CPS
எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல்
செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம்,
திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் குறுந்தகவலாக(SMS) தற்போது உலவி வருகிறது. அதில் A மற்றும் B பிரிவினருக்கு ரூபாய். 1500 என்றும், C மற்றும் D பிரிவினருக்கு ரூபாய்.3500 என்றும் அத்தகவல் தெரிவிக்கிறது.
பாலின விழிப்புணர்வு மற்றும் பெண்களின் மீதான நன்மதிப்பு உள்ளிட்ட அம்சங்கள், விரைவில் பாடத்திட்டத்தில் சேரவுள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார். தேசியப் பாடத்திட்டத்தில் இந்த அம்சங்களை சேர்ப்பது குறித்து விரைவில் என்.சி.ஆர்.டி., யிடம் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறைந்தபட்ச இடவசதி இல்லாதது போன்ற காரணங்களால் அங்கீகாரம் இல்லாமல் உள்ள 1,000 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 10, +2ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரையாண்டு வினாத்தாள் வெளியான சம்பவம் குறித்து அதிகாரிகள்
முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று நடக்கவிருந்த
அரையாண்டுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
"கணிதம், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கண்டு, மாணவர்கள் பயப்பட வேண்டாம். ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்,&'&' என மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி 19வது ஆண்டு விழாவில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை எஸ்.முத்து பேசினார்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு
இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை
தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசின்
சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில், உயர் தரத்துடன் உயர் கல்வியை, குழந்தைகளுக்கு
அளிக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது
என்றும், உயர் கல்வி நிறுவனங்களில், பேராசிரியர் பணியிடங்கள், 30 சதவீதம்
பற்றாக்குறையாக உள்ளது என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ
கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி
உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
2013 மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க விரும்பும்
தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் ஜனவரி 7 முதல் 18 வரை விண்ணப்பிக்கலாம்
என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில், தமிழக அரசின் பல்வேறு
துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த,
டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய
திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசின்
பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர், மொபைல் போன்
கொண்டு வருவது தடை செய்யப்படுவதுடன், அடுத்த கல்வியாண்டிலிருந்து,
மாணவியருக்கு தனியாக பேருந்துகள் இயக்கப்படும்,' என, கல்வியமைச்சர்
தியாகராஜன் கூறினார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் புதிய 52 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் இன்னும் 2 நாட்களில் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த மென்பொருள் மூலமாக உங்கள் மொபைலின் ஹார்ட்வேர் பற்றி முழுமையாக
அறியலாம் மேலும் மற்ற ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்தை ஒப்பிட்டு
பார்க்கலாம்.
தமிழகத்தில் முப்பருவ பாடத் திட்டம், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு
முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தொடக்க மற்றும் உயர் தொடக்க
நிலை மாணவ மாணவியருக்கு எளிய அறிவியல் சோதனைகளும் பாட திட்டத்தில்
சேர்க்கப்பட்டுள்ளன.
காட்ராக்ட் (cataract) என்று
அழைக்கப்படும் கண் லென்சில் புரை ஏற்பட்டு பார்வையை மறைக்கும் கண்பார்வை
நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமலே மருந்து மூலம் குணப்படுத்த முடியும்
என்று ஆஸ்ட்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் சிலர் தங்கள் ஆய்வு முடிவை
வெளியிட்டுள்ளனர்.
பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும்
விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் கல்வி நிலையங்களைத் தொடங்கும் நேரத்தை
மாற்றுவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில்
தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு
வகுப்பிற்கு ஒத்துழைக்காத பிளஸ் 2 மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால்,
தேர்வு எழுத மறுத்து,முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.
"கல்விக் கடன் வழங்க, நியாயமற்ற அளவுகோலை வங்கி பின்பற்றக்கூடாது. இது கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.