெரியவருகின்றது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG /TET I/TET II உள்ளிட்ட ஏராளமான
வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதன் காரணமாக தமிழ் தவிர்த்த பிற PG
பாடங்களுக்கான பணி நியமனம் தள்ளிப்போனது இந்நிலையில் மார்ச் 3 முதல்
இவ்வழக்குகளை நீதியரசர் எஸ். நாகமுத்து விசாரிப்பார் ..TRB வழக்குகள்
பலவற்ரை விரைந்து விசாரித்து தீர்ப்பு அளித்துள்ள நீதியரசர் தற்போது
நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளையும் விரந்து விசாரித்து தீர்ப்பளிப்பார்
என தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம்
நடத்தினாலே ஊதிய உயர்வுக்குத் தான் என்ற ஒரு தவறான மனநிலையை மக்கள்
மனநிலையில் பதிய வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10
சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு
முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன்
சிங் தலைமையில் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்:
24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பிளஸ்2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து
விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், கல்வித்துறை சார்பில்,
மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும்,
கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி
வருகின்றனர்.
"தமிழகத்திற்கு, ஒரே கட்டமாக, தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது,'' என, தமிழக தலைமைதேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் சூசகமாக தெரிவித்தார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பெண் ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன்
வழங்கியுள்ள சில சலுகைகள் பெண் போலீசாருக்கும் வழங்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மார்ச் 3 ல் பிளஸ் 2தேர்வுகள் துவங்குகின்றன. பள்ளிப் படிப்பின் நிறைவாக
நடக்கும் இந்த பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் "வாழ்க்கை
பாதையை' தீர்மானிக்கிறது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று
துவங்குகிறது.தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட
மாநிலங்கள் அடங்கிய,
சென்னை மண்டலத்தில், 1,256 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 'சைல்ட் லைன்' அமைப்பின் போன் 1098 க்கு, தினமும் வரும்
அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் ஆசிரியர்களைப்
பற்றிய குற்றச்சாட்டுகள் அதிகம் தெரிவிக்கப்படுகின்றன.
மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை
புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), முதல் தாளில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களின் விவரத்தை,
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில்
ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய
ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை
நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள்
சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்
தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல்
செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில்
மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெட்
தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான
விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை
நடத்துவது மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) இந்தோர் மையத்தில் 8இடங்களை
காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள்
எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம்
அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை
அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இம்முடிவால்
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.
மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும்
ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில்
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட
பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
தொடக்க வேளாண் கூட்டுறவுசங்க ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியுதவிபெறாத 5 ஆண்டுகள் லாபத்தில் இயங்கும்
சங்கங்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இந்த ஊதிய
உயர்வு
2013 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.