Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரி செலுத்துவோருக்கு நிதி துறை புதிய சலுகை

         வருமான வரி கணக்கை, இணையதளம் மூலம், "இ-பைலிங்' செய்பவர்கள், தபால் மூலம், ஐ.டி.ஆர்.வி., படிவத்தை இனிமேல் அனுப்பத் தேவையில்லை. இதற்கான, அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. மாத சம்பளதாரர்கள், தங்களின் வருமான வரிக் கணக்கை, ஆண்டுக்கு ஒருமுறை, வருமான வரித்துறையிடம், நேரிலும், இணையதளம் மூலமும், தாக்கல் செய்து வருகின்றனர்.
 

ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் கட்டணம்: ரிசர்வ் வங்கி

 
           வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, விரைவில் அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

த.அ.உ. சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு

          "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ஏன் நிராகரிக்கவேண்டும்? செ.நடேசன், TNPTF முன்னாள் பொதுச்செயலாளர்

          ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும், இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’ நிறைவேற்றப்பட்டது.
.

18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

            ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை மாற்ற செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, நான்கில் இரண்டு கேள்விகளை நீக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. நீக்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கும் தலா ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டதால், இரண்டாம் தாளில் 2 ஆயிரத்து 436 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,932 ஆக உயர்ந்துள்ளது.

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி

          காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார். வேலூரில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்காக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்.
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்

            முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி, அந்தச் சட்டத்தினை 1994 ஆம் ஆண்டு அரசமைப்பு (76 ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், என்னையுமே சாரும்.

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

           ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும்.
 

ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

             புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று, அதிரடியாக வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

              டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரிகளை நியமிப்பதற்கான போட்டித் தேர்வின் இரண்டாவது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
 

பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வலியுறுத்தல்

           'பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி, பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென,' உயர்,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களையும் 'சென்டம்' பெற வைக்க தீவிரம்: பழைய மாணவர்களின் விடைத்தாள்களை வழங்கி பயிற்சி

 
             தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும், 100 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, கடந்த பொதுத்தேர்வில், 'சென்டம்' மதிப்பெண் பெற்றவர்களின் விடைத்தாள் வழங்கி, பயிற்சி அளிக்குமாறு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை

 
           இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல... நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி  உள்ளனர். கல்வித்துறை அளித்த கணக்குப்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 92 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்.
 

எஸ்.சி. எஸ்டி மாணவர்களின் உதவி தொகை குறைப்புக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

 
             கோவை அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் நிர்வாகங்கள் சங்க தலைவர் கே.பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: கோவை அண்ணா பல்கலை அங்கீகாரம் பெற்றுள்ள (இணைப்பு) எங்கள் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறோம்.
 

SG Asst's Low Pay Scale

 

          ஆறாவது ஊதியக்குழு அறிவிப்பு வந்தவுடன் PB:1: 5200-20200+GP2800 பார்த்து அதிர்ந்து போனோம்! காரணம் வாங்கிகொண்டு இருந்த சம்பளம் குறைந்து விட்டதை கணக்கிட்டு தான்!!

TET Paper 2 & 1 - Coaching Via Model Tests - Tentative Time Table Now Announced.


TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.

TET Unit Test Time Table

Unit Test 1        11.01.2014
Unit Test 2        18.01.2014
Unit Test 3        25.01.2014
Unit Test 4        01.02.2014
Unit Test 5        08.02.2014
Unit Test 6        15.02.2014
Unit Test 7        22.02.2014
Unit Test 8        01.03.2014
Unit Test 9        08.03.2014
Unit Test 10      15.03.2014

6 Full Syllabus Test நடைபெறும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

For More Details Contact Our Co-ordinator Mr. Kuppusamy, 
Cell No - 9952787972.
www.Ranitetpark.blogspot.in

TRB-TET:ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியீடு.


தாள்-1 க்கான தேர்வர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை.



        Mobile-ல் தங்களது மதிப்பெண்ணை காண இயலாது.எனவே, உங்களது மதிப்பெண்ணை உடனடியாக அறிய தங்களது தேர்வு எண்ணை Comment box-ல் குறிப்பிடவும் Online உள்ள நண்பர்கள் தங்களுக்கு உதவி செய்வார்கள்.மாற்றம் உள்ள நண்பர்கள் தங்களது பழைய மதிப்பெண்ணயும் புதிய மதிப்பெண்ணயும் பதிவு செய்யவும்.

10 பாட தேர்வு முடிவுகளில் மாற்றம்: பட்டியலை வெளியிட்டது டி.ஆர்.பி.,

     முதுகலை ஆசிரியர் தேர்வில், கணிதம், விலங்கியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்ற புதிய தேர்வர்கள், 17ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

 
         தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:

TET - SC/ST பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

          ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

தீர்ப்பு ஒத்திவைப்பு:
 
        ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.


TET தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி- சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை.


          ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும், எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

NMMS Application Upload Date Extended.

            தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) 2013 - தேர்வர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - கால நீட்டிப்பு குறித்து 

குரூப் 2 தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


               நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டில் நேர்காணல் இல்லாத 1,181 பணியிடங்களுக்கான குரூப் 2-A தேர்வு மே மாதம் 18-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

TRB PG ADNL LIST வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி பாடவாரியாக இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை.


          முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
 

பொதுத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் சிறப்பு போனஸ் அறிவிப்பு.


      தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2000/- தள்ளுபடி குறித்த விளக்கம் (Rebate under section 87A)

           ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு பிரிவு 80C / 80D சேமிப்பு போக நிகர தொகை ரூ.5லட்சத்திற்கு குறைவாக இருப்பின், கட்ட வேண்டிய வரியில் ரூ.2000/-ஐ கழித்து கட்டினால் போதுமானது. 

ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

      மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

நாட்டில் புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

         நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மொத்தமாக, அரசு கல்லூரிகளில் மட்டும் 22,500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.

TRB- TNTET 2013. வழக்குகள் (10.01.14) விசாரணை.

          ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் ) ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணை செய்யப்பட உள்ளன. 

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்

          ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive